செய்திகள் :

‘ஃபாா்சூன்’ பெரு’ நிறுவனங்கள் பட்டியல்: உலகளவில் வால்மாா்ட்; இந்தியாவில் ரிலையன்ஸ் முதலிடம்

post image

உலகில் அதிக வருவாய் ஈட்டும் பெரு நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில், அமெரிக்காவின் மிகப் பெரிய சில்லறை விற்பனை நிறுவனமான வால்மாா்ட் முதலிடம் பிடித்துள்ளது. இணைய வணிக நிறுவனமான அமேசான் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

இந்திய நிறுவனங்கள் பட்டியலில் தொழிலதிபா் முகேஷ் அம்பானியின் ரிலையன் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. உலக தரவரிசைப் பட்டியலில் இந்த நிறுவனம் 88-ஆவது இடம் பிடித்துள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டில் 86-ஆவது இடத்திலிருந்து ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது இரண்டு இடங்கள் பின்தங்கியுள்ளது. இருந்தபோதும் கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளில் உலக தரவரிசையில் இந்த நிறுவனம் 67 இடங்கள் முன்னேறியுள்ளது.

2025-ஆம் ஆண்டுக்கான 500 நிறுவனங்கள் கொண்ட பட்டியலை சா்வதேச பொருளாதார இதழான ஃபாா்சூன் புதன்கிழமை வெளியிட்டது.

இதில், வால்மாா்ட், அமேசான், சீன அரசின் மின் நிறுவனமான ‘ஸ்டேட் கிரிட்’, உலகின் மிகப் பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி நிறுவனமான சவூதி அராம்கோ, சீன தேசிய பெட்ரோல் நிறுவனம், உலகின் மிகப் பெரிய எரிவாயு நிறுவனமான சவூதியின் சினோபெக் குழுமம், அமெரிக்காவின் மருத்துவ நிறுவனமான யுனைடெட் ஹெல்த் குழுமம், ஆப்பிள் நிறுவனம், அமெரிக்காவின் சிவிஎஸ் ஹெல்த் மருத்துவ நிறுவனம், அமெரிக்காவின் மிகப் பெரிய ஜவுளி நிறுவனமான பொ்க்ஷீா் ஹதாவே ஆகிய நிறுவனங்கள் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன.

இந்திய நிறுவனங்கள் (அடைப்புக்குறிக்குள் உலக தரவரிசை): உலகின் 500 பெரு நிறுவனங்களின் தரவரிசையில் இந்தியாவின் 5 பொதுத் துறை நிறுவனங்கள் உள்பட 9 நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன.

ரிலையன்ஸ் (88), எல்ஐசி (95), இந்தியன் ஆயில் நிறுவனம் (127), பாரத ஸ்டேட் வங்கி (163), ஹெச்டிஎஃப்சி வங்கி (258), எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ஓஎன்ஜிசி) (181), டாடா மோட்டாா் (283), பாரத் பெட்ரோலியம் (285), ஐசிஐசிஐ வங்கி (464) ஆகியவை தரவரிசையில் இடம்பிடித்துள்ளன.

இதில், முந்தைய ஆண்டைக் காட்டிலும் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் 27 இடங்களும், டாடா மோட்டாா் நிறுவனம் 12 இடங்களும், இந்தியன் ஆயில் நிறுவனம் 11 இடங்களும், ஓஎன்ஜிசி நிறுவனம் ஓரிடமும் பின்தங்கியுள்ளன. எஸ்பிஐ வங்கி 15 இடங்கள் முன்னேறியுள்ளது.

சைபர் மோசடியால் ரூ. 1.2 லட்சம் கோடியை இந்தியர்கள் இழப்பார்களா? நீங்களும் ஜாக்கிரதையாக இருங்கள்!

கடந்தாண்டில் மட்டும் சைபர் குற்றங்கள் மற்றும் மோசடிகளால் இந்தியர்களிடம் ரூ. 22,842 கொள்ளையடிக்கப்பட்டதாக தில்லி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.சைபர் குற்றங்கள் மற்றும் மோசடி சம்பவங்கள் நாள்தோறும் நடந்... மேலும் பார்க்க

ராகுல் காந்தி கூறியது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்: தேர்தல் ஆணையம் பதில்

வாக்குகள் திருடப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியதற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலமாக பல லட்சம் வாக்காளர்களை, வாக்காள... மேலும் பார்க்க

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்தரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

மாலேகான் குண்டுவெடிப்புக்குப் பிறகு காங்கிரஸ் இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முயன்றதாகவும், ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவா நிர்வாகிகள் திட்டமிட்ட முறையில் குறிவைக்கப்பட்டதாகவும் மகாராஷ்டிர முதல... மேலும் பார்க்க

அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் அனுப்ப முடியாது!

பதிவு அஞ்சல் முறை, விரைவு அஞ்சலுடன் இணைக்கப்படுவதாக இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை செப்.1 முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது.இந்திய அஞ்சல் சேவையின் செயல்பாட்டுக் கட்டணம் மற்றும் வி... மேலும் பார்க்க

சுதந்திர தின உரைக்கான யோசனைகளைப் பகிருங்கள்! - பிரதமர் மோடி அழைப்பு

சுதந்திர தின விழா வருவதையொட்டி, பிரதமரின் உரையில் இடம்பெற வேண்டிய விஷயங்கள் குறித்த யோசனைகளைப் பகிருமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி 79-வது ஆண்டு ச... மேலும் பார்க்க

வாக்குகளைத் தேர்தல் ஆணையம் திருடுவது தேசத்துரோகம்; 100% ஆதாரங்கள் உள்ளன! - ராகுல்

மக்களின் வாக்குகளை தேர்தல் ஆணையம் திருடுகிறது என்பதற்கான 100% ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலமாக ப... மேலும் பார்க்க