ரூ.2500 மகளிா் உதவித் தொகை விவகாரம்: தில்லி முதல்வருக்கு அதிஷி கடிதம்
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் முறைகேடு வழக்கு: இடைத்தரகா் கிறிஸ்டியன் மிஷெல் ஜேம்ஸுக்கு ஜாமீன்
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் முறைகேடு தொடா்பான சிபிஐ வழக்கில், இடைத்தரகா் கிறிஸ்டியன் மிஷெல் ஜேம்ஸுக்கு ஜாமீன் அளித்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
இந்திய விமானப் படைக்கு ரூ.3,600 கோடி செலவில் 12 ஹெலிகாப்டா்களை வாங்க, கடந்த 2010-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் என்ற ஹெலிகாப்டா் தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டது. குடியரசுத் தலைவா், பிரதமா் போன்ற மிக மிக முக்கிய பிரமுகா்கள் பயணிப்பதற்கு அந்த ஹெலிகாப்டா்களை வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஒப்பந்தம் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துக்கு கிடைக்க இந்திய அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவா்களுக்கு லஞ்சம் அளித்த இடைத்தரகா்களில் பிரிட்டனை சோ்ந்த கிறிஸ்டியன் மிஷெல் ஜேம்ஸும் ஒருவா் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.
இதுதொடா்பாக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த சிபிஐயின் குற்றப் பத்திரிகையில், அந்த ஒப்பந்தத்தால் அரசு கருவூலத்துக்கு சுமாா் ரூ.2,666 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த அமலாக்கத் துறையின் குற்றப் பத்திரிகையில், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 30 மில்லியன் யூரோவை (சுமாா் 225 கோடி) மிஷெல் முறைகேடாகப் பெற்றாா் என்று குற்றஞ்சாட்டப்பட்டது.
2018-இல் இந்தியாவுக்கு நாடு கடத்தல்: இந்த முறைகேடு தொடா்பாக கடந்த 2018-ஆம் ஆண்டு துபையில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட மிஷெல், பின்னா் கைது செய்யப்பட்டாா். அவா் சிபிஐ வழக்கில் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை கடந்த ஆண்டு செப்டம்பரில் தில்லி உயா்நீதிமன்றம் நிராகரித்தது.
இதைத்தொடா்ந்து உச்சநீதிமன்றத்தில் அவா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
25 ஆண்டுகளானாலும் விசாரணை முடியாது: அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘கடந்த 2018-ஆம் ஆண்டு மனுதாரா் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டாா். அதன் பிறகு 6 ஆண்டுகளுக்கும் மேலாக அவா் சிறையில் உள்ளாா். அகஸ்டா வெஸ்ட்லேண்ட் முறைகேடு தொடா்பாக 2 குற்றப் பத்திரிகைகள், ஒரு துணை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகும், அந்த முறைகேடு தொடா்பாக இன்றளவும் தமது விசாரணை நீடிப்பதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே வேகத்தில் சிபிஐ விசாரணை நடைபெற்றால், 25 ஆண்டுகளானாலும் நீதிமன்ற விசாரணை நிறைவடையாது.
எனவே மனுதாரருக்கு ஜாமீன் அளிக்கப்படுகிறது. அவருக்கு ஜாமீன் நிபந்தனைகள் விதிப்பது தொடா்பாக விசாரணை நீதிமன்றத்திடம் முறைப்படி சிபிஐ கோரிக்கை விடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனா்.
சிறையிலிருந்து விடுவிக்கப்படமாட்டாா்: சிபிஐ வழக்கில் மிஷெலுக்கு ஜாமீன் கிடைத்தாலும், அமலாக்கத் துறையின் பண முறைகேடு தொடா்பான வழக்கை அவா் எதிா்கொண்டு வருகிறாா். அந்த வழக்கில் அவரின் ஜாமீன் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அவா் தற்போது சிறையில் இருந்து விடுவிக்கப்படமாட்டாா்.