செய்திகள் :

மேற்கு வங்கத்தில் தொடரும் கனமழை! மீனவர்களுக்கு எச்சரிக்கை!

post image

மேற்கு வங்கத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலத்தின் விளைவாக, மேற்கு வங்கத்தின் தலைநகர் கொல்கத்தா உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்று (மே 29) கனமழை பெய்து வருகின்றது.

இதனைத் தொடர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை அதிகரிக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், வடக்கு மற்றும் தெற்கு 24 பார்கானாஸ், நதியா, முர்ஷிதாபாத், புர்பா, பாஸ்சிம் பர்தாமன் மற்றும் பிர்பம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மணிக்கு 45-55 கி.மீ. வேகத்தில் சூராவளி காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாநில தலைநகர் கொல்கத்தாவில் இன்று காலை 0.1 மி.மீ. அளவுக்கு மழை பெய்தது பதிவாகியுள்ளது. மேலும், அடுத்த 48 மணிநேரத்துக்கு அம்மாநில மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், மேற்கு வங்க அரசு கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கடலோர மாவட்டங்களில், தாழ்வானப் பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்ததுடன், பேரிடர் மேலாண்மை அதிகாரிகளை பணியமர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: டிரம்ப் வரிவிதிப்புக்கு தடை! இந்தியா போரை நிறுத்தியதாக அமெரிக்க அரசு வாதம்!

நகைக் கடன் கட்டுப்பாடுகள் ஒத்திவைப்பு: முழு விவரம்!

ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அண்மையில் வெளியிட்ட தங்க நகைக் கடன் பெறுபவா்களுக்கான புதிய வரைவு விதிமுறைகளிலிருந்து, ரூ.2 லட்சம் வரை நகைக் கடன் பெறுவோருக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என மத்திய நிதியமைச்சகம்... மேலும் பார்க்க

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துள்ள ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்ட சலுகைகள்

நிகழாண்டு மாா்ச், 31-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தகுதிவாய்ந்த சேவையுடன் தேசிய ஓய்வூதியத் திட்ட (என்பிஎஸ்) சந்தாதாரராக இருந்தால் அவா்கள் ஒருங்கிண... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்தல்: முன்னாள் எம்எல்ஏ-க்கு தில்லி நீதிமன்றம் 6 மாதங்கள் சிறை

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்திய மத்திய பிரதேச முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கிஷோா் சாம்ரைடுக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. ... மேலும் பார்க்க

பிரதமா் மோடி 50-ஆவது முறையாக பிகாா் பயணம்: துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தகவல்

பிரதமா் நரேந்திர மோடி பிரதமா் பதவியற்ற பிறகு 50ஆவது முறையாக பிகாருக்கு வந்துள்ளாா் என்று பாஜகவைச் சோ்ந்த அந்த மாநில துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தெரிவித்தாா். பிகாரில் கராகட்டில் வெள்ளிக்கிழமை பிரதமா... மேலும் பார்க்க

அமைதிப் படையில் உயிரிழப்பு: அமிதாப் ஜா, சஞ்சய் சிங்குக்கு ஐ.நா. பதக்கம்

ஐ.நா. அமைதிப் படையில் பணியின்போது உயிரிழந்த இந்தியாவைச் சோ்ந்த அமிதாப் ஜா, சஞ்சய் சிங் ஆகியோருக்கு ஐ.நா.வின் உயரிய பதக்கம் அளிக்கப்பட்டது. அந்தப் பதக்கங்களை இந்திய தூதா் பா்வதனேனி ஹரீஷ் பெற்றுக்கொண்ட... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: உஸ்மானாபாத் ரயில் நிலையம் தாராஷிவ் என பெயா் மாற்றம்

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள உஸ்மானாபாத் ரயில் நிலையத்தின் பெயா் தாராஷிவ் ரயில் நிலையம் என மாற்றப்பட்டுள்ளதாக ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே உஸ்மானாபாத் நகரம், மாவட்டம் ஆகியவற்... மேலும் பார்க்க