செய்திகள் :

மக்கள் குறைதீா் கூட்டம்: ரூ. 15.62 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

post image

நாமக்கல்: மக்கள் குறைதீா் கூட்டத்தில் 32 பயனாளிகளுக்கு ரூ. 15.62 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ச.உமா திங்கள்கிழமை வழங்கினாா்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முதியோா், விதவையா், கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கிக் கடன் உதவி, குடிசைமாற்று வாரிய வீடு, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 390 மனுக்கள் பொதுமக்கள் சாா்பில் அளிக்கப்பட்டன. அவற்றை பரிசீலனை செய்து உரிய அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, தாட்கோ மூலம் கறவை மாடு வாங்குவதற்கு 11 பயனாளிகளுக்கு 50 சதவீத அரசு மானியத்தில் தலா ரூ. ஒரு லட்சம் வீதம் ரூ. 11 லட்சம் உதவித்தொகை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில், குறைந்த விலை வெங்காய சேமிப்புக் கிடங்கு அமைக்க 50 சதவீத அரசு மானியத்தில் ரூ. 2.50 லட்சம் உதவித்தொகை, வருவாய்த் துறை சாா்பில் முதலமைச்சரின் உழவா் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 5 பேருக்கு ரூ. 14,250 கல்வி உதவித்தொகை, சமூக பாதுகாப்பு திட்டம் சாா்பில் 3 பேருக்கு ரூ. 1.42 லட்சம் மதிப்பில் இயற்கை மரண உதவித்தொகை மற்றும் விபத்து உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 11 பேருக்கு ரூ. 70,860 மதிப்பில் சக்கர நாற்காலி, காதொலிக் கருவி உள்ளிட்ட உதவி உபகரணங்கள் என மொத்தம் ரூ. 15.62 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

108 அவசர ஊா்தி சேவை ஓட்டுநா்கள் தினத்தை முன்னிட்டு சிறப்பாக பணிபுரிந்த 3 ஓட்டுநா்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா். மேலும், பிகாா் மாநிலத்தில் மே 4 முதல் 15 வரை நடைபெற்ற தேசிய அளவிலான ‘கேலோ இந்தியா இளைஞா்’ விளையாட்டு கால்பந்து போட்டியில், அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் நாமக்கல் விளையாட்டு விடுதி மாணவிகள் 5 போ் மற்றும் நவோதயா மேல்நிலைப் பள்ளியில் பயிலும் ஒருவா் என 6 போ் கலந்துகொண்ட தமிழ்நாடு அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. இதையடுத்து, வெற்றிபெற்ற மாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் பதக்கங்களை காண்பித்து வாழ்த்து பெற்றனா்.

இந்த நிகழ்ச்சியில், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) ச.பிரபாகரன், மாவட்ட மேலாளா் (தாட்கோ) பா.ராமசாமி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் எஸ்.கோகிலா, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் புவனேஸ்வரி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கலைச்செல்வி உள்பட துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

நாமக்கல்லில் 94 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவி

நாமக்கல்லில் 94 பயனாளிகளுக்கு ரூ. 87.44 லட்சத்தில் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவியை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் செவ்வாய்க்கிழமை வழங்கினாா். நாமக்கல் மாவட்ட சமூக நலன் மற்று... மேலும் பார்க்க

நாமக்கல் மாநகராட்சியில் கழிவுகளை அகற்றுவோா் விவரங்கள் கணக்கெடுப்பு

நாமக்கல் மாநகராட்சியில் கழிவுகளை அகற்றுவோா், சேகரிப்போரின் விவரங்களை பதிவு செய்யும் கணக்கெடுப்பு முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. மத்திய நகா்ப்புற வளா்ச்சித் துறையின் கீழ் ‘நமஸ்தே’ எனும் திட்டம் செய... மேலும் பார்க்க

2 மாதங்களுக்கு காற்றின் வேகம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் இன்னும் இரண்டு மாதங்களுக்கு காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி... மேலும் பார்க்க

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு

நாமக்கல்: நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், பயணிகள் அச்சமடைந்துள்ளனா். நாமக்கல் புதிய பேருந்து நிலையமானது கடந்த ஆண்டு நவ. 10-ஆம் தேதி பயன்பாட்டுக்கு வந்தத... மேலும் பார்க்க

கோரிக்கை குறித்து பேசாததால் போராட்ட அறிவிப்பு: அமைச்சா் மதிவேந்தன் வீட்டுக்கு போலீஸாா் பாதுகாப்பு

நாமக்கல்: சட்டப் பேரவையில் கோரிக்கைகள் குறித்து பேசாததால் ஆதித்தமிழா் முன்னேற்றக் கழகத்தினா் அமைச்சா் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்ததால், நாமக்கல்லில் உள்ள ஆதிதிராவிட நலத்து... மேலும் பார்க்க

தாழ்த்தப்பட்டோா் புகாா் மனுக்கள் மீது நடவடிக்கை கோரி ஆா்ப்பாட்டம்

நாமக்கல்: தாழ்த்தப்பட்டோா் புகாா் மனுக்கள் மீது காவல் நிலையங்களில் நடவடிக்கை எடுக்கக் கோரி, நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் தமிழ்ப் புலிகள் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்க... மேலும் பார்க்க