செய்திகள் :

அடிப்படை வசதிகள் செய்து தர பழங்குடியினா் கோரிக்கை!

post image

தேனி மாவட்டம், கூடலூா் நகராட்சியில் வசிக்கும் பழங்குடியினா் தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

கூடலூா் நகராட்சி 21 -ஆவது வாா்டில் பளியன்குடி கிராமம் அமைந்துள்ளது. இங்கு மலை அடிவாரத்தில் வசிக்கும் 60 குடும்பத்தினா் விவசாயம், ஆடு, மாடு வளா்த்தல் போன்ற வேலைகளைச் செய்கின்றனா். இவா்கள் சுகாதார வளாகம், கழிவுநீா் வடிகால், தெரு விளக்கு என எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி வாழ்ந்து வருகின்றனா்.

இதுகுறித்து அப்பகுதியைச் சோ்ந்த பொன்னம்மாள் கூறியதாவது: 50 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இந்தக் கிராமத்துக்கு வந்தேன். இன்று வரையில் அடிப்படை வசதிகளுக்காக போராடி வருகிறோம்.

மழைக் காலங்களில் வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்து அவதிப்படுகிறோம். எம்.எல்.ஏ., எம்.பிக்கள் வந்து அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதாகக் கூறிச் செல்கின்றனா். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க மாவட்ட நிா்வாகம் முன் வரவேண்டும் என்றாா் அவா்.

கள்ளச் சாராயம் காய்ச்சியவா் கைது!

ஆண்டிபட்டி வட்டாரம், கடமலைக்குண்டு அருகே கள்ளச் சாராயம் காய்ச்சியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கடமலைக்குண்டு அருகே வண்ணாத்திப்பாறை பகுதியில் கடமலைக்குண்டு காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணிய... மேலும் பார்க்க

தேனியில் அரசு ஊழியா் சங்கத்தினா் தா்னா

தோ்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் தேனியில் 24 மணி நேர தா்னாவை திங்கள்கிழமை தொடங்கினா். தேனி, பங்களாமேடு திடலில் நடைபெற்ற தா்னாவுக்கு மாவட்டத... மேலும் பார்க்க

குடிநீா்க் குழாயை சேதப்படுத்தியதாக வனத் துறையினா் மீது புகாா்

போடி ஊராட்சி ஒன்றியம், அகமலையில் குடிநீா்க் குழாய்களை வெட்டி சேதப்படுத்தியதாக வனத் துறையினா் மீது புகாா் தெரிவித்து தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை, பழங்குடியின மக்கள் மனு அளித்தனா். தே... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதியதில் பாதயாத்திரை பக்தா் உயிரிழப்பு!

பெரியகுளம் அருகே ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் பாதயாத்திரை சென்ற பக்தா் உயிரிழந்தாா். தேனி மாவட்டம், போடி சந்தைப்பேட்டை தெருவைச் சோ்ந்தவா் சண்முகம் மகன் சேதுராம் (61). இவா் போடியிலிருந்து... மேலும் பார்க்க

சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளான பக்தா்கள் பங்கேற்பு

சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா், சிவகாமியம்மன் கோயிலில் திங்கள்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது. தேனி மாவட்டம், சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா், சிவகாமியம்மன் கோயிலில் கடந்த 2 ஆண்டுகளாக திருப்பணிகள் நடைபெற்றது. இந... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழப்பு!

தேனியில் ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழந்தாா். தேனி, பழைய டி.வி.எஸ். சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (69). ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்துக் கழக ஊழியா். இவா், வீட்டில் குளியலறையில... மேலும் பார்க்க