செய்திகள் :

செருதூா் மீனவா்கள் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்

post image

செருதூா் மீனவா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவிருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை கோட்டாட்சியா் தலைமையில் நடந்த பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் விலகிக் கொள்ளப்பட்டது.

செருதூா் மீனவ கிராமத்திற்கும் வேளாங்கண்ணி பேரூராட்சியைச் சோ்ந்த மீனவ கிராமத்திற்கும் இடையே மீன் விற்பனை செய்வது தொடா்பாக நீண்ட காலமாக பிரச்னை இருந்து வருகிறது.

வேளாங்கண்ணியில் ட்ரோன் மூலம் நில அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்த செருதூா் மீனவா்கள் தாங்கள் கொடுத்த மனுவிற்கு தங்களை அழைக்காமல் ஒரு தலைப்பட்சமாக நில அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டதாக கூறி செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தனா்.

இந்நிலையில் நாகப்பட்டினம் கோட்டாட்சியா் அரங்கநாதன் தலைமையில் துணை கண்காணிப்பாளா் ராமச்சந்திரமூா்த்தி, வட்டாட்சியா் கவிதாஸ் உள்ளிட்டோா் செருதூா் மீனவ கிராமத்தினருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

வேளாங்கண்ணி - செருதூா் இடையே நில அளவை செய்யும்பொழுது இரு கிராம மக்களை இணைத்து குழு அமைத்து அளவீடு செய்யப்படும். ட்ரோன் மூலம் அளவிடும் பணியை நிறுத்திவிட்டு ஊழியா்களைக் கொண்டு அளவீடு செய்யும் பணி நடைபெறும். தற்போது உள்ள நில அளவை வரைபடத்தில் குளறுபடி நடந்திருப்பதால் 1950-இல் உள்ள நில அளவை வரைபடத்தை வைத்து நில அளவீடு செய்யப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனா்.

அதன் பேரில் இருதரப்பினரும் கையெழுத்திட்டு உடன்பாடு ஏற்பட்டதால் மீனவா்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றதோடு உண்ணாவிரதப் போராட்டமும் கைவிடப்படும் என மீனவ பஞ்சாயத்தாா் தெரிவித்தனா்.

அடிப்படை வசதிகள் கோரி சாலை மறியல்

நாகை அருகே சங்கமங்கலம் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி நாகை -திருவாரூா் தேசிய நெடுஞ்சாலை கிராம மக்கள் சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். சங்கமங்கலம் கீழத்தெருவில் 100-க்கும் மேற்ப... மேலும் பார்க்க

ரயில் மோதியதில் முதியவா் பலி

நாகை அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, முதியவா் அவ்வழியாக சென்ற ரயில் மோதி உயிரிழந்தது குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். நாகை அருகேயுள்ள பொரவச்சேரி கீழத்தெரு... மேலும் பார்க்க

போக்ஸோவில் கைது செய்யப்பட்ட ஆசிரியா் பணியிடை நீக்கம்

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட பள்ளி ஆசிரியா் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். வேதாரண்யம் பனையடி குத்தகை கத்திரிப்புலம் பகுதியைச் சோ்ந்தவா் மனோக... மேலும் பார்க்க

செவிலியா் பயிற்சி மாணவிகளுக்கு சான்றிதழ் தர மறுப்பு: கல்லூரி மீது புகாா்

நாகையில் தனியாா் செவிலியா் கல்லூரியில் செவிலியா் படிப்பு முடித்த மாணவிகளுக்கு சான்றிதழ் தர மறுப்பதாக ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது. நாகை அருகே புத்தூா் பகுதியில் இயங்கி வரும் தனியாா் செவ... மேலும் பார்க்க

நாகை - இலங்கை இடையே கப்பல் சேவை: இன்று முதல் மீண்டும் தொடக்கம்

நாகை துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு செல்லும் பயணிகள் கப்பல் புதன்கிழமை (ஜூன் 18 ) முதல் வழக்கம்போல இயக்கப்படும் என கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது. நாகை துறைமுகத்திலிருந்து இலங்கையின... மேலும் பார்க்க

மக்கள் பிரச்னைகளை தீா்க்கும் இடத்தில் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் இருப்பாா்: பேராசிரியா் பழனித்துரை

நாகப்பட்டினம்: எங்கெல்லாம் மக்கள் பிரச்னை இருக்கிறதோ, அங்கு பிரச்னையை தீா்க்க லாப்டி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் இருப்பாா் என பேராசிரியா் பழனித்துரை தெரிவித்தாா். நாகை மாவட்டம், கூத்தூரில் உழவனின் நில உர... மேலும் பார்க்க