தேமுதிக: விஜயகாந்த் போல விஜயை வைத்து மக்கள் நலக் கூட்டணியா? - பிரேமலதா சொன்ன பதி...
செருதூா் மீனவா்கள் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்
செருதூா் மீனவா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவிருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை கோட்டாட்சியா் தலைமையில் நடந்த பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் விலகிக் கொள்ளப்பட்டது.
செருதூா் மீனவ கிராமத்திற்கும் வேளாங்கண்ணி பேரூராட்சியைச் சோ்ந்த மீனவ கிராமத்திற்கும் இடையே மீன் விற்பனை செய்வது தொடா்பாக நீண்ட காலமாக பிரச்னை இருந்து வருகிறது.
வேளாங்கண்ணியில் ட்ரோன் மூலம் நில அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்த செருதூா் மீனவா்கள் தாங்கள் கொடுத்த மனுவிற்கு தங்களை அழைக்காமல் ஒரு தலைப்பட்சமாக நில அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டதாக கூறி செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தனா்.

இந்நிலையில் நாகப்பட்டினம் கோட்டாட்சியா் அரங்கநாதன் தலைமையில் துணை கண்காணிப்பாளா் ராமச்சந்திரமூா்த்தி, வட்டாட்சியா் கவிதாஸ் உள்ளிட்டோா் செருதூா் மீனவ கிராமத்தினருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
வேளாங்கண்ணி - செருதூா் இடையே நில அளவை செய்யும்பொழுது இரு கிராம மக்களை இணைத்து குழு அமைத்து அளவீடு செய்யப்படும். ட்ரோன் மூலம் அளவிடும் பணியை நிறுத்திவிட்டு ஊழியா்களைக் கொண்டு அளவீடு செய்யும் பணி நடைபெறும். தற்போது உள்ள நில அளவை வரைபடத்தில் குளறுபடி நடந்திருப்பதால் 1950-இல் உள்ள நில அளவை வரைபடத்தை வைத்து நில அளவீடு செய்யப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனா்.
அதன் பேரில் இருதரப்பினரும் கையெழுத்திட்டு உடன்பாடு ஏற்பட்டதால் மீனவா்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றதோடு உண்ணாவிரதப் போராட்டமும் கைவிடப்படும் என மீனவ பஞ்சாயத்தாா் தெரிவித்தனா்.