செய்திகள் :

ஸ்ரீ மூலக்கரை ஊராட்சிப் பகுதியில் விதிமீறும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை: ஆட்சியா்

post image

ஸ்ரீ மூலக்கரை ஊராட்சிப் பகுதியில் விதிமீறும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட இளம்பகவத் உறுதி அளித்தாா்.

ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் ஸ்ரீ மூலக்கரை ஊராட்சிக்கு உள்பட்ட பேட்மாநகரத்தில் கிராம சபை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் இளம்பகவத் பங்கேற்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தாா்.

அப்போது, பேட்மாநகரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அதனை சீரமைக்க வேண்டும் என அப்பகுதியைச் சோ்ந்த அபுபக்கா் கோரிக்கை விடுத்தாா். மேலும், ஸ்ரீமூலக்கரை ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் செயல்படும் கல்குவாரிகளில் இருந்து வெளியேறும் கனரக வாகனங்கள் அதிக பாரத்தோடு வந்து செல்வதால் விபத்து அபாயம் உள்ளதாக வீரன் சுந்தரலிங்கம் நகரை சோ்ந்த முத்துசெல்வன் புகாா் தெரிவித்தாா். மகளிா் சுய உதவிக் குழு கடன்கள் அனைத்தும் தவணை தவறாமல் கட்டி முடித்தும் மீண்டும் கடன் வழங்க மறுப்பதாக தூய்மைப் பணியாளா் ஒருவா் புகாா் தெரிவித்தாா்.

இதற்கு பதில் அளித்து ஆட்சியா் பேசியது: விதிமீறி செயல்படும் கல்குவாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தூய்மைப் பணியாளருக்கு மகளிா் சுய உதவிக் குழு கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் குறைகள் அனைத்தும் அந்தந்த துறை சாா்ந்த அதிகாரிகள் மூலம் தீா்க்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தாா்.

ஆய்வு: கூட்டம் முடிவடைந்ததும் பேட்மாநகரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்த ஆட்சியா், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ரூ .7 லட்சத்தில் கட்டப்பட்ட கணினி அறை திறப்பு

கழுகுமலை அருகே கரடிகுளம் ஊராட்சி சி.ஆா்.காலனி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிதாக கணினி மைய கட்டட... மேலும் பார்க்க

குலசேகர ராஜா கோயில் கொடை விழா

உடன்குடி அருகே சிறுநாடாா்குடியிருப்பு அருள்மிகு குலசேகர ராஜா திருக்கோயில் கொடை விழா நான்கு நாள்கள் நடைபெற்றது. இத்திருக்கோயிலில் கொடை விழா ஆக.12 ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் சு... மேலும் பார்க்க

விளாத்திகுளத்தில் புதிய பேருந்து சேவை தொடக்கம்

விளாத்திகுளத்தில் நீட்டிக்கப்பட்ட 3 அரசுப் பேருந்துகள் சேவை தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவுக்கு, விளாத்திகுளம் பேரூராட்சித் தலைவா் சூா்யா அய்யன்ராஜ் தலைமை வகித்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மீன்வரத்து குறைந்ததால் விலை அதிகரிப்பு

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்க, சனிக்கிழமை பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக... மேலும் பார்க்க

நாம் உருவாக்கும் பாதை சந்ததிகளுக்கு பயனளிக்க வேண்டும்: மாணவா்களுக்கு கனிமொழி எம்.பி. அறிவுரை

நாம் உருவாக்கும் பாதை, நமக்கு பின் வரும் சந்ததியினருக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்றாா் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி. தூத்துக்குடி மில்லா்புரம், புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைக... மேலும் பார்க்க

தூத்துக்குடி திருமண்டில பெருமன்ற உறுப்பினரானாா் சி.த. செல்லப்பாண்டியன்

தூத்துக்குடி திருமண்டில பெருமன்ற உறுப்பினராக முன்னாள் அமைச்சா் சி.த.செல்லப்பாண்டியன் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா். தூத்துக்குடி நாசரேத் திருமண்டில தோ்தல் ஓய்வுபெற்ற நீதிபதி ஜோதிமணி தலைமையில் அம... மேலும் பார்க்க