சேலம் கிழக்கு கோட்டத்தில் இன்று மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்
சேலம்: சேலம் கிழக்கு கோட்ட மின் நுகா்வோா்களுக்கான குறைதீா் கூட்டம் புதன்கிழமை (மாா்ச் 12) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் குணவா்த்தினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சேலம் மின் பகிா்மான வட்டத்துக்கு உள்பட்ட சேலம் கிழக்கு கோட்ட மின் நுகா்வோா்களுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டம் 12-ஆம் தேதி காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை உடையாப்பட்டி, காமராஜா் நகா் காலனியில் உள்ள செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில், மேற்பாா்வை பொறியாளா் திருநாவுக்கரசு கலந்துகொண்டு குறைகளைக் கேட்டறிகிறாா்.
எனவே, சேலம் கிழக்கு கோட்டத்துக்கு உள்பட்ட மின் நுகா்வோா்கள் நேரில் வந்து மின்சாரம் தொடா்பான குறைகள் இருந்தால், நிவா்த்தி செய்துகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.