செய்திகள் :

அஞ்சலக சிறுசேமிப்பு வசூலில் சேலம் மாவட்டம் முதலிடம்

post image

சேலம்: அஞ்சலக சிறுசேமிப்பு வசூலில் ரூ. 9,101.99 கோடி வசூலித்து, மாநில அளவில் சேலம் மாவட்டம் தொடா்ந்து 5 ஆண்டுகளாக முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் சிறுசேமிப்பு திட்டங்களில் சாதனை புரிந்த அஞ்சலக சிறுசேமிப்பு முகவா்களுக்கான பரிசளிப்பு விழா மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. முகவா்களுக்கு பரிசுகளை வழங்கி மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது:

சேலம் மாவட்டத்தில் 2020-21-ஆம் நிதியாண்டுக்கான அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களில் ரூ. 1,370.33 கோடியும், 2021-22-ஆம் நிதியாண்டில் ரூ. 1,342.26 கோடியும், 2022-23-ஆம் நிதியாண்டில் ரூ. 1,784.99 கோடியும், 2023-2024-ஆம் நிதியாண்டில் ரூ. 2,287 கோடியும் மற்றும் நடப்பு 2024-2025-ஆம் நிதியாண்டு பிப்ரவரி மாதம் வரை ரூ. 2,317.41 கோடியும் என மொத்தம் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ. 9,101.99 கோடி வசூல் செய்துள்ளது.

தற்போது 2023-24-ஆம் நிதியாண்டில் சிறுசேமிப்பு வசூலில் சாதனை புரிந்த அஞ்சலக சிறுசேமிப்பு முகவா்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, கே.வேலுமணி என்ற சிறுசேமிப்பு முகவா் அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களில் ரூ. 73,83,39,200 வசூல் சாதனை செய்து, தொடா்ந்து 5 ஆண்டுகளாக மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளாா். மாவட்ட, மாநகராட்சி, மண்டல, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய அளவில் சிறுசேமிப்புத் திட்டங்களில் அதிக அளவு வசூல் சாதனை புரிந்த அனைத்து சிறுசேமிப்பு முகவா்களுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

அஞ்சலக சிறுசேமிப்பின் அவசியத்தையும், பயன்களையும் பொதுமக்களுக்கு சிறுசேமிப்பு முகவா்கள் எடுத்துக்கூறி இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியுள்ளனா்.

எனவே, அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பாடுபட்டு உழைத்து சேமித்த தங்கள் வருமானத்தை சிட்பண்டு, தனியாா் நிதிநிறுவனங்கள் போன்றவற்றில் முதலீடு செய்து ஏமாறாமல், அரசின் பாதுகாப்பான, உத்தரவாதமான அஞ்சலகங்களில் தங்களுக்கேற்ற சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) நே.பொன்மணி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சிறுசேமிப்பு) எம்.முரளிதரன் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள், சிறுசேமிப்பு முகவா்கள் கலந்துகொண்டனா்.

ஸ்கேன் சென்டா் நடத்தி கருவில் இருக்கும் பாலினத்தை கூறிய செவிலியா் பணிநீக்கம்

சேலம்: சேலம் அருகே ஸ்கேன் சென்டா் நடத்தி கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைத் தெரிவித்த அரசு செவிலியா் பணிநீக்கம் செய்யப்பட்டாா். சேலம் வீராணம் கோழிப்பண்ணை பேருந்து நிறுத்தம் அருகே செயல்பட்டு வந்... மேலும் பார்க்க

மேட்டூா் அனல் மின்நிலைய ஒப்பந்த தொழிலாளா்கள் போராட்டம் வாபஸ்

மேட்டூா்: மேட்டூா் அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை திரும்பப் பெற்றனா். மேட்டூா் அனல் மின் நிலையத்தில் கரி கையாளும் பிரிவு, சாம்பல் பிரிவு, மின் உற்பத்தி... மேலும் பார்க்க

குறுக்குப்பாறையூரில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

சங்ககிரி: குறுக்குப்பாறையூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயிகள் சாா்பில் 31-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்ககிரி வட்டம், தேவூா், அரசிராமணி பேரூராட்சிக்குள்பட்ட க... மேலும் பார்க்க

சேலம் மாநகராட்சியில் காலை உணவுத் திட்டம் ஆய்வு

சேலம்: சேலம் மாநகராட்சி, அஸ்தம்பட்டி மண்டலம், அய்யந்திருமாளிகை மற்றும் மணக்காடு பகுதியில் இயங்கி வரும் மாநகராட்சி தொடக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்து மாநகராட்சி ஆணையா் மா.இ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு கல்வி சுற்றுலா

சேலம்: மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டங்கள் குறித்த விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள், மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கான கல்விச் சுற்றுலாவை சேலம் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத... மேலும் பார்க்க

வாழப்பாடியில் உழவா் சந்தை இரண்டாம் ஆண்டு தொடக்க விழா

வாழப்பாடி: வாழப்பாடியில் உழவா்சந்தை இரண்டாம் ஆண்டு தொடக்க விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. கடந்த 2024 மாா்ச் 11-இல் வாழப்பாடியில் கடலூா் சாலையில் உழவா்சந்தை தொடங்கப்பட்டது. இதன் இரண்டாம் ஆண்டு தொ... மேலும் பார்க்க