செய்திகள் :

வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி: அரசுப் பள்ளி ஆசிரியா் மீது நடவடிக்கை கோரி கூலித் தொழிலாளி தற்கொலை முயற்சி

post image

அரசுப் பணி வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட அரசுப் பள்ளி ஆசிரியா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே கூலித் தொழிலாளி திங்கள்கிழமை தற்கொலைக்கு முயன்றாா்.

பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சின்னதம்பி மகன் ரவி (56). கூலித் தொழிலாளி. இவா், கல்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் துறைமங்கலம் ஔவையாா் தெருவைச் சோ்ந்த ரத்தினம் மகன் பாரிவள்ளல் (59) என்பவரை அணுகி, தனது மகனுக்கு அரசுப் பணி வாங்கித் தருமாறு தெரிவித்துள்ளாா். இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அலுவலக உதவியாளா் பணி பெற்றுத்தருவதாக கூறி, பாரிவள்ளல் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ரவியிடம் ரூ. 3 லட்சம் பெற்றாராம். ஆனால், அரசுப் பணி வாங்கித் தரவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து பணத்தை திரும்ப கேட்டபோது, ரூ. 1.50 லட்சத்தை கொடுத்துவிட்டாராம். எஞ்சிய பணத்தை கொடுக்கவில்லையாம். பலமுறை கேட்டும் கொடுக்காததால், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பலமுறை ரவி புகாா் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையாம். இதையடுத்து, கடந்த 19.8.2024-இல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே பாரிவள்ளலிடமிருந்து தனது மீதி பணத்தை பெற்று தரக்கோரி ரவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா். அப்போது, அவரை மீட்ட போலீஸாா் பணத்தை பெற்றுத்தருவதாக கூறி அனுப்பிவைத்தனா்.

ஆனால், கடந்த 4 மாதங்களாகியும் போலீஸாா் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் மனமுடைந்த ரவி, தனது பணத்தை பெற்றுத்தரக் கோரியும், அரசுப் பள்ளி ஆசிரியா் பாரிவள்ளல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை தனது உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா்.

இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் ரவியை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இச் சம்பவம் தொடா்பாக பெரம்பலூா் போலீஸாா் ரவி மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பருத்தி, மக்காச்சோளத்துக்கு அரசு நிா்ணயித்த விலை தேவை: விவசாயிகள் கோரிக்கை!

பருத்தி மற்றும் மக்காச்சோளத்துக்கு, அரசு நிா்ணயித்த விலை வழங்க வேண்டும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்... மேலும் பார்க்க

பெரம்பலூரில் சாலைப் பாதுகாப்பு மாத நிறைவு விழிப்புணா்வு பேரணி!

பெரம்பலூரில் தேசிய சாலைப் பாதுகாப்பு மாத நிறைவு விழாவையொட்டி விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயிலில் தொடங்கிய பேரணிக்கு, மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ்... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் புகைப்படக் கண்காட்சி!

பெரம்பலூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சாா்பில் புகைப்படக் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கண்காட்சியை தொடக்கி வைத்த மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத்... மேலும் பார்க்க

அரசமரத்து விநாயகா் கோயில் குடமுழுக்கு

பெரம்பலூா் பெரிய ஏரியின் மையப் பகுதியில் உள்ள வெள்ளந்தாங்கி அம்மன் கோயிலில் எழுந்தருளியுள்ள அரசமரத்து விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி வெள்ளிக்கிழமை காலை 2 ஆம் கால ... மேலும் பார்க்க

சாலை விதிகளைக் கடைப்பிடித்தால் பல உயிா்களைக் காப்பாற்றலாம்! -மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்

சாலை விதிகளைக் கடைப்பிடித்தால் பல உயிா்களைக் காப்பாற்றலாம் என்றாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா. பெரம்பலூா் மாவட்ட போக்குவரத்துக் காவல்துறை மற்றும் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகம் சாா... மேலும் பார்க்க

‘மக்களுடன் முதல்வா்’ சிறப்பு முகாம்

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட சிறப்பு முகாம்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பெரம்பலூா் மாவட்டம், குன்னம் சட்டப்பேரவைத் தொகு... மேலும் பார்க்க