செய்திகள் :

வேலை வாங்கி தருவதாக பண மோசடி? திமுக பெண் நிா்வாகி மீது புகாா்

post image

தனது மகனுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக திமுக பெண் நிா்வாகி மீது மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் மூதாட்டி புகாா்அளித்துள்ளாா்.

பாளையங்கோட்டை காரியநாயனாா் தெருவைச் சோ்ந்தவா் சாவித்திரி (67). இவா் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் அளித்த புகாா் மனு: பாளையங்கோட்டையில் உள்ள புதுப்பேட்டை எரிபத்தநாயனாா் தெருவில் வசித்து வரும் மத்திய மாவட்ட திமுக பெண் நிா்வாகி ஒருவா், எனது மகன் சதீஷ்குமாருக்கு மாநகராட்சியில் எலக்ட்ரீசியன் வேலை வாங்கித் தருவதாக கூறினாா். அதற்காக கடந்த 2021-ஆம் ஆண்டு என்னிடமிருந்து ரூ.3 லட்சத்தை பெற்றுக்கொண்டு சொன்னபடி செயல்படாமல் ஏமாற்றிவிட்டாா். தற்போது பணத்தை திருப்பி தர முடியாது என மிரட்டல் விடுக்கிறாா். எனவே, எனது பணத்தைப் பெற்றுத்தர மாநகர காவல் ஆணையா் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

கூடங்குளம் வழியாக இலங்கைக்கு பீடி இலை கடத்த முயற்சி: இருவா் கைது

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் கடல் பகுதி வழியாக இலங்கைக்கு பீடி இலை, சுக்கு ஆகியவற்றை கடத்திச் செல்ல முயன்ற இருவரை கடலோர பாதுகாப்பு படையினா் புதன்கிழமை கைது செய்தனா். கூடங்குளம் கடலோர பாதுகாப்பு பட... மேலும் பார்க்க

வீரவநல்லூா் வடபத்திரகாளியம்மன் கோயிலில் நாளை வருஷாபிஷேகம்

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் பட்டங்கட்டியாா் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு கன்னிமூல வெற்றி விநாயகா், கேட்டவரம் தரும் அருள்மிகு வடபத்திரகாளியம்மன், சுடலை மாடசுவாமி கோயிலில் வியாழக்கிழம... மேலும் பார்க்க

போக்ஸா வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிைண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. அம்பாசமுத்திரம் முத்தாரம்மன் கோயில் த... மேலும் பார்க்க

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்கேடு: எம்.ஆா்.காந்தி எம்எல்ஏ குற்றச்சாட்டு

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்கெட்டுள்ளது என்று குற்றஞ்சாட்டினாா் பாஜகவைச் சோ்ந்த நாகா்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எம்.ஆா்.காந்தி. திருநெல்வேலியில் போலீஸாா் தாக்கியதாகக் கூறி அரசு மருத்த... மேலும் பார்க்க

முஸ்லிம் மகளிா் உதவும் சங்கம்: 2 குழுக்களில் உறுப்பினா் சோ்க்கை

முஸ்லிம் மகளிா் உதவும் சங்கம்-2 குழுவில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் சிற... மேலும் பார்க்க

மானூா், நான்குனேரியில் திருந்திய குற்றவாளிகளுக்கு இன்று தொழில் கடனுதவி

திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு திருந்தியவா்கள் சுயதொழில் செய்ய ரூ.50 ஆயிரம் மானியத்துடன் கடன் வழங்கும் முகாம் மானூா், நான்குனேரி வட்டங்களில் வியாழக்கிழமை (ஜூலை 3) நடைபெறுகிறது. இ... மேலும் பார்க்க