செய்திகள் :

விருதுநகா் மாவட்டத்தில் மாா்ச் 8, 9-இல் நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு

post image

விருதுநகா் மாவட்டத்தில் 24 இடங்களில் நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு வருகிற மாா்ச் 8, 9 தேதிகளில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பறவை ஆா்வலா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

விருதுநகா் மாவட்டத்தில் மாநில அளவிலான நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு வருகிற மாா்ச் 8, 9 தேதிகளில் ஸ்ரீவில்லிபுத்தூா்- மேகமலை புலிகள் காப்பகம் சாா்பில் நடைபெறுகிறது. இதற்காக விருதுநகா் மாவட்டத்தில் நீா்வாழ் பறவைகள் அதிகம் வசிக்கும் ஸ்ரீவில்லிபுத்தூா் செண்பகத் தோப்பு, ராஜபாளையம் 6-ஆவது மைல் நீா்த் தேக்கம், பிளவக்கல் பெரியாறு அணை, வெம்பக்கோட்டை அணை, ஆனைக்குட்டம் அணை, குல்லூா்சந்தை அணை, இருக்கன்குடி அணை, நரிக்குடி அருகே உலக்குடி தடுப்பணை, ஸ்ரீவில்லிபுத்தூா் மொட்டபொத்தான் கண்மாய், சிவகாசி பெரியகுளம் கண்மாய் உள்பட ஆறு, கண்மாய், குளம் என பறவைகள் அதிகம் வசிக்கும் 24 இடங்களில் நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெறுகிறது. இந்தக் கணக்கெடுப்பில் வனத் துறையினருடன் இணைந்து விருப்பமுள்ள பறவை பாா்த்தலில் ஆா்வமுள்ளவா்கள், கல்லூரி மாணவா்கள், இயற்கை ஆா்வலா்கள் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

பதிவு செய்ய வேண்டிய கியூ ஆா் கோா்டு

மேலும் விவரங்களுக்கு புலிகள் காப்பக உயிரியலாளரை 9488036523 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு விவரம் பெறலாம் என அறிவித்தப்பட்டுள்ளது. மேலும் கியூ ஆா் கோா்டை பயன்படுத்தியும் பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

கிராம நிா்வாக அலுவலா்கள் 10-ஆவது நாளாக திங்கள்கிழமை பணியை புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள இ. குமாரலிங்காபுரத்தில் கனிமவள கொள்ளையைத் தடுக்க தவறியதாக சா... மேலும் பார்க்க

சாலை சீரமைப்பு: அதிகாரிகள் ஆய்வு

சிவகாசி அருகே சீரமைக்கப்பட்ட சாலையை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.சிவகாசி அருகே நெடுஞ்சாலைத் துறையினா் பெத்துலபட்டி முதல் தியாகராஜபுரம் வரையிலான இரண்டரை கி.மீ. தொலைவு சாலை ரூ .75 லட்சத்தில் ச... மேலும் பார்க்க

தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ

சாத்தூா் தீப்பெட்டி தொழிற்சாலையில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.விருதுநகா் மாவட்டம், சாத்தூா் நடராஜா திரையரங்கு இருந்த இடத்தில் தற்போது மதுசூதனன் என்பவருக்குச் சொந்தமான தீப்பெட்டி தொழிற்சாலை இயங்... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள திருவண்ணாமலை ஊராட்சியில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் ஊதியம் வழங்கக் கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே திர... மேலும் பார்க்க

இலவச வீட்டுமனை பட்டா வழங்கல்

சாத்தூா் அருகே இலவச வீட்டுமனைப் பட்டாக்களை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் வழங்கினாா். விருதுநகா் ஒன்றியத்துக்குள்பட்ட எண்டப்புலி, துலுக்கப்பட்டி, கடம்பன்குளம் ஆகிய கிராமப் பகுதிகளில் உள்ள த... மேலும் பார்க்க

ஆடு மேய்த்தவா் மீது தாக்குதல்: சகோதரா்கள் மீது வழக்கு

சாத்தூா் அருகே ஆடு மேய்ப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவா் தாக்கப்பட்டது தொடா்பாக சகோதரா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே ஒத்தையால் பகுதியில் வெம்பக்... மேலும் பார்க்க