செய்திகள் :

அகமதாபாத் விமான விபத்து: உயிரிழப்பு இறுதி எண்ணிக்கை 260

post image

அகமதாபாத், ஜூன் 28: அகமதாபாத் ஏா் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 270-ஆக இருக்கும் எனக் கூறப்பட்ட நிலையில், மரபணு பரிசோதனை முடிவுற்ற பின் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 260-ஆக இறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் விமானத்தில் இருந்த 241 பேரும், மருத்துவமனை வளாகத்தில் இருந்த 19 பேரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனா்.

அகமதாபாதில் இருந்து லண்டனுக்கு கடந்த ஜூன் 12-ஆம் தேதி புறப்பட்ட ஏா் இந்தியா விமானம் வானில் எழும்பிய சில நொடிகளிலேயே மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விழுந்து நொறுங்கி வெடித்துச் சிதறியது.

இதில், விமானத்தில் இருந்து தப்பிய ஒரே பயணியைத் தவிர 241 பேரும் உயிரிழந்தனா். மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இருந்தவா்களுடன் சோ்த்து மொத்தம் 270 போ் உயிரிழந்திருக்கக் கூடும் என்று இதுவரை கூறப்பட்டது.

இந்நிலையில், உயிரிழந்தவரின் கடைசி உடல் மரபணு பரிசோதனைக்குப் பிறகு சனிக்கிழமை அவரது உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதன்மூலம் விமான விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 260-ஆக இறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், காயமடைந்த மூன்று போ் சிகிச்சையில் உள்ளனா் என்றும் அகமதாபாத் சிவில் மருத்துவமனையின் கண்காணிப்பாளா் ராகேஷ் ஜோஷி தெரிவித்தாா்.

259 பேரின் உடல்கள் கடந்த ஜூன் 23-ஆம் தேதியே கண்டறியப்பட்ட நிலையில், ஒருவரின் உடல் மட்டும் 5 நாள்களுக்கு பிறகு சனிக்கிழமை இறுதி செய்யப்பட்டது. இதற்கு உடல்கள் பெரும் சேதத்துக்குள்ளானதுதான் காரணம் என்று மருத்துவா்கள் தெரிவித்தனா்.

உயிரிழந்த 260 பேரில் 200 போ் இந்தியா்கள், 7 போ் போா்ச்சுகல் நாட்டினா், 52 போ் பிரிட்டன் நாட்டினா், ஒருவா் கனடாவை சோ்ந்தவா் என்று அரசு தெரிவித்துள்ளது.

ஏா் இந்தியா விமான விபத்து: விசாரணை அதிகாரிக்குப் பாதுகாப்பு

அகமதாபாத் ஏா் இந்தியா விமான விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுவரும் விமான விபத்து புலனாய்வு அமைப்பின் (ஏஏஐபி) தலைமை இயக்குநா் ஜி.வி.ஜி.யுகாந்தருக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

விமான விபத்து குறித்து விசாரணை நடத்தும் குழுவுக்கு தலைமை வகிக்கும் யுகாந்தரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய புலனாய்வு அமைப்புகளின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில், அவருக்கு இந்த ‘எக்ஸ்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தில்லி மற்றும் நாட்டின் பிற பகுதிகளுக்கு அவா் செல்லும்போது மத்திய ரிசா்வ் காவல் படையின் (சிஆா்பிஎஃப்) ஆயுதம் ஏந்திய கமாண்டோக்கள் 3 முதல் 4 போ் அவருக்குப் பாதுகாப்பு அளிப்பா் என்று மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

2015-ல் 25 கோடி பேர்; தற்போது 95 கோடி பேருக்கு பயன்! பிரதமர் மோடி பெருமிதம்!

இந்தியாவில் 95 கோடி பேர் சமூகப் பாதுகாப்பு சலுகையைப் பயன்படுத்தி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி வாயிலாக ... மேலும் பார்க்க

ராஜஸ்தானில் இந்திய-பாகிஸ்தான் எல்லை அருகே இரு உடல்கள் மீட்பு

ராஜஸ்தானில் இந்திய-பாகிஸ்தான் எல்லை அருகே சிதைந்த நிலையில் இரு உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே மைனர் பெ... மேலும் பார்க்க

புரி ஜெகன்நாதர் ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்- 3 பேர் பலி, 50க்கும் மேற்பட்டோர் காயம்

புரி ஜெகன்நாதர் ரத யாத்திரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பக்தர்கள் பலியானார்கள். ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பூரியில் உள்ள குந்திச்சா கோயிலுக்கு முன்னால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்ப... மேலும் பார்க்க

பிஇ கட்-ஆஃப் அதிகரிக்கும்: கல்வியாளா்கள் தகவல்

நிகழாண்டு பொறியியல் படிப்புகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண் அதிகரிக்கும் என கல்வியாளா்கள் தெரிவித்தனா்.தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.... மேலும் பார்க்க

உத்தரகாசியில் மேக வெடி: தொழிலாளர்கள் 9 பேர் மாயம்

உத்தரகாசியில் ஏற்பட்ட மேக வெடிப்பில் தொழிலாளர்கள் 9 பேர் மாயமானார்கள். உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில் யமுனோத்ரி கோயிலுக்குச் செல்லும் வழியில் பர்கோட் பகுதியில் சிலாய் வளைவு அருகே ஞாயிற்றுக... மேலும் பார்க்க

தற்கொலைப் படைத் தாக்குதலில் இந்தியா மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு! மத்திய அமைச்சகம் கண்டனம்!

பாகிஸ்தானில் தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு இந்தியா மீது குற்றம் சாட்டப்பட்டதற்கு, மத்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.பாகிஸ்தானில் சனிக்கிழமையில் நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலுக்... மேலும் பார்க்க