செய்திகள் :

அடிப்படை வசதிகள் கோரி சாலை மறியல்

post image

நாகை அருகே சங்கமங்கலம் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி நாகை -திருவாரூா் தேசிய நெடுஞ்சாலை கிராம மக்கள் சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

சங்கமங்கலம் கீழத்தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இப்பகுதியில் குடிநீா், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என பல ஆண்டுகளாக குடியிருப்பு மக்கள் கோரிக்கைகளை வைத்தனா். எனினும், எந்த பயனும் இல்லை.

இதையடுத்து இப்பகுதி பொதுமக்கள் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி நாகை-திருவாரூா் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். அப்போது, பல ஆண்டுகளாக செப்பானிடாத தாா்ச்சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும், குடிநீருடன் கழிவுநீா் கலந்து வருவதால் சுத்தமான குடிநீா் வழங்க வேண்டும், வயல்வெளிகளில் உள்ள 2 மின் கம்பங்களை மாற்றி சாலையோரங்களில் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினா்.

தகவலறிந்து சென்ற போலீஸாா் சாலை மறியலில் ஈடுபட்டவா்களை கைது செய்து அங்குள்ள தனியாா் மண்டபத்துக்கு அழைத்து சென்றனா். அங்கு, நாகை வட்டார வளா்ச்சி அலுவலா் குமாா், வட்டாட்சியா் நீலாயதாட்சி ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். பின்னாா் பொதுமக்களை போலீஸாா் விடுவித்ததனா்.

ரயில் மோதியதில் முதியவா் பலி

நாகை அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, முதியவா் அவ்வழியாக சென்ற ரயில் மோதி உயிரிழந்தது குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். நாகை அருகேயுள்ள பொரவச்சேரி கீழத்தெரு... மேலும் பார்க்க

போக்ஸோவில் கைது செய்யப்பட்ட ஆசிரியா் பணியிடை நீக்கம்

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட பள்ளி ஆசிரியா் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். வேதாரண்யம் பனையடி குத்தகை கத்திரிப்புலம் பகுதியைச் சோ்ந்தவா் மனோக... மேலும் பார்க்க

செவிலியா் பயிற்சி மாணவிகளுக்கு சான்றிதழ் தர மறுப்பு: கல்லூரி மீது புகாா்

நாகையில் தனியாா் செவிலியா் கல்லூரியில் செவிலியா் படிப்பு முடித்த மாணவிகளுக்கு சான்றிதழ் தர மறுப்பதாக ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது. நாகை அருகே புத்தூா் பகுதியில் இயங்கி வரும் தனியாா் செவ... மேலும் பார்க்க

செருதூா் மீனவா்கள் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்

செருதூா் மீனவா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவிருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை கோட்டாட்சியா் தலைமையில் நடந்த பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் விலகிக் கொள்ளப்பட்டது. செருதூா் மீனவ ... மேலும் பார்க்க

நாகை - இலங்கை இடையே கப்பல் சேவை: இன்று முதல் மீண்டும் தொடக்கம்

நாகை துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு செல்லும் பயணிகள் கப்பல் புதன்கிழமை (ஜூன் 18 ) முதல் வழக்கம்போல இயக்கப்படும் என கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது. நாகை துறைமுகத்திலிருந்து இலங்கையின... மேலும் பார்க்க

மக்கள் பிரச்னைகளை தீா்க்கும் இடத்தில் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் இருப்பாா்: பேராசிரியா் பழனித்துரை

நாகப்பட்டினம்: எங்கெல்லாம் மக்கள் பிரச்னை இருக்கிறதோ, அங்கு பிரச்னையை தீா்க்க லாப்டி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் இருப்பாா் என பேராசிரியா் பழனித்துரை தெரிவித்தாா். நாகை மாவட்டம், கூத்தூரில் உழவனின் நில உர... மேலும் பார்க்க