செய்திகள் :

இரண்டு நாட்கள் சரிவுக்குப் பிறகு மீண்ட இந்திய பங்குச் சந்தைகள்!

post image

மும்பை: இரண்டு நாட்கள் சரிவுக்குப் பிறகு, இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு உயர்ந்து வர்த்தகமானது.

ஆசிய சந்தைகளில் ஏற்பட்ட எழுச்சியை பிரதிபலிக்கும் வகையில் உள்ளூர் சந்தை உயர்ந்து முடிந்தன. இதனிடையில் அந்நிய நிதி வரத்தும் பங்குச் சந்தைகளை மீட்க உதவியது.

30 பங்குகளைக் கொண்ட பிஎஸ்இ சென்செக்ஸ் குறியீடு ஆரம்ப வர்த்தகத்தில் 504.57 புள்ளிகள் உயர்ந்து 81,816.89 ஆக இருந்தது. அதே வேளை நிஃப்டி 137.25 புள்ளிகள் உயர்ந்து 24,889.70 ஆக இருந்தது. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 320.70 புள்ளிகள் உயர்ந்து 81,633.02 புள்ளிகளாகவும், நிஃப்டி 81.15 புள்ளிகள் உயர்ந்து 24,833.60 புள்ளிகளில் நிலைபெற்றது.

சென்செக்ஸில் இன்ஃபோசிஸ், டாடா ஸ்டீல், டெக் மஹிந்திரா, எச்.சி.எல் டெக், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், சன் பார்மா, டாடா மோட்டார்ஸ் மற்றும் எச்.டி.எஃப்.சி வங்கி ஆகிய பங்குகள் உயர்ந்த நிலையில் அல்ட்ராடெக் சிமென்ட், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் நெஸ்லே ஆகியவை சரிந்து முடிந்தன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இறக்குமதிகள் மீதான பரஸ்பர வரிகளை உயர்த்துவதைத் தடுக்கும் அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்றத்தின் தீர்ப்பை முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.

அவசரகால அதிகாரங்களின் கீழ் பெரும் வரிகளை விதிக்கும் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முயற்சிக்கு அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், வெளிநாட்டு வர்த்தகத்தை காங்கிரஸ் மட்டுமே ஒழுங்குபடுத்த முடியும் என்று சர்வதேச வர்த்தக நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

ஆசிய சந்தைகளில் தென் கொரியாவின் கோஸ்பி, ஜப்பானின் நிக்கி 225 குறியீடு, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் ஆகியவை உயரந்த நிலையில் ,நேற்று (புதன்கிழமை) அமெரிக்க சந்தைகள் சரிவுடன் முடிந்தன.

அந்நிய மதலீட்டாளர்கள் நேற்று ரூ.4,662.92 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 1.11 சதவிகிதம் உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு 65.62 அமெரிக்க டாலராக உள்ளது.

இதையும் படிக்க: செயில் நிறுவனத்தின் 4-வது காலாண்டு நிகர லாபம் 11 சதவிகிதமாக உயர்வு!

வங்கி மோசடி வழக்குகள் குறைந்தன! ஆனால் சந்தோஷப்பட ஒன்றுமில்லை!! ஏன்?

கடந்த 2023-24ஆம் நிதியாண்டைக் காட்டிலும் நடப்பு நிதியாண்டில் வங்கி மோசடி வழக்குகள் குறைந்துள்ளன என்று ஆர்பிஐ ஆண்டறிக்கை தெரிவிக்கிறது.ஆனால், வங்கி மோசடி வழக்குகள்தான் குறைந்திருக்கிறதே தவிர, கடந்த நித... மேலும் பார்க்க

சரிவில் பங்குச் சந்தை! இன்றைய நிலவரம் என்ன?

பங்குச்சந்தைகள் நேற்று ஏற்றத்துடன் முடிவடைந்த நிலையில் இன்று(வெள்ளிக்கிழமை) சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,465.69 என்ற புள்ளிகளில் த... மேலும் பார்க்க

இன்டெல் மணியின் கடனளிப்பு 69% உயா்வு

முன்னணி வங்கியல்லாத நிதி நிறுவனங்களில் ஒன்றான இன்டெல் மணியின் கடனளிப்பு கடந்த நிதியாண்டில் 69 சதவீதம் அதிகரித்துள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கட... மேலும் பார்க்க

அந்நிய நேரடி முதலீடு 934 கோடி டாலராகக் குறைவு

இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு கடந்த மாா்ச் காலாண்டில் 934 கோடி டாலராகக் குறைந்துள்ளது.இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது:2024-25-ஆம் நிதியாண்டின் ஜனவரி-மாா்ச் காலாண்டில் 24.5 சதவ... மேலும் பார்க்க

ரயில்வேயிடமிருந்து ரூ.140 கோடி ஆர்டரை வென்ற டெக்ஸ்மாக்கோ!

கொல்கத்தா: டெக்ஸ்மாக்கோ ரயில் அண்டு பொறியியல் லிமிடெட், பல்நோக்கு வேகன்களை வழங்குவதற்காக ரயில்வேயிடமிருந்து ரூ.140.55 கோடி மதிப்புள்ள ஆர்டரை பெற்றுள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.புதிதாக உருவாக்க... மேலும் பார்க்க

மார்ச் காலாண்டில் சோபா லிமிடெட் லாபம் 6 மடங்கு அதிகரிப்பு!

பெங்களூரு: பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட ரியல் எஸ்டேட் நிறுவனமான சோபா லிமிடெட், மார்ச் காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.40.85 கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவித்தது. நிறுவனத்தின் நிகர லாபம் கடந்... மேலும் பார்க்க