செய்திகள் :

விரைவில் அறிமுகமாகிறது மோட்டோரோலா ஜி96!

post image

மோட்டோரோலா நிறுவனத்தில் புதிதாக ஜி 96 என்ற ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளது.

இதற்கு முன்பு மோட்டோரோலா ஜி86 ஸ்மார்ட்போன் அறிமுகமான நிலையில், தற்போது ஜி வரிசையில் புதிய ஸ்மார்ட்போனை அந்நிறுவனம் அறிமுகம் செய்கிறது.

அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மோட்டோரோலா நிறுவனம் அடுத்தடுத்து புதிய தயாரிப்புகளை தனது பயனர்களுக்கு அறிமுகம் செய்து வருகிறது.

சமீபத்தில் மோட்டோரோலா ஜி86 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் சிறப்பம்சங்கள் மோட்டோரோலா பயனர்களை திருப்திப்படுத்தியுள்ள நிலையில், பட்ஜெட் விலையில் நிறைவான அம்சங்களுடன் ஜி96 ஸ்மார்ட்போனை மோட்டோரோலா அறிமுகம் செய்யவுள்ளது.

இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்காவின் பிரபல ஸ்மார்ட்போன் பிரியரான இவான் பிளாஸ், மோட்டோரோலா நிறுவனத்தின் ஜி வரிசையில் புதிதாக ஜி96 ஸ்மார்ட்போன் இடம்பெறவுள்ளது எனப் பதிவிட்டுள்ளார்.

அவரின் இந்தப் பதிவு மோட்டோரோலா பயனர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறப்பம்சங்கள் எப்போது வெளியாகும்

மோட்டோரோலா ஜி96 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் குறித்த தரவுகள் ஏதும் இதுவரை வெளியாகாத நிலையில், ஜி வரிசையில் இடம்பெற்றுள்ளதால், கையடக்க விலையில் (பட்ஜெட்) இந்த ஸ்மார்ட்போன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோட்டோரோலா நிறுவனத்தின் அடிப்படை அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட கேமரா, திரை மற்றும் பேட்டரி அம்சங்களில் சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு பயனர்கள் மத்தியில் நிலவுகிறது.

இதையும் படிக்க | மே மாதத்தில் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்கள்!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து 84.33 ஆக முடிவு!

மும்பை: கச்சா எண்ணெய் விலை சரிவு மற்றும் உள்நாட்டு பங்குகளில் நேர்மறையான போக்கு ஆகியவற்றின் அடிப்படையில் இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 24 காசுகள் உயர்ந்து ரூ.84.33 ஆக மு... மேலும் பார்க்க

12 நாள்களில்... இந்திய பங்குச் சந்தையில் ரூ.40,145 கோடி வெளிநாட்டு முதலீடு!

இந்திய பங்குச் சந்தையில் கடந்த 12 நாள்களில் மட்டும் ரூ. 40,145 கோடியை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர். கடந்த ஏப்ரம் மாதத்தில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ. 3,243 கோடியை மட்டுமே... மேலும் பார்க்க

அந்நிய முதலீடுகள் அதிகரிப்பு, கச்சா எண்ணெய் வீழ்ச்சியால் சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் முடிவு!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வுடன் முடிந்தன.வர்த்தக நேர தொடக்கத்தில் சென்செக்ஸ் 547.04 புள்ளிகள் உயர்ந்து 81,049.03 புள்ளிகளாக இருந்தது.... மேலும் பார்க்க

ஓலா ரோட்ஸ்டர் டெலிவரியில் தாமதம்! இதுவரை ஒரு வண்டி கூட விற்கவில்லை!

ஓலா நிறுவனத்தின் ரோட்ஸ்டர் மின்னணு இருசக்கர வாகனங்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்குக் கூட இன்னும் இந்த இருசக்கர வ... மேலும் பார்க்க

சாம்சங்கிற்கு போட்டியாக மடிக்கக்கூடிய ஆப்பிள் ஐ-போன்! 2026-ல் அறிமுகம்!

சாம்சங் நிறுவனத்துக்குப் போட்டியாக மடிக்கக்கூடிய ஐ-போன்களை ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஆப்பிள் ஐ-போன் ஏர், ஐ-போன் ப்ரோ என்ற இரு வகைகளில் உருவாகும் மடிக்கக் கூடிய போன்களை 2026 ஆம் ஆண்டில் ஆப்பிள்... மேலும் பார்க்க

ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச் சந்தை!

இந்திய பங்குச் சந்தை இன்று(மே 5) காலை ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 11 மணியளவில் 449 புள்ளிகள் அதிகரித்து 80,951.28 புள்ளிகளில் வர்... மேலும் பார்க்க