ராஜேஷ்: "தேடல் உள்ள கலைஞர்... பெரும் வருத்தம்" - கமல்ஹாசன் இரங்கல்!
சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி
சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது என்று அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
சுதந்திரப் போராட்டத் தியாகிகளில் ஒருவரான வீர சாவர்க்கர் என அழைக்கப்படும் வினாயக் தாமோதர் சாவர்க்கரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், "இந்தியத் தாயின் உண்மையான மகன்" என்றும், வெல்ல முடியாத துணிச்சலின் சின்னம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் உலக அரங்கை எட்ட வேண்டும்: சுப்ரியா சுலே
அவரது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
கடுமையான துன்பங்களை எதிர்கொண்டபோதும் வீரர் வீர சாவர்க்கரின் அசைக்க முடியாத மனப்பான்மையும், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பும் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது என்று பிரதமர் கூறினார்.
இந்தியத் தாயின் உண்மையான மகனான வீர் சாவர்க்கருக்கு அவரது பிறந்தநாளில் அஞ்சலிகள். ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் எதிர்கொண்ட மிகக் கடுமையான பல கொடுமைகள் கூட தாய்நாட்டின் மீதான அவரது பக்தியை அசைக்க முடியவில்லை.
சுதந்திர இயக்கத்தில் அவரது அடங்காத துணிச்சல் மற்றும் போராட்டத்தின் வரலாறை நன்றியுள்ள தேசம் ஒருபோதும் மறக்காது.
வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் அவரது தியாகமும், நாட்டிற்கான அர்ப்பணிப்பும் தொடர்ந்து வழிகாட்டியாக இருக்கும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.