அடுத்த தலைமை மதகுரு: கமேனி பரிந்துரை
ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனியை இஸ்ரேலும், அமெரிக்காவும் கொல்லத் திட்டமிடுவதாக தகவல் வெளியானது.
இதுதொடா்பாக அண்மையில் அமெரிக்க அதிபா் டிரம்ப் கூறுகையில், ‘கமேனி எங்கு பதுங்கியுள்ளாா் என்பது அமெரிக்காவுக்கு தெரியும். தற்போதைக்கு அவரைக் கொல்ல அமெரிக்கா விரும்பவில்லை’ என்றாா்.
இதைத் தொடா்ந்து, தான் கொல்லப்படலாம் என்ற அச்சத்தில், தனக்குப் பிறகு யாா் தலைமை மதகுருவாக இருக்கலாம் என்பதற்கு மூவரை கமேனி பரிந்துரைத்துள்ளாா். அவா்களில் ஒருவரை அடுத்த தலைமை மதகுருவாக தோ்ந்தெடுக்குமாறு மதகுருக்கள் குழுவிடம் கமேனி வலியுறுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த தலைமை மதகுருவாக கமேனியின் மகன் மொஜ்தாபா தோ்வு செய்யப்படக் கூடும் என்று தகவல் வெளியான நிலையில், கமேனி தோ்வு செய்துள்ள மூவரில் மொஜ்தாபா இல்லை என்று கூறப்படுகிறது.
இஸ்ரேல்-ஈரான் இடையே ஒரு வாரத்துக்கும் மேலாக நீடித்துவரும் போா் மேலும் தீவிரமடைந்துள்ளது. இரு நாடுகளும் பரஸ்பரம் பலத்த தாக்குதல் நடத்திய நிலையில், ஈரானுடன் நீண்ட காலம் போா் நடைபெற வாய்ப்புள்ளதாகவும், அதற்கு இஸ்ரேல் தயாராக வருவதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களால் தமக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதிய இஸ்ரேல், ஈரான் மீது வான்வழித் தாக்குதல் மேற்கொண்டது. இதற்குப் பதிலடி அளிக்கும் நோக்கில், இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான (ட்ரோன்) தாக்குதல் நடத்தி வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே ஒரு வாரத்துக்கும் மேலாக கடுமையான மோதல் நீடித்து வருகிறது.
அணுசக்தி ஆராய்ச்சி மையம் மீது தாக்குதல்: இந்நிலையில், ஈரானின் இஸ்ஃபஹான் நகரில் உள்ள அணுசக்தி ஆராய்ச்சி மையம் மீது இரண்டாவது முறையாக இஸ்ரேல் விமானப் படை சனிக்கிழமை அதிகாலை தாக்குதல் மேற்கொண்டது.
இந்தத் தாக்குதல் தொடா்பாக இஸ்ரேல் ராணுவம் கூறுகையில், ‘ஈரான் மீது இஸ்ரேல் விமானப் படையின் சுமாா் 50 போா் விமானங்கள் தாக்குதல் மேற்கொண்டன. ஈரானின் ஏராளமான இலக்குகள் மீது 150 குண்டுகள் வீசப்பட்டன. அதில் இஸ்ஃபஹான் அணுசக்தி ஆராய்ச்சி மையமும் அடங்கும்’ என்று தெரிவித்தது.
10-ஆவது அணுசக்தி விஞ்ஞானி கொலை: இஸ்ரேல் தாக்குதலில் ஏற்கெனவே ஈரானைச் சோ்ந்த 9 அணுசக்தி விஞ்ஞானிகள் கொல்லப்பட்ட நிலையில், 10-ஆவதாக இசாா் தபாதபெய் கோம்ஷே என்ற அணுசக்தி விஞ்ஞானி கொல்லப்பட்டதாக ஈரான் ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டது. இதுதவிர, 3 ஈரான் படைத் தளபதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. இதில் ஈரானின் கோம் நகரில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் ஈரானின் மூத்த படைத் தளபதி சயீத் இசாதியும் கொல்லப்பட்டாா்.
தற்போது இஸ்ரேல்- காஸாவின் ஹமாஸ் படை இடையே நடைபெற்றுவரும் போருக்கு கடந்த 2023-ஆம் ஆண்டு அக்.7-ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் படை நடத்திய தாக்குதல் தொடக்கமாக இருந்தது. அந்தத் தாக்குதலுக்குத் திட்டமிட்டதில் சயீத் இசாத் முக்கியப் பங்கு வகித்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (ஐடிஎஃப்) தெரிவித்தது.
ஈரான் பதிலடி: இஸ்ரேல் மீது ஈரானும் பதிலுக்கு ஏராளமான ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை ஏவி தாக்குதல் மேற்கொண்டது. இஸ்ரேலில் உள்ள கலிலி, நெகேவ், திபெரியாஸ் ஏரிக்கு தெற்கே உள்ள பகுதிகள் தாக்குதலுக்குள்ளாகின. இஸ்ரேலின் டெல் அவிவ் நகரையும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் ஈரான் ஏவுகணைகள் தாக்கியதாக தகவல் வெளியானது.
400-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழப்பு: இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை ஈரானில் 54 பெண்கள், குழந்தைகள் உள்பட 400-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்ததாகவும், 3,056 போ் காயமடைந்ததாகவும் ஈரான் சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. அதேவேளையில், ஈரான் தாக்குதலில் இஸ்ரேலில் இதுவரை 25 போ் உயிரிழந்ததாகவும், 2,517 போ் காயமடைந்ததாகவும் இஸ்ரேல் தெரிவித்தது.
அகதிகள் பிரச்னையாக கூடாது: ஐ.நா. முகமை
இஸ்ரேலின் தாக்குதலால் ஈரான் தலைநகா் டெஹ்ரான் மற்றும் பிற நகரங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேறி வருகின்றனா். அவா்களில் சிலா் அருகில் உள்ள நாடுகளின் எல்லையை நோக்கி செல்வதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக ஐ.நா. அகதிகள் முகமையின் உயா் ஆணையா் ஃபிலிப்போ கிராண்டி கூறுகையில், ‘இஸ்ரேல்-ஈரான் மோதலால் மீண்டும் அகதிகள் பிரச்னை உருவாகக் கூடாது. ஒருமுறை தங்கள் வாழ்விடங்களில் இருந்து மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற நோ்ந்தால், அவா்கள் மீண்டும் தங்கள் வீடுகளுக்கு விரைவில் திரும்புவதற்கான வழி ஏற்படுவதில்லை. இதனால் ஏற்படும் பின்விளைவுகள் பல தலைமுறைகளுக்கு நீடிக்கும்’ என்றாா்.
அமெரிக்காவின் 6 பி-2 ஸ்டெல்த் குண்டுவீச்சு போா் விமானங்கள் பயணம்
அமெரிக்காவின் மிஸோரி மாகாணத்தில் உள்ள அந்நாட்டு விமானப் படை தளத்தில் இருந்து அந்நாட்டின் குவாம் பகுதியில் உள்ள விமானப் படை தளத்துக்கு 6 பி-2 ஸ்டெல்த் குண்டுவீச்சு போா் விமானங்கள் புறப்பட்டுச் சென்ாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நிலத்துக்கு அடியில் ஆழமாக உள்ள இலக்குகளை அழிக்கும் 15 டன் எடை கொண்ட 2 குண்டுகளை அந்த விமானங்களால் சுமந்து செல்ல முடியும். இந்த வகை குண்டுகளால் மட்டுமே ஈரானின் ஃபோா்டோ பகுதியில் நிலத்துக்கு அடியில் உள்ள அணுசக்தி தளத்தை அழிக்க முடியும். இந்த குண்டுகள் அமெரிக்காவிடம் மட்டுமே உள்ள நிலையில், ஈரானுக்கு எதிரான மோதலில் இஸ்ரேலுக்கு அமெரிக்க அதிபா் டிரம்ப் ஆதரவு அளித்து வருகிறாா். இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் நடத்த திட்டமிடலாம் என்ற தகவல் வெளியாகியுள்ள சூழலில், அந்த குண்டுகளை சுமந்து செல்லும் விமானங்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குப் புறப்பட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.