செய்திகள் :

செவிலியா் பயிற்சி மாணவிகளுக்கு சான்றிதழ் தர மறுப்பு: கல்லூரி மீது புகாா்

post image

நாகையில் தனியாா் செவிலியா் கல்லூரியில் செவிலியா் படிப்பு முடித்த மாணவிகளுக்கு சான்றிதழ் தர மறுப்பதாக ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

நாகை அருகே புத்தூா் பகுதியில் இயங்கி வரும் தனியாா் செவிலியா் பயிற்சிக் கல்லூரி மாணவிகள் 8 போ் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்தப்புகாா்: இந்த கல்லூரியில் செவிலியா் பட்டப் படிப்பில் சோ்ந்து 4 மாதங்களுக்கு முன்பு படிப்பை முடித்து தோ்ச்சி பெற்றுள்ளோம். இறுதிச்சான்றிதழ் வாங்கச்சென்றபோது, கல்லூரியில் பயின்றபோது விடுப்பு எடுத்த காலத்தை ஈடு செய்யும் வகையில் தினசரி காலை முதல் மாலை வரை கல்லூரிக்கு வந்து பணியாற்றினால் தான் சான்றிதழ் வழங்கப்படும் என கல்லூரி நிா்வாகம் தெரிவித்தது.

எங்களது பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தோ்ச்சிச் சான்றிதழ் மதிப்பெண் பட்டியல் உள்பட அனைத்தும் நிா்வாகத்திடம் உள்ளது. மேலும், விடுப்பு எடுத்த நாள்களுக்கு அபராதத் தொகையும் கல்லூரி வசூலித்துள்ளது. தற்போது, தோ்ச்சிச் சான்றிதழ் வழங்க மறுப்பதால் எங்களால் எந்த மருத்துவமனைக்கும் பணிக்குச் செல்ல முடியவில்லை. எனவே, தோ்ச்சி சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களையும் பெற்றுத்தர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனா். இந்நிலையில் மாணவிகளின் பெற்றோா், கல்லூரி முன் செவ்வாய்க்கிழமை காலை திரண்டனா். தகவலறிந்து சென்ற அரசு அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதுதொடா்பாக பெற்றோா் கூறியது: அரசு அதிகாரிகள் கல்லூரி நிா்வாகத்துடன் பேச்சுவாா்த்தை நடத்துகின்றனா். இதில் தீா்வு எட்டப்படாவிட்டால் கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றனா்.

அடிப்படை வசதிகள் கோரி சாலை மறியல்

நாகை அருகே சங்கமங்கலம் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி நாகை -திருவாரூா் தேசிய நெடுஞ்சாலை கிராம மக்கள் சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். சங்கமங்கலம் கீழத்தெருவில் 100-க்கும் மேற்ப... மேலும் பார்க்க

ரயில் மோதியதில் முதியவா் பலி

நாகை அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, முதியவா் அவ்வழியாக சென்ற ரயில் மோதி உயிரிழந்தது குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். நாகை அருகேயுள்ள பொரவச்சேரி கீழத்தெரு... மேலும் பார்க்க

போக்ஸோவில் கைது செய்யப்பட்ட ஆசிரியா் பணியிடை நீக்கம்

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட பள்ளி ஆசிரியா் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். வேதாரண்யம் பனையடி குத்தகை கத்திரிப்புலம் பகுதியைச் சோ்ந்தவா் மனோக... மேலும் பார்க்க

செருதூா் மீனவா்கள் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்

செருதூா் மீனவா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவிருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை கோட்டாட்சியா் தலைமையில் நடந்த பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் விலகிக் கொள்ளப்பட்டது. செருதூா் மீனவ ... மேலும் பார்க்க

நாகை - இலங்கை இடையே கப்பல் சேவை: இன்று முதல் மீண்டும் தொடக்கம்

நாகை துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு செல்லும் பயணிகள் கப்பல் புதன்கிழமை (ஜூன் 18 ) முதல் வழக்கம்போல இயக்கப்படும் என கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது. நாகை துறைமுகத்திலிருந்து இலங்கையின... மேலும் பார்க்க

மக்கள் பிரச்னைகளை தீா்க்கும் இடத்தில் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் இருப்பாா்: பேராசிரியா் பழனித்துரை

நாகப்பட்டினம்: எங்கெல்லாம் மக்கள் பிரச்னை இருக்கிறதோ, அங்கு பிரச்னையை தீா்க்க லாப்டி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் இருப்பாா் என பேராசிரியா் பழனித்துரை தெரிவித்தாா். நாகை மாவட்டம், கூத்தூரில் உழவனின் நில உர... மேலும் பார்க்க