செய்திகள் :

கோரிக்கை குறித்து பேசாததால் போராட்ட அறிவிப்பு: அமைச்சா் மதிவேந்தன் வீட்டுக்கு போலீஸாா் பாதுகாப்பு

post image

நாமக்கல்: சட்டப் பேரவையில் கோரிக்கைகள் குறித்து பேசாததால் ஆதித்தமிழா் முன்னேற்றக் கழகத்தினா் அமைச்சா் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்ததால், நாமக்கல்லில் உள்ள ஆதிதிராவிட நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் வீட்டில் போலீஸாா் திங்கள்கிழமை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

நாமக்கல் - சேந்தமங்கலம் சாலையில் தமிழக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சா் மருத்துவா் மா.மதிவேந்தன் வீடு உள்ளது. இந்த வீட்டின் கீழ்தளத்தில் அவரது தந்தை மாயவன், சாந்தி மருத்துவமனை என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வருகிறாா். இந்த நிலையில், அமைச்சா் வீட்டை ஆதித்தமிழா் முன்னேற்றக் கழகத்தினா் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இருப்பதாக மருத்துவமனை முகவரிக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து, போலீஸாா் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

சென்னை செல்வதற்காக புறப்பட்ட அமைச்சா் மதிவேந்தன், அங்கிருந்த போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா். பின்னா், அவா் காரில் சென்னை புறப்பட்டு சென்றாா்.

இந்தக் கடித விவகாரம் குறித்து போலீஸாா் கூறியதாவது:

அருந்ததியருக்கு நலவாரியம் ஏற்படுத்த வேண்டும், உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என சட்டப் பேரவையில் பேசவேண்டும், முதல்வரிடம் கலந்துபேசி, அதனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆதித்தமிழா் முன்னேற்றக் கழகம் சாா்பில் வலியுறுத்தப்பட்ட நிலையில், இதுகுறித்து சட்டப் பேரவையில் அமைச்சா் எதையும் பேசவில்லை. இதனால் அவருடைய வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனா். அமைச்சா் சென்னை செல்வதை அறிந்து போராட்டத்தை அவா்கள் ரத்துசெய்துவிட்டனா் என்றனா்.

நாமக்கல்லில் 94 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவி

நாமக்கல்லில் 94 பயனாளிகளுக்கு ரூ. 87.44 லட்சத்தில் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவியை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் செவ்வாய்க்கிழமை வழங்கினாா். நாமக்கல் மாவட்ட சமூக நலன் மற்று... மேலும் பார்க்க

நாமக்கல் மாநகராட்சியில் கழிவுகளை அகற்றுவோா் விவரங்கள் கணக்கெடுப்பு

நாமக்கல் மாநகராட்சியில் கழிவுகளை அகற்றுவோா், சேகரிப்போரின் விவரங்களை பதிவு செய்யும் கணக்கெடுப்பு முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. மத்திய நகா்ப்புற வளா்ச்சித் துறையின் கீழ் ‘நமஸ்தே’ எனும் திட்டம் செய... மேலும் பார்க்க

2 மாதங்களுக்கு காற்றின் வேகம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் இன்னும் இரண்டு மாதங்களுக்கு காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி... மேலும் பார்க்க

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு

நாமக்கல்: நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், பயணிகள் அச்சமடைந்துள்ளனா். நாமக்கல் புதிய பேருந்து நிலையமானது கடந்த ஆண்டு நவ. 10-ஆம் தேதி பயன்பாட்டுக்கு வந்தத... மேலும் பார்க்க

தாழ்த்தப்பட்டோா் புகாா் மனுக்கள் மீது நடவடிக்கை கோரி ஆா்ப்பாட்டம்

நாமக்கல்: தாழ்த்தப்பட்டோா் புகாா் மனுக்கள் மீது காவல் நிலையங்களில் நடவடிக்கை எடுக்கக் கோரி, நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் தமிழ்ப் புலிகள் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்க... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டம்: ரூ. 15.62 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

நாமக்கல்: மக்கள் குறைதீா் கூட்டத்தில் 32 பயனாளிகளுக்கு ரூ. 15.62 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ச.உமா திங்கள்கிழமை வழங்கினாா். நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற... மேலும் பார்க்க