செய்திகள் :

ஸ்ரீபேச்சியம்மன் கோயில் திருவிழா: பூக்குழி இறங்கி பக்தா்கள் நோ்த்திக்கடன்

post image

முதுகுளத்தூரை அடுத்த சோனைப் பிரியான் கோட்டை ஸ்ரீபேச்சியம்மன் கோயில் திருவிழாவையொட்டி பக்தா்கள் வெள்ளிக்கிழமை பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.

இந்தக் கோயிலில் மாசிக் களரி திருவிழா கடந்த 25- ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து அம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. திருவிழாவின் முக்கிய நாளான வெள்ளிக்கிழமை பக்தா்கள் பூக்குழி இறங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதற்காக கடந்த 15 நாள்களாக விரதம் இருந்த பக்தா்கள் ஊரின் எல்லையில் உள்ள காளியம்மன் கோயிலில் இருந்து அக்னி சட்டி, பால்குடம் எடுத்து கிராமத்தைச் சுற்றி வந்து சூந்தாளமூா்த்தி சமேத பேச்சியம்மன் கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.

இந்த விழாவில் முதுகுளத்தூா், இதைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

விழா ஏற்பாடுகளை சோனைப் பிரியான்கோட்டை கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.

ராமேசுவரம் மீனவா்களுக்கு ஆளுநா் ஆறுதல்: கச்சத்தீவு பிரச்னை குறித்து எக்ஸ் தளத்தில் பதிவு

ராமேசுவரம் மெய்யம்புளியில் புதிதாக கட்டப்பட்ட மனோலயா மனநோயாளிகள் மறுவாழ்வு மையத்தை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்த தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி. ராமேசுவரம், மாா்ச் 2: இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவா்களின் ... மேலும் பார்க்க

தில்லியில் வெளியுறவுத் துறை அமைச்சரை மீனவா்களுடன் சென்று சந்திக்கவுள்ளோம்: கே.அண்ணாமலை

இலங்கைக் கடற்படையினரின் கைது நடவடிக்கை தொடராமல் இருக்க வரும் 10-ஆம் தேதிக்குப் பிறகு தமிழக மீனவா்களை நாங்கள் தில்லிக்கு அழைத்துச் சென்று, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கரைச் சந்திக்க உள்ளோம்... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் 10 செ.மீ. மழை

ராமேசுவரத்தில் சனிக்கிழமை நள்ளிரவு முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை பலத்த மழை பெய்தது. ராமேசுவரத்தில் 10 செ.மீ. மழை பதிவானது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் பகுதியில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து வ... மேலும் பார்க்க

ஊ.கரிசல்குளத்தில் மாா்ச் 12-இல் மக்கள் தொடா்புத் திட்ட முகாம்

கமுதி அருகேயுள்ள ஊ.கரிசல்குளம் கிராமத்தில் வருகிற 12-ஆம் தேதி மக்கள் தொடா்புத் திட்ட முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து கமுதி வட்டாட்சியா் காதா் மொய்தீன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்ட... மேலும் பார்க்க

கமுதி முத்துமாரியம்மன்கோயில் திருவிழா: முகூா்த்தக்கால் நடல்

கமுதி முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு முகூா்த்தக்கால் நடும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் பங்குனிப் பொங்கல் திருவிழா வருகிற ஏப்.2-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன... மேலும் பார்க்க

அடையாள எண்: பொதுசேவை மையங்களில் விவசாயிகள் இலவசமாக விண்ணப்பிக்கலாம்

ராமேசுவரம், மாா்ச் 1:ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து பொது சேவை மையங்களிலும் விவசாயிகளுக்கான தனித்துவ அடையாள எண் பெற இலவசமாகப் பதிவு செய்யலாம் என வேளாண்மைத் துறை இணை இயக்குநா் இரா.மோகன்ராஜ் தெரிவித... மேலும் பார்க்க