செய்திகள் :

அங்கன்வாடி மையங்கள் மூடலா? - அமைச்சர் கீதா ஜீவன் மறுப்பு!

post image

தமிழ்நாட்டில் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவதாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது என்று மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவதாக செய்திகள் வெளியான நிலையில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.

இந்த நிலையில், இது தொடர்பாக அமைச்சர் பி. கீதா ஜீவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடி மையங்களில் போதிய ஊழியர்கள் இல்லாததால் குழந்தைகளை அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டுகின்றனர் எனவும், இந்த ஆண்டு மட்டும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ளன என 05.07.2025 அன்று நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும். 

அரசிற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வண்ணம் தொடர்ந்து இதுபோன்ற உண்மைக்கு புறம்பான செய்தி பிரசுரிக்கப்பட்டு வருகிறது.  இச்செய்தியின் அடிப்படையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம், தமிழகத்தில் 500 அங்கன்வாடி மையங்களை மூடுவதற்கு கண்டனத்தை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அவ்வறிக்கைகள் உண்மை நிலைக்கு புறம்பானவைகளாக உள்ளன. 

இவ்வரசு 2021-ஆம் ஆணடு பொறுப்பேற்றபோது 54,439 அங்கன்வாடி மையங்கள் மட்டுமே தமிழகத்தில் செயல்பட்டு வந்தன. முதல்வர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றபின்பு கடந்த நான்கு ஆண்டுகளில், மேலும் கூடுதலாக 44 அங்கன்வாடி மையங்கள் புதிதாக அனுமதிக்கப்பட்டு தற்போது 54,483 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்த வரை, அனைத்து குழந்தைகள் மையங்களும் தற்போது வரை சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. அவ்வெண்ணிக்கை ஒருபோதும் குறைக்கப்படாது. தேவைப்படின், கூடுதலாக அங்கன்வாடி மையங்கள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 

 மாநிலத்தின் அனைத்து  பகுதிகளையும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள்  திட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பதற்காக, ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட 54,483 அங்கன்வாடி மையங்கள்  எண்ணிக்கைக்குள், தேவையான இடத்திற்கு குழந்தைகள் மையங்களை இடமாற்றம் செய்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

அதனடிப்படையில்தான், அதிக நகரமயமாக்கல் காரணமாக இடம்பெயரும் மக்கள் தொகை        (migration population), பயனாளிகளின் வருகை ஆகியவற்றை கருத்தில் கொண்டு,  முதன்மை அங்கன்வாடி மையத்தினை  குறு மையமாகவும், குறு மையத்தினை முதன்மை அங்கன்வாடி மையமாக மாற்றிடவும், திட்டம் சென்றடையாத புதிய பகுதிகளில்,  புதிய மையங்களை துவக்கிடவும்,  குறைவான பயனாளிகள் கொண்டு அருகருகே உள்ள இரு மையங்களை இணைத்திடவும், தூரத்தில் செயல்படும் மையங்களை பயனாளிகளின் வசிப்பிடத்திற்கு அருகிலேயே புதிதாக ஆரம்பிக்கவும், மலைப்பகுதி மற்றும் யாரும் எளிதில் சென்றடைய முடியாத பகுதிகளை கண்டறிந்து புதிதாக குறு மையங்களை ஆரம்பித்திடவும், கடந்த ஆறு மாதங்களாக அங்கன்வாடி மையங்கள்  மறுசீரமைப்பு நடவடிக்கைக்காக (rationalisation exercise) புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

மேற்கூறிய யாவையும் தமிழ்நாடு அரசின் பரிசீலனையில் மட்டுமே உள்ளது. இந்த மறுசீரமைப்பு இன்னமும் நடைமுறைப்பத்தப்படவில்லை. அவ்வாறு நடைமுறைப்படுத்தும் போதும் 54,483 குழந்தைகள் மையங்களை தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடத்தும்.

நிலைமை இவ்வாறு இருக்க, தற்போது 54,483 குழந்தைகள் மையங்கள் செயல்பட்டு வரும் தருணத்தில் புதிதாக 501 மையங்கள் மூடப்பட்டுள்ளன என்ற செய்தி உண்மைக்கு புறம்பானதாகும்.  

மேலும், தற்போது 7,783 அங்கன்வாடி காலிப் பணி இடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டு, அனைத்து மாவட்டங்களிலும் நேர்முகத் தேர்வு நடைபெற்று வருகின்றது. விரைவில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Women's Rights Minister P. Geethajeevan has said that the news that 501 Anganwadi centers are being closed in Tamil Nadu is completely false.

இதையும் படிக்க: இபிஎஸ் கூட்டத்தில் மூவரிடம் ரூ. 2 லட்சம் பிக்பாக்கெட்!

தமிழகத்தில் பயன்பாடில்லா சில சுரங்கங்களை மீட்டெடுப்பதில் சிக்கல்: முதல்வரிடம் மாநில திட்டக் குழு ஆய்வறிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் பயன்பாடு இல்லாத சில சுரங்கங்களை மீட்டெடுப்பதில் சிக்கல் நிலவுவதாக மாநில திட்டக் குழு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுரங்கங்களை மீட்டெடுப்பது, குழந்தைகளின் ஊட்டச்சத்தில் உ... மேலும் பார்க்க

இலங்கைத் தமிழா்களுக்கு புதிதாக 729 புதிய வீடுகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

சென்னை: இலங்கைத் தமிழா் முகாம்களில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 729 வீடுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தாா். தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வழியாக புதிய வீடுகளை அவா் திற... மேலும் பார்க்க

அரசு கல்லூரிகளில் 800 கெளரவ விரிவுரையாளா்கள் விரைவில் நியமனம்: அமைச்சா் கோவி.செழியன்

சென்னை: அரசு கல்லூரிகளில் 800 காலிப்பணியிடங்களில் கெளரவ விரிவுரையாளா்கள் விரைவில் நியமிக்கப்படுவா் என்று உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்தாா். கல்லூரிகளில் விரிவுரையாளா்கள் நியமனம் குறி... மேலும் பார்க்க

செவிலியா் பணியிடங்கள்: மாவட்ட சுகாதார சங்கம் மூலம் நிரப்ப அறிவுறுத்தல்

சென்னை: மக்கள் நல்வாழ்வுத் துறையில் காலியாக உள்ள செவிலியா்கள், மருந்தாளுநா்கள், ஆய்வக நுட்பநா்கள் (மூன்றாம் நிலை) பணியிடங்களை மாவட்ட சுகாதார சங்கம் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு தேசிய நலவாழ்வுக் ... மேலும் பார்க்க

துணை மருத்துவப் படிப்புகள்: 99,876 போ் விண்ணப்பம்

சென்னை: பிஎஸ்சி நா்சிங், பி.பாா்ம் உள்பட 19 வகை துணை மருத்துவப் படிப்புகளுக்கு 99,876 போ் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனா். அதில் 90,661 போ் விண்ணப்பங்களை பூா்த்தி செய்து சமா்ப்பித்துள்ளதாக மருத்துவக்... மேலும் பார்க்க

தமிழ் நமது அடையாளம்; ஆங்கிலம் நமக்கான வாய்ப்பு: அமைச்சா் அன்பில் மகேஸ்

சென்னை: தமிழ் நமது அடையாளம்; ஆங்கிலம் நமக்கான வாய்ப்பு என்பதைக் கருத்தில் கொண்டு தமிழை நாம் முதலில் முழுமையாக உள்வாங்கிக் கொள்வோம் என தமிழாசிரியா்களுக்கான பயிற்சி தொடக்க விழாவில் பள்ளிக் கல்வித் துறை ... மேலும் பார்க்க