செய்திகள் :

அடுத்தடுத்து மோசடி புகார்; வழக்குபதிவு - சிக்கலில் அதிமுக நிர்வாகி, தொழிலதிபர் ஆற்றல் அசோக் குமார்?

post image

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆற்றல் அசோக் குமார். இவரின் மாமியார் சரஸ்வதி மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏவாக இருக்கிறார். அசோக் குமாரும் ஆரம்பத்தில் பாஜகவில் இருந்த நிலையில், பிறகு அதிமுகவில் இணைந்தார்.

ஆற்றல் அசோக் குமார்

கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியை தழுவினார். அசோக் குமாரின் மனைவி கருணாம்பிகா, கடந்த சில நாள்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.  மறுபக்கம் அசோக் அடுத்தடுத்து மோசடி வழக்குகளில் சிக்கி வருகிறார்.

மோசடி வழக்கு

கோவையில் செயல்பட்டு வரும் தி இந்தியன் பப்ளிக் ஸ்கூல் நிர்வாகத்தின் நிர்வாக இயக்குநராக அசோக் செயல்பட்டு வந்தார். அசோக் அந்தப் பள்ளியின் ஒரு பங்கு தாரராக மட்டுமே இருந்தார். அதேநேரத்தில் போலி ஆவணங்கள் மூலம் முறைகேட்டில் ஈடுபட்டு, பள்ளிக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக அவர் மீது புகார் எழுந்தது.

ஆற்றல் அசோக்குமார்

இதையடுத்து அசோக் கடந்த மார்ச் மாதம் பள்ளியின் நிர்வாக இயக்குநர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். புதிய நிர்வாக இயக்குநராக பதவியேற்ற சிவசங்கரன் கோவை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் அசோக் மீது புகார் அளித்தார்.

அந்தப் புகாரில், “பள்ளி நிர்வாக பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பிறகும் அசோக் குமார், பள்ளிக்கு புதிதாக 45 பேருந்துகள் வாங்குவதற்கு வங்கிகளின் கடன் பெற்றுள்ளார். இதற்கு அவர் போலி ஆவணங்களை உருவாக்கியுள்ளார். மேலும் பேருந்துக்கு அதிக தொகையை செலவிட்டு பள்ளிக்கு நஷ்டம் ஏற்படுத்தியுள்ளார்.

கோவை

இப்படி பல்வேறு முறைகேடுகளால் அவர் ரூ.40 கோடிக்கு கையாடல் செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று கூறியிருந்தார். இதேபோல அசோக் மீது சில புகார்கள் எழுந்துள்ளன. அதனடிப்படையில் அசோக் மீது தனித்தனியாக 4 எஃப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆம்பூர்: கோயில் தூய்மைப் பணிக்கு வந்த பெண்ணிடம் அத்துமீறல் - அர்ச்சகர் மீது வழக்கு பதிவு

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன் (40). இவர் அங்குள்ள அறநிலையத்துறைக்குச் சொந்தமான நாகநாதசுவாமி திருக்கோயிலில் அர்ச்சகராக இருக்கிறார். இந்த நிலையில், அர்ச்சகர் தியாகராஜன்... மேலும் பார்க்க

சம்பள பாக்கியை கேட்ட டிரைவரை கத்தியால் குத்திய பாலிவுட் இயக்குநர்? - மும்பை போலீஸ் விசாரணை

பாலிவுட்டில் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் இருப்பவர் மணீஷ் குப்தா. இவரிடம் மொகமத் லஷ்கர் என்பவர் டிரைவராக இருந்தார். மூன்று ஆண்டுகள் டிரைவராக பணியாற்றி வந்த மொகமத்திற்கு இயக்குனர் மணீஷ் சரியான நேர... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: ஆன்லைன் ரம்மியில் பணம் இழப்பு; கண்டித்த கணவர் - கோபத்தில் மகளை கொன்று தாயும் தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம், பூவரசங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சரத்குமார் (28). இவர் சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீகா (24). இவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தத... மேலும் பார்க்க

சென்னை: 'தடாவில் தொடங்கிய 'வடை' தகராறு' - மயிலாப்பூரில் நடந்த கொலை முயற்சி; என்ன நடந்தது?

சென்னை, மயிலாப்பூர் பகுதியில் வசித்து வரும் நண்பர்களான 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் கடந்த 04.05.2025 அன்று இரவு வீட்டினருகே பேசிக் கொண்டிருந்தனர்.அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அப்பகுதியைச் சேர்ந்த ... மேலும் பார்க்க

சென்னை: லவ் டார்ச்சர்; இளம்பெண் வீட்டில் ரகளை - இளைஞரை கைது செய்த போலீஸ்!

சென்னை, வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அந்தப் பெண்ணின் மூத்த மகளை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த கோகுல்குமார் என்ற இளைஞர் காதலித்து வந்திருக்கிறார். அதற்... மேலும் பார்க்க

பீகாருக்கு மாற்றி அனுப்பப்பட்ட திருத்தணி தொழிலாளரின் சடலம்; மருத்துவர் இடமாற்றம்; பின்னணி என்ன?

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா அருகிலுள்ள பி. ஆர். பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). கூலித் தொழிலாளரான இவர், குடும்பத் தகராறில் மதுவில் விஷம் கலந்து குடித்தார்.அதனால் ராஜேந்திரனை அவர... மேலும் பார்க்க