செய்திகள் :

ஹார்வர்டு பல்கலை.க்கு அளிக்கப்படும் வரி விலக்கு ரத்து?

post image

ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு அளிக்கப்படும் வரி விலக்கை ரத்து செய்ய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகப் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர். பல்கலைக்கழக வளாகத்தில் மக்களின் பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து அவர்கள் அவ்வப்போது போராட்டம் நடத்துவது வழக்கம்.

பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் படுகொலை செய்வதற்கு கண்டனம் தெரிவித்து நீண்ட போராட்டத்தை ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தி வருகின்றனர்.

ரூ. 19,000 கோடி நிதி நிறுத்திவைப்பு

மாணவர்களின் போராட்டங்களை தடுக்கும் நோக்கிலும் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடுவதை தடுக்கும் விதமாகவும் பல்வேறு நிபந்தனைகளை ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு டிரம்ப் அரசு விதித்தது.

“பல்கலைக்கழக மாணவர்கள் குறித்து தணிக்கை மேற்கொள்ள வேண்டும், ஆசிரியர்கள், மாணவர்கள் அமைப்புகளின் குழுத் தலைவர்களின் பின்புலம் ஆராய வேண்டும், முகக்கவசம் அணியக்கூடாது” போன்ற நிபந்தனைகள் அடங்கும்.

இந்த நிபந்தனைகளை ஏற்க முடியாது என்று ஹார்வர்டு பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்ததை தொடர்ந்து, பல்கலைக்கழகத்துக்கு வழங்க வேண்டிய ரூ. 19,000 கோடி (2.2 பில்லியன் அமெரிக்க டாலர்) நிதியை நிறுத்திவைக்க அமெரிக்க அரசு உத்தரவிட்டது.

மேலும், பல்கலைக்கழகத்துக்கான ரூ. 514 கோடி ஒப்பந்தத்தையும் முடக்குவதாக அமெரிக்க அரசு அறிவித்தது.

டிரம்ப் எச்சரிக்கை

அரசியல், சித்தாந்தம் மற்றும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் அல்லது ஆதரிப்பதை தொடர்ந்தால், ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கான வரி விலக்கு ரத்து செய்யப்பட்டு, அரசியல் நிறுவனமாக கருதப்பட்டு வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், உள்நாட்டு வருவாய் சேவை அட்டர்னி ஜெனரலிடம், ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கான வரி விலக்கை ரத்து செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ள டிரம்ப் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், அமெரிக்காவில் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் வரி விலக்கை ரத்து செய்வது மிகவும் அசாதாரணமான சூழலில் மட்டுமே நடக்கிறது.

இதற்கு முன்னதாக, மாணவர்கள் சேர்க்கையில் இனப் பாகுபாடு கொள்கை இருந்ததால், 1980-களில் கிறிஸ்தவக் கல்லூரியின் வரி விலக்கை ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : டிரம்பின் உத்தரவுக்கு பணியாத ஹார்வர்டு! ரூ. 19,000 கோடி நிதியை நிறுத்தியது அமெரிக்கா!

பாதுகாப்பு காரணங்களுக்காக எஃகு, அலுமினியம் மீது வரி விதிப்பு: இந்தியாவுக்கு அமெரிக்கா பதில்

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு, அலுமினியம் மீது அந்நாட்டின் பாதுகாப்பு கருதி வரி விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக இந்தியாவுக்கு அமெரிக்கா பதில் அளித்துள்ளது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப... மேலும் பார்க்க

யேமனில் அமெரிக்கா தாக்குதல்: 74 போ் உயிரிழப்பு

யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் துறைமுகத்தில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 74 போ் உயிரிழந்தனா். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற்குப் பிறகு யேமனில் அ... மேலும் பார்க்க

‘உக்ரைன் அமைதி முயற்சியைக் கைவிடுவோம்’

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷியாவுடனும் உக்ரைனுடனும் தாங்கள் நடத்திவரும் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் அந்த முயற்சியை முழுமையாகக் கைவிட்டுவிடுவோம் என்று அமெரிக்க வ... மேலும் பார்க்க

அணு மின் நிலையம்: ரஷியாவுடன் புா்கினா ஃபாசோ ஒப்பந்தம்

தங்கள் நாட்டில் புதிய மின் நிலையம் அமைப்பதற்காக ரஷியாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக மேற்கு ஆப்பிரிக்க நாடான புா்கினா ஃபாசோ வெள்ளிக்கிழமை அறிவித்தது. இது குறித்து அந்த நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக... மேலும் பார்க்க

இந்தியா அதிருப்தி: இலங்கை-பாகிஸ்தான் கடற்படை கூட்டுப் பயிற்சி கைவிடல்

இலங்கையின் திருகோணமலை கடற்பகுதியில் அந்நாடு மற்றும் பாகிஸ்தான் கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி கைவிடப்பட்டுள்ளது. இதுதொடா்பாக இந்தியா கவலை தெரிவித்ததைத் தொடா்ந்து, அந்தப் பயிற்சி கைவிடப்பட்டுள்ளது. இதுக... மேலும் பார்க்க

மியான்மா்: முக்கிய நகரிலிருந்து பின்வாங்கியது கிளா்ச்சிப் படை

மியான்மரின் வடக்கே அமைந்துள்ள ஷான் மாகாணத்தின் மிகப் பெரிய நகரான லாஷியோவில் இருந்து அந்த நாட்டின் முக்கிய கிளா்ச்சிப் படையான மியான்மா் தேசிய ஜனநாயகக் கூட்டணிப் படை வெள்ளிக்கிழமை பின்வாங்கியது. ராணுவத்... மேலும் பார்க்க