செய்திகள் :

உத்தரகண்ட் விபத்து: தனியார் ஹெலிகாப்டர் நிறுவனம் மீது வழக்குப் பதிவு!

post image

உத்தரகண்டில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தைத் தொடர்ந்து, ஹெலிகாப்டர் சேவை இயக்க நிறுவனமாக ஆர்யன் ஏவியேஷன் தனியார் நிறுவனம் அலட்சியமாகச் செயல்பட்டதாகக் கூறி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கேதார்நாத் கோயில் அருகே கௌரிகுண்ட் வனப்பகுதியில் தனியார் நிறுவன ஹெலிகாப்டர் ஞாயிற்றுக்கிழமை விழுந்து நொறுங்கித் தீப்பற்றியது. இந்தக் கோர விபத்தில் 2 வயதுக் குழந்தை உள்பட 5 பக்தர்கள், பைலட், பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் அறக்கட்டளை உறுப்பினர் என 7 பேர் உயிரிழந்தனர்.

விபத்துக்குள்ளான பெல் 407 ரக ஹெலிகாப்டர் ஆர்யன் ஏவியேஷன் என்ற தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமானது. அதன் பொறுப்பு மேலாளர் கௌசிக் பதக் மற்றும் மேலாளர் விகாஸ் தோமர் மீது சோன்பிரயாக் காவல் நிலையத்தில் பிஎஸ்பி மற்றும் விமானச் சட்டம் 1934இன் பிரிவு 10இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

இமயமலை கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரமான பாட்டாவில் உள்ள வருவாய் காவல் துணை ஆய்வாளர் ராஜீவ் நகோலியா அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மே மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 2.8% அதிகரிப்பு! இறக்குமதி 1% குறைவு!

கடந்த மே மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி மதிப்பு 2.8% அதிகரித்துள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு மே மாதத்திற்கான நாட்டின் மொத்த வணிகப் பொருட்கள் மற்றும் சேவை ஏற்றுமதி 71.12 பில்ல... மேலும் பார்க்க

சத்ரபதி சிவாஜி சிலையைத் தொடரும் துரதிருஷ்டம்: கட்டுமானத்தில் பெரிய ஓட்டை!

மும்பை: ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜி மன்னரின் சிலை நிறுவப்பட்ட இடத்தில் சிலையை தாங்கி நிற்கும் கட்டுமானத்தில் பெரிய ஓட்டை விழுந்துள்ளது. மராட்டிய பேரரசர் சிவாஜியின் புகழைப் பறைசாற்றும் வகையில், ... மேலும் பார்க்க

இது போருக்கான சகாப்தம் அல்ல: மோடி

இது போருக்கான சகாப்தம் அல்ல என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.மூன்று நாடுகளுக்கான 5 நாள்கள் அரசுமுறைப் பயணத்தின் முதல் கட்டமாக, மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான சைப்ரஸுக்கு பிரதமா் ... மேலும் பார்க்க

கேரளத்தில் கொட்டித்தீர்க்கும் பருவமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

கேரளத்தில் திங்கள்கிழமையும் இடைவிடாத பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து உள்பட மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொ... மேலும் பார்க்க

பிரதமர் மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது!

பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது திங்கள்கிழமை வழங்கப்பட்டது.மூன்று நாடுகளுக்கான 5 நாள்கள் அரசுமுறைப் பயணத்தின் முதல் கட்டமாக, மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான சைப்ரஸுக்க... மேலும் பார்க்க

கைலாஷ் மானசரோவர் யாத்திரை: சிக்கிம் வந்தடைந்த முதல் குழு!

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கான 36 பக்தர்கள் கொண்ட முதல் குழு, சிக்கிமின் தலைநகர் கேங்க்டாக்கிற்கு வந்தடைந்தது. இந்தியா-சீன ராணுவத்தினர் இடையே கல்வான் பகுதியில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து கடந்த 5 ஆண்டுக... மேலும் பார்க்க