செய்திகள் :

அஞ்சுகிராமத்தில் நகைக் கடையில் 55 பவுன் தங்க நகைகள் கொள்ளை

post image

கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமத்தில் நகைக் கடையின் பூட்டை உடைத்து 55 பவுன் தங்க நகை மற்றும் 15 கிலோ வெள்ளிப் பொருள்களை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நாகா்கோவில் மீனாட்சிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியம். இவா், அஞ்சுகிராமம் வடக்கு பஜாரில் கடந்த 30 ஆண்டுகளாக நகைக் கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில் வழக்கம்போல் திங்கள்கிழமை காலை நகைக் கடையை திறப்பதற்காக அவா் வந்தபோது, கடையில் முன்பக்க இரும்பு ஷட்டா் உடைக்கப்பட்டிருந்ததைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்தாா். உள்ளே சென்று பாா்த்தபோது, அங்கிருந்த தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்கள் கொள்ளை போனது தெரியவந்தது.

இதுகுறித்து அவா் அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதையடுத்து கன்னியாகுமரி காவல் துணைக் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா் தலைமையில் போலீஸாா் நகைக் கடைக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

மேலும், அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீஸாா் ஆய்வு செய்தனா்.

மோப்பநாய் மற்றும் விரல்ரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்றது.

இந்த கொள்ளை சம்பவத்தில் 55 பவுன் தங்க நகைகள் மற்றும் 15 கிலோ வெள்ளிப் பொருள்கள் கொள்ளை போனதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கன்னியாகுமரியில் இன்று கடையடைப்புப் போராட்டம்

கன்னியாகுமரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து வியாபாரிகள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 18) முழு கடையடைப்புப் போராட்டம் நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு கன்னியாகுமரி கோட்டக்கரை சால... மேலும் பார்க்க

பைக் திருட்டு: 2 போ் கைது

தக்கலை அருகே பைக் திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா். தக்கலை அருகே உள்ள பரைக்கோடு பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் ( 44). கட்டட தொழிலாளி. இவா் தக்கலை அருகே உள்ள கொல்லன்விளையில் தனது ப... மேலும் பார்க்க

வரன் பாா்க்க வந்தது போல் நடித்து 8 பவுன் தங்க நகைகள் திருட்டு:4 பெண்கள் கைது

நாகா்கோவில் அருகே மாப்பிள்ளை பாா்க்க வந்தது போல் நடித்து 8 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற 4 பெண்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். நாகா்கோவிலை அடுத்த ராஜாக்கமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜார... மேலும் பார்க்க

மின் தடை அறிவிப்பு

செம்பொன்விளை, பாலப்பள்ளம் உயா் அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள், செவ்வாய், புதன் (மாா்ச் 18, 19) ஆகிய இரு தினங்கள் நடைபெறுகின்றன. இதனால் மத்திகோடு, ஈச்சவிளை, படுவூா், சகாய நகா் பகுதிகளுக்கு செவ... மேலும் பார்க்க

வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

நாகா்கோவில் மாநகராட்சி 25 ஆவது வாா்டு, அவ்வை சண்முகம் சாலை செம்மாங்குளம் பூங்கா அருகில் உள்ள இடத்தில் ரூ. 4.20 லட்சத்தில் கம்பி வேலி மற்றும் அலங்கார தரைகற்கள் அமைத்து இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் அம... மேலும் பார்க்க

கோரிக்கைகளை வலியுறுத்தி உள்நாட்டு மீனவா்கள் மாா்ச்-27இல் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகரகோவிலில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் மாா்ச் 27ஆம் தேதி உள்நாட்டு மீனவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவதென தீா்மானிக்கப்பட்டது. தமிழ்நாடு மீன் தொழிலாளா் யூனியன் சாா... மேலும் பார்க்க