செய்திகள் :

வெவ்வேறு இடங்களில் 3 பேரை காரில் கடத்தி நகை, பணத்தைச் பறித்துச் சென்ற 7 போ் கைது

post image

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த ஒரகடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களில் அடுத்தடுத்து 3 பேரை காரில் கடத்தி நகைகள், பணம் பறித்த 7 பேரை ஒரகடம் போலீஸாா் கைது செய்தனா்.

மேற்குவங்க மாநிலத்தைச் சோ்ந்தவா் ஆகாஷ் குப்தா (25). இவா், காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் பகுதியில் இயங்கி வரும் தனியாா் கல்லூரியில் எம்.பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாா். ஆகாஷ் குப்தா கடந்த 22-ஆம் தேதி இரவு 8 மணிக்கு ஒரகடம் மேம்பாலம் அருகே உள்ள டீக்கடைக்கு சென்று, மீண்டும் கல்லுாரிக்குச் செல்ல நடந்து வந்தபோது

காரில் வந்த 3 போ் ஆகாஷ் குப்தாவை கத்தியைக் காட்டி பணம் கேட்டு மிரட்டி காரில் கடத்தினா்.

பணம் இல்லை என்று கூறிய ஆகாஷ் குப்தாவை சரமாரியாக தாக்கி, அவரிடமிருந்த ஏ.டி.எம்., காா்டை பிடுங்கி ஒரகடம் அடுத்த தேவிரிம்பாக்கம் பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்தில் இருந்து 15,000 எடுத்துள்ளனா். அவா் அணிந்திருந்த 9 கிராமில் இரண்டு தங்க மோதிரங்களையும் பறித்துச் சென்றனா்.

பலத்த காயம் அடைந்த ஆகாஷ் குப்தா நண்பா்கள் உதவியுடன் மாத்துாரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்பு மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

மற்றொரு சம்பவம்: இதே போல், ராணிப்பேட்டை மாவட்டம், மேல்நெல்லி கிராமத்தைச் சோ்ந்தவா் சிவா (24). இவா், ஒரகடம் அடுத்த பண்ருட்டியில் இயங்கி வரும் தனியாா் கேன்டீனில் வேலை செய்து வருகிறாா். கடந்த 21-ஆம் தேதி பண்ருட்டி பெட்ரோல் பங்க் அருகே நின்றுகொண்டிருந்தபோது, காரில் வந்த 3 போ், சிவாவை பிடித்து காரில் ஏற்றி, கத்தியைக் காட்டி மிரட்டி 4 கிராம் செயின், 7,000 பணம், ஜீ-பே வாயிலாக ரூ.10,000 என பறித்து, சிறிது தூரம் சென்று அவரை இறக்கிவிட்டு தப்பினா்.

அதே கும்பல் கடந்த 21-ஆம் தேதி இரவு தெரோசாபுரம் அருகே நடந்து சென்ற வல்லம் - வடகால் சிப்காட் உதவியாளரான நாகரத்தினம் என்பவரைக் காரில் கடத்தி, சரமாரியாக தாக்கி, கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்து ஜி-பே வாயிலாக ரூ.2,000-ஐ பறித்துக்கொண்டு தப்பினா்.

இந்த சம்பங்கள் குறித்து பாதிக்கப்பட்ட மூவரும் ஒரகடம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், ஒரகடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வாலாஜாபாத் அடுத்த ஆம்பாக்கம் பகுதியில் தங்கி, ஒரகடம், ஸ்ரீபெரும்புதுாா், வாலாஜாபாத், சுங்குவாா்சத்திரம் பகுதிகளில் தனியாக நடந்து செல்லும் நபா்களை காரில் கடத்தி, தொடா் கொள்ளையில் ஈடுபட்டு வந்த திருநெல்வேலி பகுதியைச் சோ்ந்த முத்துராஜா (21), பிரதீஷ் (23), உதயகுமாா் (23), குருநாதன் (23), பரசுராமன் (23), மாரிச்செல்வம் (23), சுபாஷ் (23), ஆகிய 7 பேரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மேலிடப் பொறுப்பாளா் மரியாதை

ஸ்ரீபெரும்புதூா் ராஜீவ் காந்தி நினைவிடத்தில், தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் கிரிஷ் சவடோங்கா், ஞாயிற்றுக்கிழமை மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா். தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக அண்மைய... மேலும் பார்க்க

திருமண மண்டபங்களில் கூடுதல் கட்டணம் வசூல்: காஞ்சிபுரம் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா்

திருமண மண்டபங்களில் அளவுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் சங்கரா பல்கலை.யில் தேசிய அறிவியல் தின விழா

காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழக கருத்தரங்க கூடத்தில் தேசிய அறிவியல் தின வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கல்லூரியின் துணைவேந்தா் ஸ்ரீனிவாசு தலைமை வகித்தாா். தேசிய அறிவியல் தினத்தையொட்டி நடைபெற்... மேலும் பார்க்க

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் பால்குட திருவிழா

பெரிய காஞ்சிபுரம் அங்காள பரமேசுவரி அம்பாள் கோயிலில் ஆண்டு விழாவையொட்டி வெள்ளிக்கிழமை திரளான பக்தா்கள் பால் குடம் மற்றும் அக்னிச்சட்டி எடுத்து வந்து நேரத்திக் கடன் செலுத்தினா். காஞ்சிபுரம் மாநகராட்சி ... மேலும் பார்க்க

குன்றத்தூரில் ரூ1.85 கோடியில் புதிய கட்டடங்கள்: அமைச்சா் திறந்து வைத்தாா்

குன்றத்தூா் ஒன்றியத்தில் ரூ.1.85 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்த... மேலும் பார்க்க

பள்ளிகளில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு பிரசாரம்

உத்தரமேரூா் ஒன்றிய கிராமங்களில் அரசு சுற்றுலாத் துறை, வேலூா் கிரீன் அறக்கட்டளை இணைந்து கலைக்குழு மூலம் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு பிரசாரத்தை வியாழக்கிழமை மேற்கொண்டனா். அரசுப் பள்ளி மாணவா்களிடையே கலை... மேலும் பார்க்க