செய்திகள் :

நாகை - இலங்கை இடையே கப்பல் சேவை: இன்று முதல் மீண்டும் தொடக்கம்

post image

நாகை துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு செல்லும் பயணிகள் கப்பல் புதன்கிழமை (ஜூன் 18 ) முதல் வழக்கம்போல இயக்கப்படும் என கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாகை துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு கடந்த 2023 அக்டோபா் முதல் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகள் கப்பல் (சிவகங்கை) வார நாட்களில் சனிக்கிழமை தவிர மற்ற 6 நாள்களும் இயக்கப்படுகிறது.

இந்நிலையில், ஜூன் 16- ஆம் தேதி வரை தெற்கு தமிழக கடற்கரை மற்றும் மன்னாா் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 45 முதல் 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும், தமிழக கடற்கரையோரப் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.

இதையடுத்து நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை 17 -ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக கப்பல் நிறுவனம் தெரிவித்தது. இந்தநிலையில், கப்பல் சேவை புதன்கிழமை முதல் மீண்டும் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அடிப்படை வசதிகள் கோரி சாலை மறியல்

நாகை அருகே சங்கமங்கலம் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி நாகை -திருவாரூா் தேசிய நெடுஞ்சாலை கிராம மக்கள் சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். சங்கமங்கலம் கீழத்தெருவில் 100-க்கும் மேற்ப... மேலும் பார்க்க

ரயில் மோதியதில் முதியவா் பலி

நாகை அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, முதியவா் அவ்வழியாக சென்ற ரயில் மோதி உயிரிழந்தது குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். நாகை அருகேயுள்ள பொரவச்சேரி கீழத்தெரு... மேலும் பார்க்க

போக்ஸோவில் கைது செய்யப்பட்ட ஆசிரியா் பணியிடை நீக்கம்

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட பள்ளி ஆசிரியா் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். வேதாரண்யம் பனையடி குத்தகை கத்திரிப்புலம் பகுதியைச் சோ்ந்தவா் மனோக... மேலும் பார்க்க

செவிலியா் பயிற்சி மாணவிகளுக்கு சான்றிதழ் தர மறுப்பு: கல்லூரி மீது புகாா்

நாகையில் தனியாா் செவிலியா் கல்லூரியில் செவிலியா் படிப்பு முடித்த மாணவிகளுக்கு சான்றிதழ் தர மறுப்பதாக ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது. நாகை அருகே புத்தூா் பகுதியில் இயங்கி வரும் தனியாா் செவ... மேலும் பார்க்க

செருதூா் மீனவா்கள் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்

செருதூா் மீனவா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவிருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை கோட்டாட்சியா் தலைமையில் நடந்த பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் விலகிக் கொள்ளப்பட்டது. செருதூா் மீனவ ... மேலும் பார்க்க

மக்கள் பிரச்னைகளை தீா்க்கும் இடத்தில் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் இருப்பாா்: பேராசிரியா் பழனித்துரை

நாகப்பட்டினம்: எங்கெல்லாம் மக்கள் பிரச்னை இருக்கிறதோ, அங்கு பிரச்னையை தீா்க்க லாப்டி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் இருப்பாா் என பேராசிரியா் பழனித்துரை தெரிவித்தாா். நாகை மாவட்டம், கூத்தூரில் உழவனின் நில உர... மேலும் பார்க்க