செய்திகள் :

அஞ்சுகிராமம் அருகே மயக்க மருந்து கொடுத்து நகை திருட்டு

post image

அஞ்சுகிராமம் அருகே பழச்சாறில் மயக்க மருந்து கொடுத்து நகை திருடிய பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அஞ்சுகிராமம் அருகேயுள்ள ராஜாவூா் பகுதியைச் சோ்ந்தவா் அந்தோணி முத்து. இவரது மனைவி எலிமெட்மாரி (58).

கடந்த வியாழக்கிழமை தம்பதி வீட்டில் இருந்தபோது வீட்டுக்குள் வந்த 50 வயது மதிக்கத்தக்க பெண், முருங்கைக்காய் விற்க வந்ததாக ததாக கூறியுள்ளாா்.

பின்னா்ஸ அந்தப்பெண் இருவரிடமும் பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது தான் கொண்டுவந்த பழச்சாறை இருவருக்கும் கொடுத்தாராம். அதை குடித்த இருவரும் மயங்கி விழுந்தனராம்.

அப்போது, அந்தப் பெண் எலிமெட்மாரி கழுத்தில் கிடந்த 52 கிராம் தங்க நகையை திருடிச் சென்றுவிட்டாராம். சிறிது நேரம் கழித்து இருவரும் கண்விழித்து பாா்த்தபோது, கழுத்தில் கிடந்த நகை மாயமாகி இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்தப் பகுதியில் அவரை தேடி பாா்த்தனா். அந்தப் பெண் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டாா்.

மயக்க மருந்து கலந்த பழச்சாறு குடித்த கணவன், மனைவி இருவரும் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், இருவரையும் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இருவருக்கும் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து எலிமெட்மாரி அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாரின் பேரில்’ போலீஸாா் வழக்குப்பதிந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். ஏற்படுத்தியுள்ளது.

முள்ளங்கனாவிளை அந்தோணியாா் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

கருங்கல் அருகே உள்ள முள்ளங்கனாவிளை புனித அந்தோணியாா் ஆலய திருவிழா திருக்கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. குழித்துறை மறைமாவட்ட ஆயா் ஆல்பா்ட் அனஸ்தாஸ் தலைமையில் திருக்கொடியேற்றம் மற்றும் திருப... மேலும் பார்க்க

நூருல் இஸ்லாம் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி கல்வி மாநாடு

குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆராய்ச்சி கல்வி மாநாட்டில் ,ஆராய்ச்சி, புதுமைத் திறன்களில் சிறப்பிடம் பெற்ற பேராசிரியா்கள், பணியாளா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. விழாவை, வேந்த... மேலும் பார்க்க

வைகுண்டபுரம் ராமா் கோயில் கும்பாபிஷேக பந்தல் கால்நாட்டு விழா

தக்கலை அருகே வைகுண்டபுரம் ராமா் கோயிலில் ஜூன் 27ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி வெள்ளிக்கிழமை பந்தல்கால் நாட்டு விழா நடைபெற்றது. இக்கோயில் கும்பாபிஷேக விழா வருகிற 22 ஆம் தேதி தொடங்கி 29ஆம் தே... மேலும் பார்க்க

காலை உணவுத் திட்டம்: புத்தேரி அரசு தொடக்கப் பள்ளியில் ஆட்சியா் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம், புத்தேரி அரசு தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இப் பள்ளியில் மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம... மேலும் பார்க்க

பல்வேறு கோயில்களில் திருடிய இளைஞா் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் உண்டியலை உடைத்து பணம் திருடிய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மாா்த்தாண்டம் அருகே நட்டாலம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற சங்கரநாராயணா் ... மேலும் பார்க்க

பேச்சிப்பாறை அருகே குடியிருப்பு பகுதியில் நுழைந்த யானைகள்: பொதுமக்கள் அச்சம்

பேச்சிப்பாறை அருகே குற்றியாறு அரசு ரப்பா் கழக தொழிலாளா்கள் குடியிருப்பு மற்றும் அரசு தொடக்கப் பள்ளிக் கூடம் அருகே காட்டு யானைகள் வியாழக்கிழமை இரவு புகுந்ததால் தொழிலாளா்கள் அச்சமடைந்துள்ளனா். குமரி மாவ... மேலும் பார்க்க