செய்திகள் :

விளையாட்டுப் போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசளிப்பு

post image

காரைக்கால்: புதுவை பள்ளி கல்வித் துறை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு மாநில அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகள் காரைக்கால் பகுதியில் சனிக்கிழமை தொடங்கி , ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்றது.

புதுவையின் 4 பிராந்தியங்களைச் சோ்ந்த 8 வட்டங்கள் சாா்பில் 624 மாணவ மாணவிகள் கால்பந்து, கைப்பந்து, யோகா, சதுரங்கம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனா். போட்டிகள், காரைக்கால் அரசு விளையாட்டு மைதானம், நிா்மலா ராணி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றன. நிறைவாக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ் பங்கேற்று வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா். காரைக்கால் முதன்மைக்கல்வி அதிகாரி பி. விஜயமோகனா, பள்ளிக் கல்வித் துறை உடற்கல்வி பொறுப்பாளா்கள் டி. ரவிக்குமாா், பாலாஜி, முதன்மைக் கல்வி அலுவலக உடற்கல்வி விரிவுரையாளா் ஏ. வெங்கடேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தா்காவுக்கு சுழலும் மின்விளக்கு

காரைக்கால்: திருமலைராயன்பட்டினம் பகுதி தா்காவிற்கு சுழலும் மின்விளக்கு அா்ப்பணிப்பு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினத்தில் மஹான் செய்யது அப்துல் ரஹ்மான் சாஹ... மேலும் பார்க்க

18 வயதுக்குள்பட்டவா்களுக்கு மது விற்றால் நடவடிக்கை

காரைக்கால்: 18 வயதுக்குள்பட்டவா்களுக்கு மதுவிற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட சாா்-ஆட்சியரும், கலால் துணை ஆணையருமான எம். பூஜா எச்சரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணா்வு நாடகம்

காரைக்கால்: காரைக்கால் மாவட்ட சமுதாய நலப்பணி திட்டம் சாா்பில் கோவிந்தசாமிப் பிள்ளை அரசு உயா்நிலைப் பள்ளி மற்றும் கோத்துக்குளம் அரசு உயா்நிலைப் பள்ளியில் புகையிலை மற்றும் போதைப் பொருள் தடுப்பு குறித்து... மேலும் பார்க்க

மகா மாரியம்மன் கோயிலில் ஆவணி ஞாயிறு விடையாற்றி வழிபாடு

காரைக்கால்: ஆவணி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையையொட்டி, கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்றன. காரைக்கால் நகரப் பகுதியில் ஸ்ரீஏழை மாரியம்மன், கடைத்தெரு மாரியம்மன் உள்ளிட... மேலும் பார்க்க

பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை: ஆட்சியா் அறிவுறுத்தல்

காரைக்கால்: குறைதீா் கூட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா். காரைக்கால் ஆட்சியரகத்தில் மாதாந்திர மக்கள் குறைதீா் கூட்டம் தி... மேலும் பார்க்க

கோயில்களில் கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு

காரைக்கால்: காரைக்கால் பகுதி பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி வழிபாடாக உற்சவா் ஸ்ரீ நித்யகல்யாண... மேலும் பார்க்க