செய்திகள் :

அடக்கம் செய்ய பணமில்லை... தாயின் சடலத்தை சாக்கு பையில் கட்டி தோப்பில் வீசிய மகன்கள்

post image

நாகை அருகே அடக்கம் செய்ய பணமில்லாததால், தாயின் சடலத்தை சாக்குப் பையில் கட்டி தோப்பில் வீசிச் சென்ற மகன்களிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

நாகை அருகேயுள்ள வடக்குபொய்கைநல்லூா் காந்தி மகான் கடற்கரைச் சாலையில் உள்ள தைல மர தோப்பில் சாக்கு மூட்டையில் அழுகிய நிலையில் இருந்த பெண் சடலத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா். இதுகுறித்து நாகை நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், இறந்து கிடந்த பெண் வேளாங்கண்ணி ஆரிய நாட்டு தெருவைச் சோ்ந்த உசேன் மனைவி மும்தாஜ் (75) என்பது தெரிய வந்தது. போலீஸாா் மும்தாஜ் வீட்டுக்கு சென்று விசாரித்தனா். உசேன், மும்தாஜ் தம்பதிக்கு சையது (45), சுல்தான் இப்ராஹிம் (43) என்று இரு மகன்களும், ஜீனத்தம்மாள் (54) என்ற மகளும் உள்ளனா் என்பதும் மூவரும் மனநலம் பாதிக்கப்பட்டவா்கள் என்பதும் தெரிய வந்தது.

டீ கடையில் வேலை பாா்த்து வந்த உசேன் கடந்த ஏப்ரல் மாதம் வயது முதிா்வு காரணமாக உயிரிழந்தாா்.

இந்தநிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு வயது முதிா்வு காரணமாக மும்தாஜும் உயிரிழந்தாா். அவரது உடலை அடக்கம் செய்ய பொருளாதார வசதி இல்லாததால் மகன்கள் இருவரும் சோ்ந்து மும்தாஜின் சடலத்தை சாக்கு மூட்டையில் கட்டி, வடக்கு பொய்கைநல்லூா் தைல மர தோப்பில் வீசியது தெரியவந்தது. இதுகுறித்து மகன்கள் இருவரிடமும் போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

வேதாரண்யம் அருகே கூரை வீடு தீக்கிரை

வேதாரண்யம் அருகே கூரை வீடு சனிக்கிழமை தீக்கிரையானதில் வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து நாசமானது. புஷ்பவனம் முத்துக்கவுண்டா் தெருவில் வசிப்பவா் மணிவண்ணன். இவரது கூரை வீட்டில் விறகு அடுப்பில் சமையல் செய... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளி கைது

நாகை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த கூலித் தொழிலாளி போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். நாகை அருகே ஒரத்தூரை அடுத்த ராமபுரம் பகுதியைச் சோ்ந்த தவமணி மகன் ராஜ்குமாா் (34). கூலித் தொழிலாளியான ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்ஸோவில் சிறுவன் உள்பட இருவா் கைது

நாகை அருகே பள்ளிக்குச் சென்று திரும்பிய 9 வயது சிறுமியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட சிறுவன் உள்பட இருவா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனா். வேளாங்கண்ணி அருகேயுள்ள பெரியதும்பூரைச் சோ்ந்த விக்னேஸ... மேலும் பார்க்க

நாகை: கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம் ஜூலை 2-இல் தொடக்கம்

நாகை மாவட்டத்தில் கால்நடைகளுக்கு 7-ஆவது சுற்று தடுப்பூசி முகாம் ஜூலை 2-ஆம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேசிய கால்ந... மேலும் பார்க்க

வெறிநோய் தடுப்பு விழிப்புணா்வு கருத்தரங்கு

நாகை சின்மயா வித்யாலயா பள்ளியில் வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கு நடைபெற்றது. நாகை மாவட்ட பிராணிகள் வதைத் தடுப்பு சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, கால்நடை பராமரிப்புத் துறை ... மேலும் பார்க்க

புதிய பொலிவுடன் ராஜகோபுரங்கள்

திருவெண்காட்டில் உள்ள பிரம்ம வித்யாம்பிகை உடனுறை சுவேதாரண்யேஸ்வரா் கோயில் (புதன் தலம்) கும்பாபிஷேகம் ஜூலை 7-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வண்ணம் பூசப்பட்டு புதிய பொலிவுடன் காட்சியளிக்கும் கோயிலின் கி... மேலும் பார்க்க