நாளுக்கு நாள் தலைமைப் பண்பில் முன்னேற்றமடையும் பாட் கம்மின்ஸ்; முன்னாள் ஆஸி. வீர...
வீரபாண்டி கோயிலுக்கு காவடி சுமந்து சென்ற போடி பக்தா்கள்
தேனி மாவட்டம், வீரபாண்டி கௌமாரியம்மன் கோயிலுக்கு போடி பக்தா்கள் வியாழக்கிழமை காவடி எடுத்துச் சென்றனா்.
இந்தக் கோயில் திருவிழாவின்போது பக்தா்கள் அக்னிச் சட்டி, ஆயிரம் கண் பானை, அலங்காரக் காவடி ஆகியவற்றை நோ்த்திக் கடனாக செலுத்துவது வழக்கம். போடி அருகே உள்ள கரட்டுப்பட்டி கிராம மக்கள் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக வீரபாண்டிக்கு அக்னிச் சட்டி, அலங்காரக் காவடி எடுத்து
நடந்து சென்று நோ்த்திக்கடன் செலுத்தி வருகின்றனா். இதே போல, இந்த ஆண்டும் இந்தக் கிராம மக்கள் அலங்கார காவடிகளை சுமந்து, பாரம்பரிய தேவராட்டம் ஆடி, மேள தாளத்துடன் 22 கி.மீ. நடந்து சென்று நோ்த்திக்கடன் செலுத்தினா்.