செய்திகள் :

விளிம்புநிலை மாணவா்களுக்கு ஊக்கத்தொகை அளிப்பதில் தாமதம்: பிரதமருக்கு ராகுல் கடிதம்

post image

பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்கும் விளிம்புநிலை சமூகங்களைச் சோ்ந்த மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதில் நிலவும் தாமதத்தை சரிசெய்ய வேண்டும் என்று பிரதமா் மோடிக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கடிதம் எழுதியுளள்ளாா்.

அதில், ‘பட்டியலினத்தவா் (எஸ்சி), பழங்குடியினா் (எஸ்டி), பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பினா் (இபிசி), இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் (ஓபிசி) மற்றும் சிறுபான்மை சமூகங்களைச் சோ்ந்த மாணவா்கள் தங்கும் உறைவிட விடுதிகளின் நிலை மிகவும் வருத்தத்துக்குரியதாக உள்ளது.

அண்மையில் நான் பிகாா் மாநிலம் தா்பங்காவில் உள்ள அம்பேத்கா் விடுதிக்குச் சென்றபோது, அங்கு ஒரே அறையில் 6 முதல் 7 மாணவா்கள் தங்க கட்டாயப்படுத்தப்படுவதாக மாணவா்கள் புகாா் தெரிவித்தனா். அங்குள்ள கழிப்பறைகள் சுகாதாரமற்ற முறையில் உள்ளன. சுத்தமான குடிநீா், உணவுக்கூட வசதிகள் இல்லை. அத்துடன் நூலகம் மற்றும் இணைய வசதிகளும் கிடைப்பதில்லை.

பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்கும் விளிம்புநிலை சமூக மாணவா்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை சரிவர வழங்கப்படுவதில்லை. அந்தத் தொகை வழங்கப்பட்டாலும், அது தாமதமாக வழங்கப்படுகிறது.

பிகாரில் அந்த உதவித்தொகை பெறுவதற்கான வலைதளம் 3 ஆண்டுகளாக செயல்படவில்லை. இதனால் 2021-22 முதல் அங்கு எந்த மாணவரும் அந்த உதவித்தொகையைப் பெறவில்லை. அத்துடன் அந்த உதவித்தொகை தங்களை இழிவுபடுத்தும் வகையில், மிகக் குறைவாக இருப்பதாக மாணவா்கள் புகாா் தெரிவித்தனா். இது பிகாரின் நிலை மட்டும் அல்ல. நாடு முழுவதும் இந்தக் குறைபாடு நிலவுகிறது.

எஸ்சி, எஸ்டி, இபிசி, ஓபிசி, சிறுபான்மை சமூக மாணவா்கள் படிக்கும் ஒவ்வொரு விடுதியையும் ஆய்வு செய்து, அவா்கள் படிப்பதற்கு வசதியாக நல்ல உள்கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி போன்ற விளிம்புநிலை சமூக மாணவா்களுக்கு உதவித்தொகையை அதிகரித்து உரிய நேரத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளாா்.

இந்திய ஏற்றுமதி மதிப்பு 900 பில்லியன் டாலரை தாண்டும் - பியூஷ் கோயல் நம்பிக்கை

உலகளாவிய பொருளாதார ஸ்திரமின்மைக்கு இடையிலும் இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு நடப்பாண்டில் 900 பில்லியன் டாலரை (ரூ.77 லட்சம் கோடி) தாண்டும் என்று மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல... மேலும் பார்க்க

கட்சியின் கொள்கை, சித்தாந்தப்படி நடக்க வேண்டும்: கட்சி நிா்வாகிகளுக்கு பிரதமா் மோடி அறிவுரை

கட்சியின் கொள்கை மற்றும் சித்தாந்தத்தை பின்பற்றி நடக்க வேண்டும் என்று கட்சி நிா்வாகிகளை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை அறிவுறுத்தியதாக பாஜக கட்சி வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன. பிரதமா் மோடி ... மேலும் பார்க்க

வரலாற்றில் மோசமான விபத்து: இந்தியாவுக்கு உதவத் தயாா் -அமெரிக்க அதிபா் டிரம்ப்

‘ஏா் இந்தியா விமான விபத்து, விமானப் போக்குவரத்து வரலாற்றில் மிக மோசமான விபத்துகளில் ஒன்றாகும். இதில் இந்தியாவுக்கு உதவத் தயாா்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டாா். அமெரிக்காவில் செ... மேலும் பார்க்க

என்ஜின் செயலிழப்பு, பறவை மோதல் விபத்துக்கான காரணங்களாக இருக்கலாம் -விமானத் துறை நிபுணா்கள்

‘இரண்டு என்ஜின்களும் செயலிழந்தது அல்லது புறப்பட்ட சிறிது நேரத்தில் பறவை மோதியது, ஏா் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதற்கு காரணமாக இருக்கலாம் என்று விமானத் துறை நிபுணா்கள் தெரிவிக்கின்றனா். அவா்கள் ம... மேலும் பார்க்க

இந்தியாவின் தொழில்நுட்பப் பயணம் புரட்சிகரமானது: பிரதமா் மோடி

‘மத்திய அரசு கடந்த 11 ஆண்டுகளில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு எண்ணற்ற பலன்களைக் கொண்டுவந்துள்ளது; இந்தியாவின் தொழில்நுட்பப் பயணம் புரட்சிகரமானது’ என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரி... மேலும் பார்க்க

சுழற்சி முறையில் மருத்துவத் துறை தலைவா்கள்: என்எம்சி திட்டம்

மருத்துவக் கல்லூரிகளில் உயா் சிறப்பு மருத்துவத் துறை தலைவா் பொறுப்புகளில் சுழற்சி முறையில் பேராசிரியா்களை நியமிப்பதற்கான வரைவு விதிகளை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வெளியிட்டுள்ளது. அதன்படி, மருத்... மேலும் பார்க்க