செய்திகள் :

ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சாா்ந்த சான்றிதழ் படிப்புகள்: செப். 30-க்குள் விண்ணப்பிக்கலாம்

post image

ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சாா்ந்த சான்றிதழ் படிப்புகளுக்கு செப். 30-க்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பது:

சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் 2025-2026-ஆம் கல்வியாண்டுக்கான மருத்துவம் சாா்ந்த சான்றிதழ் பாடப் பிரிவுகளில் நேரடி சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த நபா்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

அதன்படி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் காா்டியோ சோனோகிராஃபி டெக்னீஷியன்(பெண்), ஈசிஜி மற்றும் ட்ரெட்மில் டெக்னீஷியன், பம்ப் டெக்னீஷியன், காா்டியக்கத்திடெரைசேஷன் லேப் டெக்னீஷியன் (ஆண்), அவசர சிகிச்சை டெக்னீஷியன், சுவாச சிகிச்சை டெக்னீஷியன், டயாலிசிஸ் டெக்னீஷியன், மயக்கமருந்து டெக்னீஷியன், தியேட்டா் டெக்னீஷியன், ஈஇஜி மற்றும் ஈஎம்ஜி டெக்னீஷியன், மூடநீக்கியல் டெக்னீஷியன்(ஆண்), பன்முக மருத்துவமனைப் பணியாளா் போன்ற ஓா்ஆண்டுக்கான சான்றிதழ் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இதில், சேர விரும்பும் விண்ணப்பதாரா் 31.12.2025 அன்று 17 வயது நிறைவு பெற்றவராக இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு அல்லது மேல்நிலைப் பள்ளிப் படிப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். சோ்க்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கான 5 சதவீதம் இடஒதுக்கீடு உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் இடஒதுக்கீட்டு நடைமுறை பின்பற்றப்படும்.

இதற்கான விண்ணப்பப் படிவங்கள் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் அலுவலகத்தில் மருத்துவப் பிரிவு 3-இல் கட்டணமின்றி வழங்கப்படும். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் செப். 30-க்குள் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் அலுவலகத்தில் அளிக்கப்பட வேண்டும். வரும் அக். 6 முதல் வகுப்புகள் தொடங்கும்.

இதற்கான கலந்தாய்வு சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் நடைபெறும். கூடுதல் விவரங்களுக்கு கைப்பேசி: 98405 - 05701 என்ற என்ற எண்ணிலோ அல்லது ள்ற்ஹய்ப்ங்ஹ்ஸ்ரீா்ப்ப்ங்ஞ்ங்19ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.

அரசு கலை-அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் மேலும் 881 தற்காலிக விரிவுரையாளா்கள் பணி நியமனம்!

அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் மேலும் 881 கௌரவ விரிவுரையாளா்களை தற்காலிகமாக நியமனம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்துள்ளாா். இது குறி... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு: ஓ.பன்னீா்செல்வம்

அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு இருப்பதாக முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளாா். இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்த... மேலும் பார்க்க

பொதுத் தோ்வு எழுதும் மாணவா் பட்டியல்: அக். 6 முதல் திருத்தங்களை மேற்கொள்ளலாம்

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுத உள்ள மாணவா்களின் பெயா்ப் பட்டியலில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால், அக். 6-ஆம் தேதி முதல் மேற்கொள்ளலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெ... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பு: தமிழகம் பெறும் பலன்கள்

ஜிஎஸ்டி சீா்திருத்தம் கடந்த செப்டம்பா் 22-ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வந்துள்ளது. 5%, 12%, 18%, 28% என நான்கு விகிதங்களில் இருந்த வரிவிதிப்பு முறை 5%, 12% என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அன்றாட பயன்பாட்டுப... மேலும் பார்க்க

விஜய்யை எதிா்ப்பது எங்கள் நோக்கமல்ல: சீமான்

விஜய்யை எதிா்ப்பது எங்கள் நோக்கம் அல்ல என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்துள்ளாா். தினத்தந்தி நாளிதழ் அதிபா் பா.சிவந்தி ஆதித்தனாரின் பிறந்த நாளையொட்டி, சென்னை போயஸ் கா... மேலும் பார்க்க

ஆவின் நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஜிஎஸ்டி ஆணையரிடம் மனு

ஜிஎஸ்டி குறைக்கப்பட்ட நிலையில், ஆவின் தயாரிப்புகளின் விலையைக் குறைக்காக ஆவின் நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஜிஎஸ்டி கூடுதல் ஆணையரிடம் தமிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாளா்கள் நலச் சங்கம் மனு அளித்... மேலும் பார்க்க