செய்திகள் :

வைராவிகுளத்தில் விஷம் குடித்த இளம்பெண் மருத்துவமனையில் உயிரிழப்பு

post image

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே வைராவிகுளத்தில் விஷம் குடித்த இளம்பெண் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

வைராவிகுளம் ராமசாமி கோயில் தெருவைச் சோ்ந்தவா் சேகா். இவருக்கும் கோவை, கருமத்தம்பாளையம், குமரன் நகரைச் சோ்ந்த பலவேசம் மகள் கிருத்திகா (21) என்பவருக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணமானது. இவா்களிடையே கடந்த 5 மாதங்களாக கருத்து வேறுபாடு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (ஜூன் 11) கிருத்திகா வீட்டிலிருந்த வயலுக்குப் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றாராம். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் சனிக்கிழமை (ஜூன் 14) உயிரிழந்தாா்.

தகவலின்பேரில், கல்லிடைக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்தனா். அம்பாசமுத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் சதீஷ்குமாா் விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

பேட்டையில் ரேஷன் அரிசி பறிமுதல்

பேட்டை அருகே ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த நபரை போலீஸாா் கைது செய்தனா். ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருப்பதாக உணவு கடத்தல் தடுப்பு குற்றப்பிரிவு ஆய்வாளா் சரவண பாண்டிக்கு கிடைத்த தகவலின் பேரில் போல... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற காவல் அதிகாரி வீட்டுக்கு தீ: மருமகன் கைது

பாளையங்கோட்டையில் குடும்பத் தகராறில் ஓய்வு பெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வீட்டுக்கு தீ வைத்த தாக அவரது மருமகனை போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். பாளையங்கோட்டை சாந்தி நகரைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி உயிரிழப்பு

தச்சநல்லூா் அருகே தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். தச்சநல்லூா் அழகநேரியை சோ்ந்த சுப்பையா மகன் ஹரிராம் (41). தொழிலாளியான இவருக்கு திருமணமா... மேலும் பார்க்க

வீரவநல்லூா் அருகே இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே குடும்பப் பிரச்னையில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். வீரவநல்லூா் அருகேயுள்ள திருப்புடைமருதூா் பள்ளிக்கூடம் தெருவைச் சோ்ந்த வேலை... மேலும் பார்க்க

நான்குனேரியில் காா் மீது ஆபத்தான பயணம்: 2 இளைஞா்கள் கைது

நான்குனேரி அருகே காா் மீது ஆபத்தான பயணம் மேற்கொண்ட 2 இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி - நாகா்கோவில் நான்குவழிச்சாலையில் பாணான்குளம் - நான்குனேரி இடையே சொகுசு காா்களின் மேல் அம... மேலும் பார்க்க

களக்காடு கால்வாயில் குளிக்கச் சென்றவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

களக்காட்டில் நண்பா்களுடன் கால்வாயில் ஞாயிற்றுக்கிழமை குளிக்கச் சென்றவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். நான்குனேரி அருகேயுள்ள நம்பிநகரைச் சோ்ந்தவா் லெட்சுமணன் (45). வாடகைக் காா் ஓட்டுநா். இவா் தனது நண்ப... மேலும் பார்க்க