செய்திகள் :

அகமதாபாத் விமான விபத்து: விமானியின் மீது தவறு இருக்கிறதா? முன்னாள் கேப்டன் சொல்வதென்ன?

post image

அகமதாபாத் நகரில் கடந்த வாரம் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்துக்கு அந்த விமானியின் மீது தவறு இருக்கிறதா? என்பதைப் பற்றி ஏர் இந்தியா முன்னாள் கேப்டன் மன்மத் ரௌத்ராய் விளக்கமளித்திருக்கிறார்.

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் ரக விமானத்தை கேப்டன் சுமீத் சபர்வால்(56) இயக்கினார்.

இந்த நிலையில் அவரைக் குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் முன்னாள் கேப்டன் மன்மத் ரௌத்ராய் கூறியிருப்பதாவது: “கேப்டன் சுமீத் சபர்வாலிடம் நான் பயிற்சி பெற்றவன். அவருடன் சேர்ந்து ஒரு விமானியாக நான் ‘ஃபர்ஸ்ட் ஆஃபிஸர்’ ஆக பணியாற்றிய நாள்களில் போயிங் 777 விமானத்தை இயக்கிய அனுபவம் உள்ளது. அவர் எனக்கு அடிப்படை விஷயங்கள் பலவற்றையும் ஏராளமான நுணுக்கங்களையும் கற்றுக் கொடுத்தவர்.

அதன்பிறகு நான் ஒரு கமாண்டர் ஆக மாறினேன். ஆனால், அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். இருவரும் சேர்ந்து பல மணி நேரம் விமானம் இயக்கிய அனுபவம் உள்ளது.

விமானப் பணியில் சிறந்து விளங்கிய விமானிகளில் அவரும் ஒருவர். பணி விதிகளை முறையாகப் பின்பற்றுபவர். எவ்வித குறுக்கு வழிகளையும் பின்பற்றாதவர்.

விமானியாக அவரது கணிப்புகளும் அவர் எடுக்கும் முடிவுகளும் சக விமானியாக எனக்கு பல நேரங்களில் ஆச்சரியத்தையளிக்கும். அப்படியிருக்கும்போது, ’விமானியின் மீது தவறு இருக்கிறது. விமானியின் தவறால் விபத்து’ என்று சொல்வது நம்பும்படியாக இல்லை” என்றார்.

உ.பி.யில் முத்தமிட்டு விளையாடிய நபரின் நாக்கை கடித்த பாம்பு !

உத்தரப் பிரதேசத்தில் பாம்புக்கு முத்தமிட்டு விளையாடிய நபரை அந்த பாம்பு கடித்ததில் அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். உத்தரப் பிரதேச மாநிலம், அம்ரோஹாவைச் சேர்ந்த விவசாயி ஜிதேந்திர குமார்.... மேலும் பார்க்க

விமான விபத்தில் சிக்கினாரா இயக்குநர்? வலுசேர்க்கும் ஆதாரங்கள்!

அகமதாபாத் விமான விபத்துக்கு பிறகு காணாமல் போன இசை ஆல்பங்களை இயக்கும் மகேஷ் ஜிராவாலா என்பவர் மனைவியின் டிஎன்ஏ மாதிரிகள் பெறப்பட்டுள்ளது.அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கடந்த ... மேலும் பார்க்க

கரோனா பரவல்: புதிய அலையில் மருத்துவர்கள் கண்டறிந்த அதிர்ச்சித் தகவல்!

கரோனா.. சில ஆண்டுகளுக்கு முன்பு உலகையே உலுக்கிவிட்டு, மீண்டும் கடந்த மே மாதம் முதல் உலக நாடுகளில் தலைகாட்டத் தொடங்கியிருக்கிறது.தற்போது உலகம் முழுவதும் அதாவது 2025ஆம் ஆண்டு மத்தியில் பல்வேறு நாடுகளில்... மேலும் பார்க்க

மும்பையில் விமான சேவை பாதிப்பு: இண்டிகோ முக்கிய அறிவிப்பு

மும்பையில் கனமழை பெய்து வருவதால் விமானப் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக இண்டிகோ நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. மும்பையில் இன்று(திங்கள்கிழமை) அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருவதால் தாழ்வான ப... மேலும் பார்க்க

உத்தரகண்ட் விபத்து: தனியார் ஹெலிகாப்டர் நிறுவனம் மீது வழக்குப் பதிவு!

உத்தரகண்டில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தைத் தொடர்ந்து, ஹெலிகாப்டர் சேவை இயக்க நிறுவனமாக ஆர்யன் ஏவியேஷன் தனியார் நிறுவனம் அலட்சியமாகச் செயல்பட்டதாகக் கூறி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.கேதார்நாத் கோய... மேலும் பார்க்க

புணேவில் டெமு ரயிலில் திடீர் தீவிபத்து

புணேவில் டாண்ட்-புணே டெமு ரயிலில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டதால் பயணிகள் பீதியடைந்தனர். புணே மாவட்டத்தில் உள்ள யிவா அருகே இந்த சம்பவம் நடந்தது. இதுதொடர்பாக 55 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக... மேலும் பார்க்க