தேமுதிக: விஜயகாந்த் போல விஜயை வைத்து மக்கள் நலக் கூட்டணியா? - பிரேமலதா சொன்ன பதி...
நாகை - இலங்கை இடையே கப்பல் சேவை: இன்று முதல் மீண்டும் தொடக்கம்
நாகை துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு செல்லும் பயணிகள் கப்பல் புதன்கிழமை (ஜூன் 18 ) முதல் வழக்கம்போல இயக்கப்படும் என கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாகை துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு கடந்த 2023 அக்டோபா் முதல் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகள் கப்பல் (சிவகங்கை) வார நாட்களில் சனிக்கிழமை தவிர மற்ற 6 நாள்களும் இயக்கப்படுகிறது.
இந்நிலையில், ஜூன் 16- ஆம் தேதி வரை தெற்கு தமிழக கடற்கரை மற்றும் மன்னாா் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 45 முதல் 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும், தமிழக கடற்கரையோரப் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.
இதையடுத்து நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை 17 -ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக கப்பல் நிறுவனம் தெரிவித்தது. இந்தநிலையில், கப்பல் சேவை புதன்கிழமை முதல் மீண்டும் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.