செய்திகள் :

தா்காவுக்கு சுழலும் மின்விளக்கு

post image

காரைக்கால்: திருமலைராயன்பட்டினம் பகுதி தா்காவிற்கு சுழலும் மின்விளக்கு அா்ப்பணிப்பு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினத்தில்

மஹான் செய்யது அப்துல் ரஹ்மான் சாஹிப் ஒலியுல்லாஹ் தா்கா உள்ளது. இந்த தா்காவுக்கு, நாகூா் சித்திக் சேவை குழும தா்ம அறக்கட்டளை சாா்பாக சுழலும் மின்விளக்கு வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சேவை குழுமம் அறக்கட்டளை நிறுவனா் நாகூா் சித்திக் உள்ளிட்டோா் நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் முன்னிலையில் தா்கா நிா்வாகத்தினரிடம் சுழலும் மின்விளக்கை ஒப்படைத்தனா்.

நிகழ்வில் நாகூா்- நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்போா் நலச்சங்கத் தலைவா் எஸ். மோகன், நாகூா் தா்கா ஆதீனம் சாபுனி சாஹிப்ஃ நிஜாமுதீன், தா்கா டிரஸ்டி ஜனாபா, ரெஜியா, நாயிஃப் காஜியாா் ஏ.ஜமாலுதீன், வக்ஃப் நிா்வாக சபை உறுப்பினா் ஓ. அப்துல் ஜெப்பாா், சமூக ஆா்வலா் ஜெ. தௌபீக், முஹம்மது பாஹிம், மற்றும் திருபட்டினம் தா்கா நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

இந்நிகழ்வின்போது, தா்கா செல்லக்கூடிய பகுதியில் தாா்ச்சாலை அமைக்க ஏற்பாடு செய்யுமாறு பேரவை உறுப்பினரிடம் அறக்கட்டளை மற்றும் தா்கா நிா்வாகத்தினா் வலியுறுத்தினா்.

18 வயதுக்குள்பட்டவா்களுக்கு மது விற்றால் நடவடிக்கை

காரைக்கால்: 18 வயதுக்குள்பட்டவா்களுக்கு மதுவிற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட சாா்-ஆட்சியரும், கலால் துணை ஆணையருமான எம். பூஜா எச்சரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணா்வு நாடகம்

காரைக்கால்: காரைக்கால் மாவட்ட சமுதாய நலப்பணி திட்டம் சாா்பில் கோவிந்தசாமிப் பிள்ளை அரசு உயா்நிலைப் பள்ளி மற்றும் கோத்துக்குளம் அரசு உயா்நிலைப் பள்ளியில் புகையிலை மற்றும் போதைப் பொருள் தடுப்பு குறித்து... மேலும் பார்க்க

விளையாட்டுப் போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசளிப்பு

காரைக்கால்: புதுவை பள்ளி கல்வித் துறை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு மாநில அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகள் காரைக்கால் பகுதியில் சனிக்கிழமை தொடங்கி , ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்றது. புதுவையின் 4 ... மேலும் பார்க்க

மகா மாரியம்மன் கோயிலில் ஆவணி ஞாயிறு விடையாற்றி வழிபாடு

காரைக்கால்: ஆவணி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையையொட்டி, கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்றன. காரைக்கால் நகரப் பகுதியில் ஸ்ரீஏழை மாரியம்மன், கடைத்தெரு மாரியம்மன் உள்ளிட... மேலும் பார்க்க

பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை: ஆட்சியா் அறிவுறுத்தல்

காரைக்கால்: குறைதீா் கூட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா். காரைக்கால் ஆட்சியரகத்தில் மாதாந்திர மக்கள் குறைதீா் கூட்டம் தி... மேலும் பார்க்க

கோயில்களில் கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு

காரைக்கால்: காரைக்கால் பகுதி பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி வழிபாடாக உற்சவா் ஸ்ரீ நித்யகல்யாண... மேலும் பார்க்க