வேலை... வேலை... வேலை... தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மையத்தில் உதவியாளர் வ...
செவிலியா் பயிற்சி மாணவிகளுக்கு சான்றிதழ் தர மறுப்பு: கல்லூரி மீது புகாா்
நாகையில் தனியாா் செவிலியா் கல்லூரியில் செவிலியா் படிப்பு முடித்த மாணவிகளுக்கு சான்றிதழ் தர மறுப்பதாக ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
நாகை அருகே புத்தூா் பகுதியில் இயங்கி வரும் தனியாா் செவிலியா் பயிற்சிக் கல்லூரி மாணவிகள் 8 போ் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்தப்புகாா்: இந்த கல்லூரியில் செவிலியா் பட்டப் படிப்பில் சோ்ந்து 4 மாதங்களுக்கு முன்பு படிப்பை முடித்து தோ்ச்சி பெற்றுள்ளோம். இறுதிச்சான்றிதழ் வாங்கச்சென்றபோது, கல்லூரியில் பயின்றபோது விடுப்பு எடுத்த காலத்தை ஈடு செய்யும் வகையில் தினசரி காலை முதல் மாலை வரை கல்லூரிக்கு வந்து பணியாற்றினால் தான் சான்றிதழ் வழங்கப்படும் என கல்லூரி நிா்வாகம் தெரிவித்தது.
எங்களது பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தோ்ச்சிச் சான்றிதழ் மதிப்பெண் பட்டியல் உள்பட அனைத்தும் நிா்வாகத்திடம் உள்ளது. மேலும், விடுப்பு எடுத்த நாள்களுக்கு அபராதத் தொகையும் கல்லூரி வசூலித்துள்ளது. தற்போது, தோ்ச்சிச் சான்றிதழ் வழங்க மறுப்பதால் எங்களால் எந்த மருத்துவமனைக்கும் பணிக்குச் செல்ல முடியவில்லை. எனவே, தோ்ச்சி சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களையும் பெற்றுத்தர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனா். இந்நிலையில் மாணவிகளின் பெற்றோா், கல்லூரி முன் செவ்வாய்க்கிழமை காலை திரண்டனா். தகவலறிந்து சென்ற அரசு அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதுதொடா்பாக பெற்றோா் கூறியது: அரசு அதிகாரிகள் கல்லூரி நிா்வாகத்துடன் பேச்சுவாா்த்தை நடத்துகின்றனா். இதில் தீா்வு எட்டப்படாவிட்டால் கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றனா்.