செய்திகள் :

ஹோலி: `வரும் வெள்ளி அன்று இஸ்லாமியர்கள் வீட்டிலேயே தொழுது கொள்ளுங்கள்’ - யோகி ஆதித்யநாத் பேசியதென்ன?

post image

எதிர்வரும் மார்ச் 14-ம் தேதி வெள்ளிக்கிழமை ஹோலிப் பண்டிகை வருகிறது. இந்தப் பண்டிகையை முன்னிட்டு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரப்பிரதேச முஸ்லிம்களுக்கு கோரிக்கை ஒன்றை முன்வைத்திருக்கிறார். அதில், ``மார்ச் 14, வெள்ளிக்கிழமை ஹோலி பண்டிகை வருகிறது. எனவே வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு செல்ல விரும்பும் முஸ்லிம்கள் அதை தவிர்த்துவிட்டு, வீட்டிலேயே தொழுதுகொள்ளுங்கள். அவர்கள் பள்ளிவாசலுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஒருவேளை பள்ளிவாசலுக்குச் தொழச் செல்பவர்கள் வண்ணங்களை தவிர்க்கக் கூடாது." என்றார்.

யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்தின் கருத்துக்கு விளக்கமளித்துப் பேசிய சம்பல் சிஓ அனுஜ் சவுத்ரி, `` ஹோலி பண்டிகை ஆண்டுக்கு ஒருமுறை வரும் பண்டிகையாகும். அதேசமயம் ஆண்டுக்கு 52 முறை வெள்ளிக்கிழமை தொழுகை நடக்கும். ஹோலியின் வண்ணங்களை யாரேனும் அசௌகரியமாக உணர்ந்தால், அந்த நாளில் அவர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கட்டும். வெளியில் வருபவர்கள் பரந்த மனப்பான்மையுடன் இருக்க வேண்டும், ஏனெனில் பண்டிகைகள் ஒன்றாகக் கொண்டாடப்பட வேண்டும். சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட மத நல்லிணக்கம் மற்றும் கடுமையான கண்காணிப்பு தேவை. ஹோலி கொண்டாட்டங்களை சுமூகமாக நடத்துவதற்காக ஒரு மாதமாக அமைதிக் குழுக் கூட்டங்கள் நடைபெறுகிறது.

இந்துக்களும் முஸ்லிம்களும் ஒருவருக்கொருவர் உணர்வுகளை மதிக்க வேண்டும். ஹோலி கொண்டாட்டங்களில் பங்கேற்க விரும்பாதவர்கள் மீது வலுக்கட்டாயமாக வண்ணங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுக்கிறோம். இஸ்லாமியர்கள் ஈத் பண்டிகைக்காக ஆவலுடன் காத்திருப்பது போல, இந்துக்கள் ஹோலியை எதிர்நோக்குகிறார்கள். மக்கள் ஒருவருக்கொருவர் வண்ணங்களை பூசி, இனிப்புகளை பகிர்ந்துகொண்டு, மகிழ்ச்சியை பரப்பி கொண்டாடுகிறார்கள். அதேபோல், ஈத் அன்று, மக்கள் சிறப்பு உணவுகளை தயாரித்து ஒருவரையொருவர் கட்டித்தழுவி கொண்டாடுகிறார்கள். இரு பண்டிகைகளின் சாராம்சம் ஒற்றுமை மற்றும் பரஸ்பர மரியாதைதான்" என்றார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

ஒன் பை டூ

ஈ.ராஜாஈ.ராஜா, சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க“அமைச்சர் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது... கடந்த அ.தி.மு.க ஆட்சியில் தங்களின் ஊழல் குற்றங்கள் வெளியே வந்துவிடக் கூடாது என்பதற்காக, உதய் மின் திட்டம் தொடங்கி ... மேலும் பார்க்க

Train Hijack: 400 பயணிகளுடன் ரயிலைக் கடத்திய கிளர்ச்சியாளர்கள்; பரபரக்கும் பாகிஸ்தான் -பின்னணி என்ன?

பாகிஸ்தானின் தென்மேற்கில் அமைந்திருக்கும் பலூச்சிஸ்தான் மாகாணத்தின் குவெட்டா பகுதியிலிருந்து பெஷாவருக்கு 400 பயணிகளுடன் சென்ற ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று (மார்ச் 11) கடத்தப்பட்டிருக்கிறது.பலூச்சிஸ்த... மேலும் பார்க்க

`இதெல்லாம்தான் நாகரிகமா..?' - மத்திய அரசை நோக்கி எம்.பி சு.வெங்கடேசன் அடுக்கும் கேள்விகள்

மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையையும், அதில் இருக்கும் மும்மொழிக் கொள்கை பெயரிலான இந்தித் திணிப்பையும் எதிர்த்து நேற்று (மார்ச் 10) தி.மு.க எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி ஆர்ப்பாட்ட... மேலும் பார்க்க

நாடாளுமன்றம் : அமளிக்கு நடுவே நிறைவேறிய இரு முக்கிய மசோதாக்கள்..! - முழு விவரம்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு, மார்ச் 10ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரின் முதல் நாளே தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மத்திய கல... மேலும் பார்க்க

Tesla : ஐரோப்பிய நாடுகளில் ‘டெஸ்லா’ வீழ்ச்சி... ட்ரம்ப் கூட்டுறவால் எலானுக்கு சரிவா? - ஓர் அலசல்

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட டெஸ்லா நிறுவனம், அதன் உரிமையாளரான எலான் மஸ்க்கின் அரசியல் நடவடிக்கையால் ஐரோப்பிய சந்தையில் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் விற்பனை சரிவை சந்தித்துள்ளது.ஐரோப்பிய ஆட்டோமொபைல் ... மேலும் பார்க்க

``மாநில அந்தஸ்து தொடர்பான 13 தீர்மானங்கள் டெல்லிக்கே சென்றதில்லை”- புதுச்சேரி சபாநாயகர் சொல்வதென்ன ?

புதுச்சேரி சட்டசபையில் நேற்று அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் செல்வம், ``புதுச்சேரி சட்டசபை கூட்டத்தொடரை 13 நாட்கள் நடத்துவதற்கு முடிவு செய்திருக்கிறோம். 12-... மேலும் பார்க்க