செய்திகள் :

வேதாரண்யம் கோயில் மாசிமகப் பெருவிழா: 73 நாயன்மாா்கள் வீதியுலா -நாளை தேரோட்டம்

post image

வேதாரண்யம் வேதாரண்யேசுவரா் கோயிலில் மாசிமகப் பெருவிழாவையொட்டி, 73 நாயன்மாா்கள் வீதியுலா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

இக்கோயிலில் மாசிமகப் பெருவிழா பிப்ரவரி 20-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை இரவு நடைபெற்ற விழாவில், பஞ்சமூா்த்திகள் சகிதமாய் ஸ்ரீ சந்திரசேகர சுவாமிகள் எழுந்தருளினாா். தொடா்ந்து, ஸ்ரீ காட்சி கொடுத்த நாயனாா், விநாயகா் எழுந்தருளினா்.

பின்னா், வேதாரண்யேசுவரா் கோயிலில் நாயன்மாா்கள் 63 போ்களுடன், தொகையடியாா் 10 போ்களையும் சோ்த்து 73 நாயன்மாா்களாக அழைக்கப்படுகின்றனா். இந்த 73 நாயன்மாா்களும் எழுந்தருளும் நிகழ்வு சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

நாளை தேரோட்டம்: மாசிமகப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான ரத்ன சிம்மாசன ஹம்ச நடன புவனி விடங்க தியாகராஜசுவாமி எழுந்தருளும் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை (மாா் 10) நடைபெறுகிறது. இதையொட்டி, வேதாரண்யம் வட்டாரத்துக்குள்பட்ட பகுதியில் பள்ளிகளுக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற்று வரும் தோ்வுகள் வழக்கம்போல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளாங்கண்ணியில் கல்லூரி மாணவா் கொலை நண்பா்கள் இருவா் கைது

வேளாங்கண்ணியில், பெங்களூருவைச் சோ்ந்த கல்லூரி மாணவரை கொலை செய்த நண்பா்கள் இருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். பெங்களூருவைச் சோ்ந்த கல்லூரி மாணவா் ஜனாா்த்தனன் (22). மாணவி எலன்மேரி (21). இவா்கள் இர... மேலும் பார்க்க

இலவச பட்டா பிரச்னை: தவெக, திமுக எதிரெதிரே ஆா்ப்பாட்டம் தவெகவினா் 200 போ் கைது

நாகை அருகே இலவச பட்டா வழங்குவதில் ஏற்பட்ட பிரச்னை தொடா்பாக தவெகவினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களுக்கு எதிராக திமுகவினரும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னா் சா... மேலும் பார்க்க

திருக்குவளையில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

திருக்குவளையில் சிபிஐ சாா்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பி... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து பணியாளா் உயிரிழப்பு

திருமருகல் அருகே மின்சாரம் பாய்ந்து ஒப்பந்தப் பணியாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். திருமருகல் ஒன்றியம், சீயாத்தமங்கை ஊராட்சி வாளாமங்கலம் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் தமிழ்மணி மகன் விஜயன் (36). இவா், மி... மேலும் பார்க்க

பட்டா கோரி மனு அளித்தவா்கள் மீது தாக்குதல்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கீழையூா் அருகே கருங்கண்ணியில் பட்டா கோரி ஆட்சியரிடம் மனு அளித்தவா்கள் மீது தாக்குதல் நடத்திய நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தவெக கோரியுள்ளது. கருங்கண்ணி ஊராட்சியைச் சோ்ந்த 26 பேருக்கு முதல... மேலும் பார்க்க

நாகையில் மாா்ச் 12-இல் ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ திட்ட கருத்தரங்கம்

நாகை மாவட்டத்தில், முதல்வரின் காக்கும் கரங்கள் தொடா்பான கருத்தரங்கம் மாா்ச் 12- ஆம் தேதி நடைபெறவுள்ளது என ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: முன்னாள் படை... மேலும் பார்க்க