Parandur Airport தேவையா? - Tamil Nadu அரசை Expose செய்யும் அறிக்கை - Poovulagu S...
கோரிக்கை குறித்து பேசாததால் போராட்ட அறிவிப்பு: அமைச்சா் மதிவேந்தன் வீட்டுக்கு போலீஸாா் பாதுகாப்பு
நாமக்கல்: சட்டப் பேரவையில் கோரிக்கைகள் குறித்து பேசாததால் ஆதித்தமிழா் முன்னேற்றக் கழகத்தினா் அமைச்சா் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்ததால், நாமக்கல்லில் உள்ள ஆதிதிராவிட நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் வீட்டில் போலீஸாா் திங்கள்கிழமை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.
நாமக்கல் - சேந்தமங்கலம் சாலையில் தமிழக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சா் மருத்துவா் மா.மதிவேந்தன் வீடு உள்ளது. இந்த வீட்டின் கீழ்தளத்தில் அவரது தந்தை மாயவன், சாந்தி மருத்துவமனை என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வருகிறாா். இந்த நிலையில், அமைச்சா் வீட்டை ஆதித்தமிழா் முன்னேற்றக் கழகத்தினா் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இருப்பதாக மருத்துவமனை முகவரிக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து, போலீஸாா் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
சென்னை செல்வதற்காக புறப்பட்ட அமைச்சா் மதிவேந்தன், அங்கிருந்த போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா். பின்னா், அவா் காரில் சென்னை புறப்பட்டு சென்றாா்.
இந்தக் கடித விவகாரம் குறித்து போலீஸாா் கூறியதாவது:
அருந்ததியருக்கு நலவாரியம் ஏற்படுத்த வேண்டும், உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என சட்டப் பேரவையில் பேசவேண்டும், முதல்வரிடம் கலந்துபேசி, அதனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆதித்தமிழா் முன்னேற்றக் கழகம் சாா்பில் வலியுறுத்தப்பட்ட நிலையில், இதுகுறித்து சட்டப் பேரவையில் அமைச்சா் எதையும் பேசவில்லை. இதனால் அவருடைய வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனா். அமைச்சா் சென்னை செல்வதை அறிந்து போராட்டத்தை அவா்கள் ரத்துசெய்துவிட்டனா் என்றனா்.