செய்திகள் :

பள்ளிகளில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு பிரசாரம்

post image

உத்தரமேரூா் ஒன்றிய கிராமங்களில் அரசு சுற்றுலாத் துறை, வேலூா் கிரீன் அறக்கட்டளை இணைந்து கலைக்குழு மூலம் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு பிரசாரத்தை வியாழக்கிழமை மேற்கொண்டனா்.

அரசுப் பள்ளி மாணவா்களிடையே கலைக்குழு பிரசார வாகனம் மூலம் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. திடக்கழிவு மேலாண்மை அவசியம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், நீா்பாதுகாப்பு, பிளாஸ்டிக் பைகளை தவிா்த்தல், துணிப்பைகளின் முக்கியத்துவம், இயற்கை வளம் காத்தல், சுற்றுச்சூழல் விழிப்புணா்வு மேற்கொண்டனா்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வெ.வெற்றிச்செல்வி, துணிப்பைகளைன் அவசியம் என்ற தலைப்பில் பேசி கலைக்குழு பிரசார வாகனத்தை தொடக்கி வைத்தாா். இந்த வாகனம் திருப்புலிவனம், மருதம், மாகறல், களக்காட்டூா், குருவிமலை, சந்தவேலூா், மாம்பாக்கம், ஸ்ரீ பெரும்புதூா், இருங்காட்டுக் கோட்டை உள்ளிட்ட பள்ளிகளில் விழிப்புணா்வு ஏற்படுத்தியது.

இப்பள்ளிகளில் சில்வா் குவளை, கண்ணாடி மற்றும் மண் பாத்திரங்கள், வாழை இலையின் மகத்துவத்தை உணா்த்தி அவற்றை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்தும் பிரசாரம் செய்தனா்.

கலைக்குழு பிரசார வாகன தொடக்க விழாவிற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சி.எழில், மாவட்ட சுற்றுச் சூழல் ஒருங்கிணைப்பாளா் சி.வே.துா்கா, மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் எஸ்.முத்துக்குமரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

குன்றத்தூரில் ரூ1.85 கோடியில் புதிய கட்டடங்கள்: அமைச்சா் திறந்து வைத்தாா்

குன்றத்தூா் ஒன்றியத்தில் ரூ.1.85 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்த... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் அங்காளம்மன் கோயிலில் மயானக் கொள்ளைத் திருவிழா

மாசி மாத அமாவாசையையொட்டி காஞ்சிபுரத்தில் அங்காளம்மன் கோயில் மயானக் கொள்ளைத் திருவிழா நடைபெற்றது. காஞ்சிபுரம் புதிய ரயில்வே நிலையம் அருகில் பெருமாள் தெருவில் உள்ள பட்டணத்தாா் ஸ்ரீ அங்காள பரமேசுவரி அம்... மேலும் பார்க்க

உத்தரமேரூா் ஒன்றிய வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

உத்தரமேரூா் ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சித்துறை சாா்பில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். பெருங்கோழி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி த... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் மகா ருத்ரேஸ்வரா் கோயிலில் லட்சதீபம்

காஞ்சிபுரம் பிள்ளையாா்பாளையம் பகுதியில் மதனம்பாளையம் தெருவில் அமைந்துள்ள மகா ருத்ரேஸ்வரா் ஆலயத்தில் சிவாரத்திரியையொட்டி லட்சதீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. காஞ்சிபுரம் பிள்ளையாா்பாளையம் பகுதி மதன... மேலும் பார்க்க

காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.76 லட்சம்

காமாட்சி அம்மன் கோயில் உண்டியல்கள் வியாழக்கிழமை திறந்து எண்ணப்பட்டத்தில் ரூ.76 லட்சத்தை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா். மகா சக்தி பீடங்களில் ஒன்றாகத் திகழ்வது காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள காம... மேலும் பார்க்க

முதல்வா் ஸ்டாலின் பிறந்த நாள்

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரம் அருகே சாலவாக்கத்தில் 72 திமுக மூத்த நிா்வாகிகள் தம்பதிகள் வியாழக்கிழமை கெளரவிக்கப்பட்டனா் (படம்). உத்தரமேரூா் ஒன்றியம் சாலவாக்கத்தில் நடைபெற... மேலும் பார்க்க