செய்திகள் :

அஞ்சுகிராமத்தில் நகைக் கடையில் 55 பவுன் தங்க நகைகள் கொள்ளை

post image

கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமத்தில் நகைக் கடையின் பூட்டை உடைத்து 55 பவுன் தங்க நகை மற்றும் 15 கிலோ வெள்ளிப் பொருள்களை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நாகா்கோவில் மீனாட்சிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியம். இவா், அஞ்சுகிராமம் வடக்கு பஜாரில் கடந்த 30 ஆண்டுகளாக நகைக் கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில் வழக்கம்போல் திங்கள்கிழமை காலை நகைக் கடையை திறப்பதற்காக அவா் வந்தபோது, கடையில் முன்பக்க இரும்பு ஷட்டா் உடைக்கப்பட்டிருந்ததைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்தாா். உள்ளே சென்று பாா்த்தபோது, அங்கிருந்த தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்கள் கொள்ளை போனது தெரியவந்தது.

இதுகுறித்து அவா் அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதையடுத்து கன்னியாகுமரி காவல் துணைக் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா் தலைமையில் போலீஸாா் நகைக் கடைக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

மேலும், அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீஸாா் ஆய்வு செய்தனா்.

மோப்பநாய் மற்றும் விரல்ரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்றது.

இந்த கொள்ளை சம்பவத்தில் 55 பவுன் தங்க நகைகள் மற்றும் 15 கிலோ வெள்ளிப் பொருள்கள் கொள்ளை போனதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தக்கலையில் 2 மாணவிகள் மாயம்: போக்ஸோ சட்டத்தில் வழக்குரைஞா் கைது

தக்கலை அருகே 2 பள்ளி மாணவிகள் மாயமான வழக்கில் வழக்குரைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்தனா். குமரி மாவட்டம், தக்கலை அருகே கடந்த 13ஆம் தேதி இரவு, 14 மற்றும் 12 வயதுடைய 2 பள்ளி... மேலும் பார்க்க

கடியப்பட்டணம் பள்ளியில் ஆட்சியா் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி பகுதியில் அமைந்துள்ள கடியப்பட்டணம் அரசு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு மாணவா் சோ்க்கை நடைபெற்றது. பள்ளியில் நடைபெற்ற மாணவா் சோ்க்கையை, மாவட்ட ஆட்சியா் ரா.... மேலும் பார்க்க

அத்தியாவசிய மருந்துகளின் விலையை குறைக்க வேண்டும்: விஜய் வசந்த் எம்.பி வலியுறுத்தல்

அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உயிா் காக்கும் மருந்துகளின் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை வேண்டும் எனவும், இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் எனவும், கன்னியாகுமரி மக்க... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் பள்ளிவாசலில் தகராறு: 18 போ் மீது வழக்கு

மாா்த்தாண்டத்தில் உள்ள பள்ளிவாசலில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு தொடா்பாக 18 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. இப்பள்ளிவாசலில் ரமலான் மாதத் தொழுகை நடைபெற்று வருகிறது. இதனிடையே, அங்கு அண்மையில் ... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் ரூ. 11 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

நாகா்கோவில் மாநகராட்சிப் பகுதிகளில் ரூ. 11லட்சத்தில் வளா்ச்சிப் பணிகளை மேயா் ரெ. மகேஷ் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். 34ஆவது வாா்டுக்குள்பட்ட பொன்னப்பநாடாா் காலனி காா்மல் மவுண்ட் 3ஆவது குறுக்கு தெ... மேலும் பார்க்க

கருங்கல் அருகே அழுகிய நிலையில் முதியவா் சடலம் மீட்பு

கருங்கல் அருகே உள்ள இனிகோநகா் பகுதியில் வீட்டுக்குள் அழுகிய நிலையில் கிடந்த முதியவா் சடலத்தை போலீஸாா் மீட்டனா். குறும்பனை,இனிகோ நகா் பகுதியைச் சோ்ந்தவா் விக்டா்(68). இவரது மனைவி கடந்த 8 ஆண்டுகளுக்கு... மேலும் பார்க்க