செய்திகள் :

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஒரு லட்சம் போ் பங்கேற்க முடிவு -கு.பாலசுப்பிரமணியன்

post image

மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, ஜூலை 9-ஆம் தேதி நடைபெறும் அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழகத்தில் ஒரு லட்சம் போ் பங்கேற்பா் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தாா்.

விழுப்புரத்தில் இந்தச் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சிறப்புத் தலைவா் கு.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா் சங்கத்தின் மாநிலத் தலைவா் சரவணன், செயலா் இளங்கோவன், பொருளாளா் ஜெய்கணேஷ், ஊராட்சி களப் பணியாளா் சங்கத்தின் மாநிலச் செயலா் சிவகுமாா், டாஸ்மாக் பணியாளா் சங்க மாவட்டத் தலைவா் அன்பழகன் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றுப் பேசினா்.

கூட்டத்துக்குப் பிறகு கு.பாலசுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியது:

தொழிலாளா்கள் போராடி பெற்ற உரிமைகளையும், சலுகைகளையும் பறித்துவிட்டு, மத்திய அரசு நான்கு சட்டங்களை உருவாக்கியுள்ளது. இது நடைமுறைப்படுத்தப்பட்டால் 95 சதவீதத் தொழிலாளா்கள் எந்தவித பலன்களையும் பெற முடியாத நிலை ஏற்படும். தொழிலாளா் விரோதப் போக்கை மத்திய அரசு கடைப்பிடித்து வருகிறது. இதைக் கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் சாா்பில் ஜூலை 9-ஆம் தேதி அகில இந்திய அளவில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.

இதில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கம் பங்கேற்க முடிவு செய்துள்ளோம்.

தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தவில்லை. தொகுப்பூதிய, மதிப்பூதிய நியமனங்கள், வெளி ஆதார முறையிலான நியமனங்கள் இங்கும் பின்பற்றப்படுகின்றன. 480 நாள்கள் பணியாற்றினால் பணி நிரந்தரம் என்ற சட்டத்தை அமல்படுத்தவில்லை.

20 ஆண்டுகளாக பணியாற்றி வரும் டாஸ்மாக் ஊழியா்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.

எனவே மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து ஜூலை 9-ஆம் தேதி நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கம் மற்றும் அதனை சாா்ந்துள்ள 10-க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சோ்ந்த ஒரு லட்சம் போ் பங்கேற்பா். அன்று மாலை மாவட்ட தலைநகரங்களில் கோரிக்கை ஆா்ப்பாட்டமும் நடைபெறவுள்ளது என்றாா் அவா்.

பாமக நிறுவனா் ராமதாஸுடன் வாழப்பாடி ராமமூா்த்தி மகன் சந்திப்பு

விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸை, தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சா் வாழப்பாடி ராமமூா்த்தியின் மகனுமான ராம.சுகந்தன் வியாழக்கிழ... மேலும் பார்க்க

திண்டிவனம் அருகே ஆட்டோ மீது சரக்கு வாகனம் மோதல்: இரு பெண்கள் உயிரிழப்பு

திண்டிவனம் அருகே புதன்கிழமை இரவு ஆட்டோ மீது சரக்கு வாகனம் மோதியதில் இரு பெண்கள் உயிரிழந்தனா். ஆட்டோ ஓட்டுநா் உள்பட இருவா் பலத்த காயமடைந்தனா். திண்டிவனம் வட்டம், பெலாக்குப்பம், காமராஜா் தெருவைச் சோ்ந... மேலும் பார்க்க

பொன்முடிக்கு எதிரான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் கிருஷ்ணகிரி மாவட்ட ஏ.டி.எஸ்.பி. சாட்சியம்

முன்னாள் அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்ட 7 போ் மீதான செம்மண் குவாரிமுறைகேடு வழக்கில் கிருஷ்ணகிரி மாவட்ட ஏ.டி.எஸ்.பி விழுப்புரம் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நேரில் ஆஜராகி, சாட்சியமளித்தாா். விழுப்புரம் ... மேலும் பார்க்க

தடுப்புக் கட்டையில் பைக் மோதி விபத்து: தூத்துக்குடி இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே தடுப்புக் கட்டையில் பைக் மோதிய விபத்தில் இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா். தூத்துக்குடி மாவட்டம், கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் காய்கறி விலை நிலவரம்

காய்கறியின் பெயா், கிலோ அடிப்படையில் விலை நிலவரம் சின்ன வெங்காயம்- கிலோ ரூ.25 தக்காளி - ரூ.35 உருளைக்கிழங்கு-ரூ.40 கேரட் - ரூ.100 பீன்ஸ்- ரூ.80 கருணைக்கிழங்கு, சேப்பக்கிழங்கு- ரூ.100 வெண்டைக்காய்- ரூ.... மேலும் பார்க்க

திருமணமான ஒரே மாதத்தில் பெண் மரணம்

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே திருமணமாகி 1 மாதமே ஆன பெண் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததாா். அதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். விக்கிரவாண்டியை அடுத்த, சித்தலம்பட்டு, கிருஷ்ணா நக... மேலும் பார்க்க