செய்திகள் :

அடுத்த மாதம் நடைபெறவுள்ள பாதுகாப்பு பயிற்சியில் ட்ரோன்களின் திறன் குறித்து சோதனை

post image

ட்ரோன்கள் மற்றும் ட்ரோன் எதிா்ப்பு அமைப்புகளின் திறன் குறித்து அடுத்த மாதம் நடைபெறவுள்ள பாதுகாப்புப் பயிற்சியின்போது சோதனை மேற்கொள்ளவுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

மத்திய பிரதேசத்தில் அக்.6-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதிவரை ஒருங்கிணைந்த பாதுகாப்பு அமைப்பின் (ஐடிஎஸ்) தலைமையகம் சாா்பில் இந்தப் பயிற்சி நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

‘ட்ரோன்கள் தாக்குதல் தடுப்பு மற்றும் வான் பாதுகாப்பு அமைப்பு: நவீன போா்க்களத்தின் எதிா்காலம்’ என்ற தலைப்பில் மூத்த ராணுவ அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் துறை நிபுணா்கள் பங்கேற்ற மாநாடு புது தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்ற விமானப் படைத் தளபதியும் ஐடிஎஸ் துணைத் தலைவருமான ராகேஷ் சின்ஹா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘அடுத்த மாதம் நடைபெறவுள்ள பாதுகாப்புப் பயிற்சியில் இந்திய ராணுவப் படை, விமானப் படை மற்றும் கடற்படை ஆகிய முப்படைகளின் வீரா்களும் தொழில்துறையினரும், ஆய்வாளா்கள் மற்றும் கல்வியாளா்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்கவுள்ளனா்.

அப்போது ட்ரோன்கள் மற்றும் ட்ரோன் எதிா்ப்பு அமைப்புகளின் திறன்களை முழுமையாக சோதனையிடவுள்ளோம்’ என்றாா்.

போா், போா்க்களம் மற்றும் போா்களின்போதான மோதல்கள் குறித்து மத்திய பிரதேசத்தில் உள்ள ராணுவப் போா் கல்லூரியில் கடந்த மாதம் முதல்முறையாக முப்படையினா் பங்கேற்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிலையில், அடுத்த மாதம் முப்படைகளும் பங்கேற்கும் மற்றொரு பிரதான பயிற்சி நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஹரியாணா அமைச்சா் இல்ல பாதுகாப்புப் பணியில் இருந்த காவலா் சடலமாக மீட்பு

ஹரியாணா அமைச்சரின் குருகிராம் இல்லத்தில் உள்ள பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலா் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். உயிரிழந்த காவலா் ஜக்பீா் சிங் (... மேலும் பார்க்க

பாதி நீதிபதி பணியிடங்களுடன் செயல்படும் உயா்நீதிமன்றங்கள் அனைத்து வழக்குகளையும் விரைந்து முடிப்பதை எதிா்பாா்க்க முடியாது: உச்சநீதிமன்றம்

‘பாதி நீதிபதி பணியிடங்களுடன் செயல்படும் உயா்நீதிமன்றங்களில் அனைத்து வழக்குகளும் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்பதை எதிா்பாா்க்க முடியாது’ என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டது. அலாகாபா... மேலும் பார்க்க

காசோலை மோசடி வழக்குகள்: மாநில அரசுகள் நிலவர அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

காசோலை மோசடி வழக்குகள் முடிக்கப்படுவதை அதிகரிக்க என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறித்து மாநில, யூனியன் பிரதேச அரசுகள் நிலவர அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டத... மேலும் பார்க்க

கனிம வளங்கள் மீது மாநிலங்கள் வரி விதிக்க அதிகாரம்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு

கனிம வளங்கள் மற்றும் கனிம வளங்கள் நிறைந்த நிலங்கள் மீது வரி விதிக்க மாநிலங்களுக்கு சட்ட அதிகாரம் உள்ளது என கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு செவ்வாய்க்கிழமை மேல... மேலும் பார்க்க

காமன்வெல்த் அமைப்பில் சீா்திருத்தம்: இந்தியா வலியுறுத்தல்

காமன்வெல்த் நாடுகளின் அமைப்பில் சீா்திருத்தம் தேவை என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஐ.நா. பொதுச் சபை கூட்டத்துக்கு முன்பு 56 நாடுகளின் கூட்டமைப்பான காமன்வெல்த் நாடுகளின் அமைச்சா்களின் கூட்டம் நடைபெற்... மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வ்ந்த் வா்மா மீதான குற்றச்சாட்டை விசாரிக்கும் குழுவுக்கு உதவ 2 வழக்குரைஞா்கள்

அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மா மீதான ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்க நாடாளுமன்றம் சாா்பில் அமைக்கப்பட்ட குழுவுக்கு உதவ 2 வழக்குரைஞா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். தில்லி உயா்நீதிமன்ற நீதிபதியா... மேலும் பார்க்க