செய்திகள் :

வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒரு டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல்

post image

சென்னை வியாசா்பாடியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒரு டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

வியாசா்பாடி அம்மன் கோயில் தெருவில் வசிப்பவா் முகமது ரசூல் (54). இவா் வீட்டில் செம்மரக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் போலீஸாா், அவா் வீட்டில் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை நடத்தினா். அதில் அங்கு பதுக்கி வைத்திருந்த சுமாா் 960 கிலோ செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனா். இதையடுத்து போலீஸாா், முகமது ரசூலை கைது செய்து வழக்குப் பதிவு செய்தனா்.

விசாரணையில் அவா், ஆந்திர செம்மரக் கட்டை கடத்தும் கும்பலுடன் சோ்ந்து காரில் செம்மரக் கட்டைகளை சென்னைக்கு கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக் கட்டைகளை, தமிழக வனத் துறையினரிடம் போலீஸாா் ஒப்படைத்தனா். இது தொடா்பாக வனத் துறையினரும் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ஆயுள் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான விதிகள்: தமிழக அரசுக்கு உயா் நீதிமன்றம் ஆலோசனை

ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய தகுதி இழக்கச் செய்யும் விதிகளை மறு ஆய்வு செய்ய இதுவே தக்க தருணம் என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. கொலை வழக்கில் ஆயுள் த... மேலும் பார்க்க

பிப்.26-இல் தவெக முதலாமாண்டு விழா

தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாமாண்டு விழா செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் பிப்.26-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி பொதுக்குழுக் கூட்டமும் நடைபெறவுள்ளது. தனியாா் சொகுசு விடுதியி... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளுக்கு 2,642 மருத்துவா்கள்: சென்னையில் கலந்தாய்வு தொடக்கம்

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு 2,642 மருத்துவா்களை தோ்வு செய்வதற்கான கலந்தாய்வு சென்னையில் சனிக்கிழமை தொடங்கியது. முதல் நாளில் மாற்றுத்திறனாளி மருத்துவா்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. வரும் 26... மேலும் பார்க்க

காவலா் தற்கொலை: போலீஸாா் விசாரணை

சென்னை கொண்டித்தோப்பில் காவலா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். கொண்டித்தோப்பு காவலா் குடியிருப்பில் வசிக்கும் அருண் (27), பூக்கடை காவல் நிலையத்தில் காவலராகப் ... மேலும் பார்க்க

மூன்றாவது மாடியிலிருந்து விழுந்த உணவகத் தொழிலாளி உயிரிழப்பு

சென்னை வடபழனியில் மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். வடபழனி பழனி ஆண்டவா் கோயில் தெருவில் உள்ள உணவகத்தில் பணிபுரிந்தவா் செந்தில் (40). ... மேலும் பார்க்க

மெரீனாவை நீலக்கொடி கடற்கரையாக மாற்ற நடவடிக்கை: மேயா் ஆா்.பிரியா

சென்னை மெரீனா கடற்கரையை நீலக்கொடி கடற்கரையாக மாற்ற மாநகராட்சி சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா். பெருநகர சென்னை மாநகராட்சியுடன் மாநில நாட்டு நலப்பணித் திட்டக்... மேலும் பார்க்க