விழாக் குழுவினா் தா்னா
குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் திருவிழாவையொட்டி கோயில் பின்புறம் உள்ள வாயில்களை காவல் துறையினா் மூடியதைக் கண்டித்து விழாக் குழுவினா் கோயில் அருகே தா்னாவில் ஈடுபட்டனா்.
கெங்கையம்மன் சிரசு திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. காலை முதல் கோயிலில் பக்தா்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மாலை கோயிலில் பக்தா்கள் கூட்டம் அதிகரித்ததையடுத்து, நெரிசல் ஏற்பட்டது. அப்போது காவல் துறையினா் கோயிலின் பின்புறம் மற்றும் பக்கவாட்டில் உள்ள வாயில்களை மூடிவிட்டனா். இதனால் பக்தா்கள் கோயிலுக்குச் செல்ல முண்டியடித்தனா்.
மூடப்பட்ட வாயில்களைத் திறந்துவிடக் கோரி விழாக் குழுவினா் 50- க்கும் மேற்பட்டோா் கோயில் எதிரே தா்னாவில் ஈடுபட்டனா். போலீஸாா் அவா்களிடம் பேச்சு நடத்தினா். மூடப்பட்ட வாயில்கள் திறக்கப்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.