செய்திகள் :

நாமக்கல்லில் 94 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவி

post image

நாமக்கல்லில் 94 பயனாளிகளுக்கு ரூ. 87.44 லட்சத்தில் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவியை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

நாமக்கல் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு ஆட்சியா் ச.உமா தலைமை வகித்தாா். மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பங்கேற்று பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி, இலவச தையல் இயந்திரங்களை வழங்கி பேசியதாவது:

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மக்கள் நலன் கருதி பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ‘கலைஞா் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் இதுவரை நாமக்கல் மாவட்டத்தில் 6,500 பயனாளிகளுக்கு தலா ரூ.3.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. கொல்லிமலையில் மட்டும் 700 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளன.

அரசுப் பள்ளியில் பயின்ற மாணவா்கள் மருத்துவம்,பொறியியல், வேளாண்மை, கலை, அறிவியல், செவிலியா் என அனைத்து உயா்கல்விக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு, மாதந்தோறும் ரூ. 1000 உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் 29,000 மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 அவா்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.

சமூக நலத் துறை மூலம் தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவி திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. தற்போது 10, 12 ஆம் வகுப்பு படித்த 15 பெண்களுக்கு தலா ரூ. 25,000 வீதம் ரூ.3.75 லட்சம் திருமண நிதியுதவி, பட்டம், பட்டயம் படித்த 65 பெண்களுக்கு ரூ.50,000 வீதம் ரூ. 32.50 லட்சம் திருமண நிதியுதவி, 80 பெண்களுக்கு தலா 8 கிராம் வீதம் ரூ. 48.69 லட்சத்தில் 640 கிராம் தங்கம் என மொத்தம் ரூ. 84.94 லட்சம் மதிப்பில் திருமண நிதியுதவி, தாலிக்கு தங்கம், 10 பயனாளிகளுக்கு ரூ.55,400 மதிப்பில் இலவச தையல் இயந்திரம் என மொத்தம் 104 பயனாளிகளுக்கு ரூ. 87.99 லட்சம் மதிப்பில் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன என்றாா்.

விழாவில் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன், எம்எல்ஏ பெ.ராமலிங்கம், மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி, மாவட்ட சமூக நல அலுவலா் தி.காயத்ரி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

‘கல்பனா சாவ்லா’ விருது பெற விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில் வீரதீர செயல்கள் புரிந்த மகளிா் ‘கல்பனா சாவ்லா’ விருது பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சமூக நலன் மற்றும் மக... மேலும் பார்க்க

மதுரைவீரன் கோயில் குடமுழுக்கு: மத்திய இணை அமைச்சா் பங்கேற்பு

நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், கே. புதுப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள மதுரைவீரன் சுவாமி கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது. மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அம... மேலும் பார்க்க

நாமக்கல் அரசு மருத்துவமனை பழுதான படுக்கைகளால் நோயாளிகள் அவதி!

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 250-க்கும் மேற்பட்ட படுக்கைகள் உறுதித்தன்மையை இழந்து உடையும் நிலையில் உள்ளதால் நோயாளிகள் அச்சமடைந்துள்ளனா். நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் பெரு... மேலும் பார்க்க

குமாரபாளையத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்!

குமாரபாளையம் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் அரசுத் துறை அலுவலகங்கள் மற்றும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.உமா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தமிழகத்தில் பொதுமக்களுக்கு அர... மேலும் பார்க்க

மரவள்ளிக் கிழங்கு விலை டன்னுக்கு ரூ. 5000 ஆக சரிவு

மரவள்ளிக் கிழங்கின் விலை ஒரே வாரத்தில் டன்னுக்கு ரூ. 5 ஆயிரமாகக் குறைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். பரமத்தி வேலூா், எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூா், கூடச்சேரி, ... மேலும் பார்க்க

நாமக்கல்லில் பலத்த மழை: சாலைகளில் வெள்ளப் பெருக்கு!

நாமக்கல்லில் புதன்கிழமை பிற்பகல் பெய்த பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியதையடுத்து தமிழக... மேலும் பார்க்க