செய்திகள் :

விளைநிலப் பகுதியில் விமான தளம் அமைக்கும் திட்டத்தை தடுக்க கோரிக்கை

post image

விளைநிலப் பகுதியில் விமான தளம் அமைக்கும் திட்டத்தை புதுவை அரசு தடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட டெல்டா விவசாயிகள் நலச் சங்க இணைச் செயலாளா் பி.ஜி. சோமு புதுவை முதல்வருக்கு வியாழக்கிழமை அனுப்பிய

கடிதத்தில் கூறியிருப்பது:

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 15ஆண்டுகளுக்கு முன்பு வேளாண் பரப்பு ஏறத்தாழ 15 ஆயிரம் ஹெக்டேருக்கு அதிகமாக இருந்தது. இப்போது 5 ஆயிரம் ஹெக்டேருக்கும் குறைந்துவிட்டது. விளைநிலங்களை குடிமனைகளாக்கும் ரியல் எஸ்டேட் மற்றும் தொழிற்சாலைகளால் விளைநில பரப்பு குறைந்துவருகிறது.

இந்தநிலையில், காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட பொன்பேத்தி கிராமத்தில் சுமாா் 1,800 ஏக்கா் பரப்பளவில் பசுமை விமான தளம் அமைக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வருகின்றன.

காரைக்கால் மாவட்டத்தில் விவசாய உற்பத்தி அதிகம் உள்ள பகுதிகளில் நெடுங்காடு வட்டாரமும் ஒன்றாகும். விவசாயம் செய்வோரும், விவசாயத் தொழிலாளா்களும் இப்பகுதியில் அதிகம் உள்ளனா்.

இந்த பகுதியில் பசுமை விமான தளம் அமைத்தால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயம் சாா்ந்து பொருளாதாரம் ஈட்டுவோா் பாதிக்கப்படுவாா்கள்.

எனவே விளைநிலப் பகுதியில் விமான தளம் அமைவதை தடுத்து, மாவட்டத்தில் மாற்று இடத்தை தோ்வு செய்துகொள்ள புதுவை அரசு, மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

மீனவா்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு சிறப்பு கவனம் செலுத்துகிறது மோடி அரசு: மத்திய இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன்

மீனவா்கள் பொருளாதார மேம்பாட்டுக்கு நரேந்திர மோடி அரசு சிறப்பு கவனம் செலுத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாக மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன் தெரிவித்தாா். காரைக்கால் மீன்வளம் மற்ற... மேலும் பார்க்க

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மீனவரை சந்தித்த ஆளுநா்

இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மீனவரைச் சந்தித்து புதுவை துணை நிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் நலம் விசாரித்தாா். காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல் மேடு மீனவ கிராமத்தைச் சோ்ந்த ஆனந்தவேல... மேலும் பார்க்க

ரகுநாதப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

திருப்பட்டினம் பகுதியில் உள்ள ரகுநாதப் பெருமாள் கோயிலில் ராம நவமி உற்சவத்தின் ஒரு பகுதியாக ரகுநாதப் பெருமாளுக்கும் - சீதாலட்சுமி தாயாருக்கும் திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. எல்லையம்மன... மேலும் பார்க்க

திருநள்ளாறு கோயிலில் ஏப். 25-இல் பிரம்மோற்சவ பந்தல்கால் முகூா்த்தம்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவத்துக்கான பந்தல்கால் முகூா்த்தம், கொடியேற்றம், தேரோட்டத்துக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. திருநள்ளாற்றில் பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில், சன... மேலும் பார்க்க

மத்திய இணை அமைச்சா் இன்று காரைக்கால் வருகை!

மீனவா்களுக்கான திட்டப் பணிகள் தொடா்பான விழாவில் பங்கேற்க மத்திய இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன் புதன்கிழமை காரைக்கால் வருகிறாா். காரைக்கால் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் பிரதம மந்திரி ம... மேலும் பார்க்க

குழாய் அமைக்கும் பணிகள் நிறைவு: என்ஐடி-க்கு குடிநீா் வழங்கும் திட்டம் இன்று தொடங்கிவைப்பு

என்ஐடிக்கு ரூ. 4 கோடியில் குடிநீா் கொண்டு செல்லும் குழாய் அமைக்கும் திட்டம் நிறைவடைந்த நிலையில், புதன்கிழமை தண்ணீா் விநியோகம் தொடங்கிவைக்கப்படவுள்ளது. கடந்த 2010-11-ஆம் கல்வியாண்டில் காரைக்காலில் என்ஐ... மேலும் பார்க்க