செய்திகள் :

திருச்செந்தூரில் மாசித் தேரோட்டம்: லட்சக்கணக்கானோர் பங்கேற்பு!

post image

திருச்செந்தூரில் மாசித்திருவிழாவின் பத்தாம் நாளான இன்று காலை நடந்த தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் வடம்பிடித்துத் தேர் இழுத்தனர்.

திருச்செந்தூரில் பிரசித்தி பெற்ற மாசித்திருவிழா கடந்த மார்ச் 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் காலை, மாலையில் வீதி உலா வந்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.

தேரோட்டத்தை முன்னிட்டு காலை 7 மணிக்கு பிள்ளையார் தேர் புறப்பட்டு 7.45 மணிக்கும், தொடர்ந்து காலை 7.50 மணிக்கு சுவாமி குமரவிடங்கப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் பெரிய தேரில் எழுந்தருளி நான்கு ரதவீதிகள் வழியாக வலம் வந்து காலை 10.50 மணிக்கு மணிக்கும் நிலைக்கு வந்தது.

அதன்பின் காலை 11 மணிக்கு தெய்வானை அம்மன் தேரில் எழுந்தருளி வீதி உலா வந்து நிலைக்கு வந்தது. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்துத் தேர் இழுத்தனர்.

ஏற்பாடுகளைத் திருக்கோயில் தக்கார் ரா.அருள்முருகன், இணை ஆணையர் சு.ஞானசேகரன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

ரயில்வே திட்டங்களுக்கு நிலம் கையகம்: தமிழக அரசு விளக்கம்!

தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்குத் தேவையான நிலங்கள் விரைந்து கையகப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:தமிழ்... மேலும் பார்க்க

ஸ்மார்ட் மீட்டர்கள் கொள்முதல்: டெண்டர் கோரியது தமிழக அரசு!

ரூ. 20,000 கோடி செலவில், 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. தமிழகத்தில் வீடுகள் உள்பட அனைத்து மின் இணைப்புகளிலும் மின்நுகர்வை துல்லியமாகக் கணக்கெடுக்கவும், ... மேலும் பார்க்க

உதயநிதி ஸ்டாலின் கட்-அவுட் சரிந்து விபத்து; ஒருவர் காயம்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கட்-அவுட் சரிந்து விபத்தானதில் ஒருவர் காயமடைந்தார்.திருவள்ளூர் மாவட்டம், திருப்பாச்சூரில் மத்திய அரசைக் கண்டித்து, கண்டனப் பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த பொதுக்க... மேலும் பார்க்க

1000 பேருக்கு மகளிர் சுயஉதவிக் குழு அடையாள அட்டைகள்!

மகளிர் சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த 1000 பேருக்கு அடையாள அட்டைகளை தமிழக அரசு வழங்கியது.மகளிர் நாளையொட்டி, கடந்த வாரம் மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு புதிய நலத்திட்டங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்த... மேலும் பார்க்க

தமிழகத்தில் 2 நாள்களுக்கு வெய்யில் குறையும்!

தமிழகத்தில் இன்று வெப்பநிலை குறையக்கூடும் என்றும் நாளை 3 டிகிரி வரை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழக கடலோரப்பகுதிகளை ஓட்டிய தென்மே... மேலும் பார்க்க

'உடனே குழந்தை பெத்துக்கோங்க.. ஆனால்..' - உதயநிதி பேச்சு!

மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த குடும்பக் கட்டுப்பாட்டு முறையை செயல்படுத்திய தமிழ்நாடு, தற்போது தொகுதி மறுசீரமைப்பினால் வஞ்சிக்கப்படுவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை சேப்பாக்கத்தி... மேலும் பார்க்க