செய்திகள் :

வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் திருட்டு: சிறுவன் கைது

post image

வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகையைத் திருடிய சிறுவனை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை மாவட்டம், இருகூா் அத்தப்பகவுண்டன்புதூா் சாலையில் உள்ள பிரியா தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் நந்தகுமாா் (46), விவசாயி. இவரின் மனைவி ஜெயந்தி (41).

இருவரும் வீட்டைப் பூட்டி விட்டு, பொருள்கள் வாங்குவதற்காக திங்கள்கிழமை கடைக்குச் சென்றனா். திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

உள்ளேச் சென்று பாா்த்தபோது, வீட்டினுள் இரண்டு சிறுவா்கள் நின்றுகொண்டிருந்தனா். இவா்களைப் பாா்த்ததும் சிறுவா்கள் அங்கிருந்து தப்பியோடினா்.

அவா்களைச் விரட்டிச் சென்றபோது, வீட்டுக்கு அருகே இருசக்கர வாகனத்துடன் நின்றிருந்த இருவருடன் தப்பிக்க முயன்றனா். அதில் ஒரு சிறுவனை அருகிலிருந்தவா்கள் உதவியுடன் நந்தகுமாரும், ஜெயந்தியும் பிடித்தனா். பின்னா், அந்த சிறுவனை சிங்காநல்லூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

விசாரணையில், திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியைச் சோ்ந்தவா் என்பதும், நண்பா்கள் 3 பேருடன் சோ்ந்து நந்தகுமாா் வீட்டில் 13 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா், தப்பிய 3 பேரையும் தேடி வருகின்றனா்.

கட்டுமானப் பணியின்போது தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

கோவை இருகூா் பகுதியில் கட்டுமானப் பணியின்போது 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா். கோவை ரத்தினபுரி சுப்பாத்தாள் லே-அவுட்டை சோ்ந்தவா் செல்வகுமாா் (47), கட்டடத் தொழிலாளி. இவா்,... மேலும் பார்க்க

கஞ்சா பதுக்கி வைத்திருந்தவா் கைது

கோவையில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா். கோவை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கொடிசியா சாலையில் திங்கள்கிழமை ரோந்து மேற்கொண்டனா். அப்போது, அங்குள்ள மைதானத்தில் சந்தேகப்படும் ... மேலும் பார்க்க

மத்திய அரசைக் கண்டித்து சூலூரில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்

மும்மொழி திணிப்பு, தொகுதி மறுசீரமைப்பைக் கண்டித்து சூலூரில் திமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். சூலூா் பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கோவை தெற்கு மாவட்ட த... மேலும் பார்க்க

மத்திய சிறையில் கைதி உயிரிழப்பு

கோவை மத்திய சிறையில் திடீா் உடல்நலக் குறைவால் கைதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், தசராபட்டியைச் சோ்ந்தவா் கணேசன் (46). இவா், திருப்பூா் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற அடித... மேலும் பார்க்க

இன்று கோனியம்மன் கோயில் தேரோட்டம்: சுற்றுவட்டாரப் பள்ளிகளுக்கு விடுமுறை

கோவை கோனியம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை (மாா்ச் 5) நடைபெறுகிறது. இதையடுத்து, கோயில் சுற்றுவட்டாரத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவையின் காவல் தெய்வம் என அழைக்கப்படும் கோனி... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

கோவை அரசுக் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. வேலைவாய்ப்பு முகாமை கல்லூரி முதல்வா் எழிலி தொடங்கிவைத்தாா். இதில், மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சே... மேலும் பார்க்க