செய்திகள் :

என்னுடன் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்கத் தயாரா? - மோடிக்கு மமதா கேள்வி

post image

தன்னுடன் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்கத் தயாரா? என பிரதமர் மோடிக்கு மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி சவால் விட்டுள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தில் அலிபர்துவார் பகுதியில் எரிவாயு திட்டத்தைத் தொடக்கிவைத்த பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பேசுகையில், "மேற்குவங்கத்தில் சமீபத்தில் நடைபெற்ற முர்ஷிதாபாத், மால்டா வன்முறைகள் மாநில அரசின் அராஜகம். இங்கு பெண்களுக்கு பாதுகாப்பின்மை, வேலைவாய்ப்பின்மை என பல பிரச்னைகள் உள்ளன. அதனால் 'ஆபரேஷன் பெங்கால்' மேற்கொள்வோம்" என்று மேற்குவங்க அரசை கடுமையாக சாடினார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக முதல்வர் மம்தா பானர்ஜி, 'இதுகுறித்து என்னுடன் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்க வாருங்கள், நீங்கள் உங்கள் டெலிப்ராம்ப்டரைக் கொண்டு வரலாம்' என்று பிரதமர் மோடிக்கு சவால் விட்டுள்ளார். மேலும் தைரியம் இருந்தால் மாநிலத்தில் முன்கூட்டியே தேர்தலை நடத்துங்கள் என்றும் கூறியுள்ளார்.

"தேச நலனைப் பாதுகாக்க ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று விளக்கமளித்து வரும் நிலையில், மத்திய அரசு 'அரசியல் ஹோலி' விளையாடிக் கொண்டிருக்கிறது.

பிரதமர் மோடி இன்று பேசியது அதிர்ச்சியை மட்டும் ஏற்படுத்தவில்லை. கேட்பதற்கே துரதிர்ஷ்டவசமாக இருக்கிறது. ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து 'ஆபரேஷன் பெங்கால்' மேற்கொள்வோம் என்று பிரதமர் மோடி எப்படி கூறலாம்?. அப்படி பேச வேண்டிய நேரம் இதுதானா? இப்படி பேசுபவர் பிரதமராக இருக்கத் தகுதியில்லை. பிரதமர் மோடி பொய்களையே கூறுகிறார். நாட்டை கொள்ளையடிக்கிறார்.

இவ்வாறு பேசியதன் மூலம் மேற்குவங்கத்தை பிரதமர் மோடி அவமதித்துள்ளார். மாநில மக்களை அவமதித்துள்ளார். அப்படியெனில் நாளைக்கே மேற்குவங்கத்தில் தேர்தலை நடத்துங்கள். நாங்கள் தயாராக இருக்கிறோம். உங்கள் சவாலை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

ஆபரேஷன் சிந்தூர் குறித்து நான் கருத்து தெரிவிக்கமாட்டேன் ஆனால் ஒவ்வொரு பெண்ணும் மதிக்கப்பட வேண்டும், அதை மறந்துவிடாதீர்கள். அரசியல் லாபத்திற்காகவே மத்திய அரசு 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரை தேர்வு செய்துள்ளது.

உலக நாடுகளுக்குச் சென்ற எம்.பி.க்கள் குழுவில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி ஒருவராக இருக்கும் நிலையில் பிரதமர் எதிர்க்கட்சியையும் மாநில அரசுகளையும் குறை கூறுவதில் மும்முரமாக இருக்கிறார்" என்று பேசியுள்ளார்.

இதையும் படிக்க | விரைவில் இந்தியாவுடன் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீண்டும் இணையும்: ராஜ்நாத் சிங்

போருக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தானின் முதல் சந்திப்பு!

இந்தியா - பாகிஸ்தான் போரையடுத்து, இரு நாடுகளும் முதன்முறையாக சந்தித்துள்ளன. தஜிகிஸ்தான், சிங்கப்பூரில் நடைபெற்ற கூட்டங்களில் இந்தியா உள்பட பல நாடுகளும் கலந்து கொண்டன. பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் உளவாளிக்கு கேரள அரசு சிவப்புக் கம்பள மரியாதை? பாஜக கேள்வி!

பாகிஸ்தான் உளவாளி ஜோதி மல்ஹோத்ரா கேரளத்துக்கு சென்றது குறித்து பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவத் தகவல்களை உளவு பார்த்ததாக ஹரியாணாவைச் சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா, கடந்த மாத... மேலும் பார்க்க

வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு!

ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுடைய வர்த்தக சிலிண்டர் ஒன்றின் விலை இன்று(ஜூன் 1) ரூ. 25 குறைந்துள்ளது.கடந்த ஏப்.1-ஆம் தேதி வர்த்தக சிலிண்டா் விலை ரூ.41, மே 1 ஆம் தேதி ரூ. 14.50 குறைக்கப்பட... மேலும் பார்க்க

பயங்கரவாத எதிா்ப்பில் ஒத்துழைப்பு: கனிமொழி குழுவினரிடம் லாத்வியா உறுதி

‘ஆபரேஷன் சிந்தூா்’ வெற்றிகர நடவடிக்கைக்கு பிறகான இந்தியாவின் ராஜீய அணுகுமுறையின் ஒரு பகுதியாக, லாத்வியா வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஆன்டஜெஸ் விலும்சன்ஸுடன் திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான இந்திய அ... மேலும் பார்க்க

கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைப்பு: விலை குறைய வாய்ப்பு

கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால், உள்நாட்டில் சமையல் எண்ணெய்யின் விலை குறைய வாய்ப்புள்ளதாக இந்திய தாவர எண்ணெய் மற்றும் வா்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. கச்சா பாமாயில், கச்சா ச... மேலும் பார்க்க

அதிநவீன ஆயுதங்கள், பாதுகாப்பு தொழில்நுட்பங்களின் செயல்திறன்: ராணுவம் தீவிர பரிசோதனை

இந்திய ராணுவத்தின் பயன்பாட்டில் உள்ள அடுத்த தலைமுறை பாதுகாப்பு தொழில்நுட்பங்கள், அதிநவீன ஆயுதங்கள், உள்நாட்டு தயாரிப்பு பாதுகாப்பு அமைப்பு முறைகள் உள்ளிட்டவற்றின் செயல்திறனை மதிப்பிடுவதற்காக, நாட்டின்... மேலும் பார்க்க