செய்திகள் :

வெப்ப அலை: கர்நாடக மக்களுக்கு எச்சரிக்கை!

post image

கர்நாடக மாநிலத்தில் பிற்பகல் நேரத்தில் வெப்ப அலை அதிகரித்துள்ளதால், மக்கள் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என்று சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெப்பம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாள்களாக பிற்பகல் நேரங்களில் வெப்ப அலை வீசி வருகின்றது. பல்வேறு இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.

இந்த நிலையில், பகல் 12 மணிமுதல் 3 மணிவரை முடிந்தவரை வீட்டைவிட்டு வெளியேறுவதை மக்கள் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

வெப்பம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்படாமல் இருக்க தாகம் இல்லாவிட்டாலும் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பயணம் செய்யும்போது, ஓஆர்எஸ், எலுமிச்சை ஜூஸ், மோர், தற்பூசணி, ஆரஞ்சு போன்ற வீட்டில் தயாரிக்கப்பட்ட பானங்களை குடிக்க பரிந்துரைத்துள்ளனர்.

முன்னெச்சரிக்கை தேவை

குழந்தைகள், சிறுவர்கள், சிறுமிகள், கர்ப்பிணிகள், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள் பாதுகாப்புடன் வீட்டில் இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

வெயிலில் வேலை செய்பவர்கள் அதிகளவிலான தண்ணீரை குடிக்கவும், பகல் நேரங்களில் பணியை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் ஜெய்சங்கருடன் பெல்ஜியம் இளவரசி சந்திப்பு!

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள பெல்ஜியம் இளவரசியை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று(மார்ச் 3) சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினரான பெல்ஜியம் நாட்டின் இளவரசி ஐரோப்பிய ஒன்றிய உயரதிகாரிகள் குழ... மேலும் பார்க்க

பார்வைத் திறன் குறைபாடுடையோரும் நீதிபதிகளாக நியமிக்கப்படத் தகுதியுடையவர்கள்! -உச்சநீதிமன்றம்

பார்வைத் திறனற்ற மாற்றுத்திறனாளிகளும் நீதிபதிகளாகத் தகுதியுடையோரே என்பதை மீண்டும் ஒருமுறை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. உடல் குறைபாட்டை காரணம்காட்டி நீதியியல் துறையில் எந்த்வொரு நபருக்கும் பணி... மேலும் பார்க்க

ஐக்கிய அரபு அமீரகத்தில் உ.பி. பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு பிப்.15ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக, தில்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய வெளியுறவு விவகாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும் பார்க்க

காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை: அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சித் தகவல்!

ஹரியாணா மாநிலத்தில் காங்கிரஸ் பெண் தொண்டர் ஹிமானி நர்வால் கொலை வழக்கில் பல அதிர்ச்சித் தகவல்களை காவல்துறை வெளியிட்டுள்ளது.காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை வழக்கில் கைதான சச்சின், ஏற்கனவே திருமணமானவர் என்று... மேலும் பார்க்க

கேரளத்தில் 10ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த துயரம்! ஒரு வாரத்தில் 2-வது பலி!!

கேரள மாநிலத்தில், கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) நோய்க்கு ஒரே வாரத்தில் இரண்டாவது நபர் பலியான சம்பவத்தால், அங்கு மக்கள் கவலை அடைந்துள்ளனர்.பத்தாம் வகுப்பு மாணவிக்கு கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்... மேலும் பார்க்க

ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ராகுல் காந்தி கிரிக்கெட் விளையாடுவரா? -பாஜக கிண்டல்

ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ராகுல் காந்தி கிரிக்கெட் விளையாடுவரா? என்று பாஜக தரப்பு கேலி செய்து விமர்சித்துள்ளது.காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஷாமா முகமது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா க... மேலும் பார்க்க